ஓம்நமசிவய!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
#*#*#*#*#
23.யாகத்தின் பலன்!
அக்னியில் பசு நெய் விட்டால் உடனடியாக சில வாயுக்கள் தோன்றும். அது காற்றில் கலந்து தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும். யாகசாலையில் இருப்போருக்கும் அருகில் சுற்றியிருப்போருக்கும் இந்த காற்று அவர்களது சுவாசத்தினால் உள்ளே சென்று பக்க விளைவுகள் இல்லாமல் அதிகப் படியான கொழுப்புச்சத்துகள் ஏற்படாமல் வேலை செய்யும். நெய் கலந்த அரிசி மற்றும் பொருள்களை யாகத்தீயில் போடும் போது இரசாயண மாற்றம் ஏற்பட்டு எத்தலீன் ஆக்ஸைடு, ப்ரொப்பிலின் ஆக்ஸைடு, பார்மால்டிஹைடு, ப்யூடா ப்ரோபியோ லாக்டான், அசெட்டிலின் போன்ற வாயுக்கள் தோன்றி யாகக் குண்டத்தை சுற்றி பரவும். இந்த வாயுக்களின் சுவாசம் உடலில் சில ஆரோக்கியத் தன்மைக்கு உகந்ததாக செயல்படும். மன உளைச்சல், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் புண், தலைவலி போன்றவைகளின் பாதகங்களை குறைக்கும் திறன் கொண்டவை. ஆல்பா அலைகள் உண்டாகி மூளை அழுத்தங்களை போக்கும். ஆகையால்தான் முன்னோர்கள் யாகம் வளர்த்து அந்த பலன்கள் மக்களுக்கு சேரவேண்டும் என நினைத்து செயல்பட்டுள்ளனர்.
பசு-விராட்டி!
வீட்டின் செடிகளில் பூச்சிகள் வந்தால் பெரியவர்கள் விராட்டி சாம்பலைத் தெளிப்பார்கள். அவைகள் போய்விடும். இதே சாம்பலை தொடை இடுக்கிலே வரும் ஸ்கின் பங்கஸ்க்கு தடவினால் அவைகள் இரண்டு மூன்று நாளில் சரியாகிவிடும்.
#*#*#*#*#