Print this page
புதன்கிழமை, 15 March 2023 09:46

பூஜை எப்படி செய்ய வேண்டும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.


#*#*#*#*#

 

29.பூஜை எப்படி செய்ய வேண்டும்!

 

எட்டு அங்குல உயரத்திற்குமேல் விக்ரகங்களை வீட்டில் வைத்து விக்ரக பூஜை செய்யக்கூடாது.

இறைவனை வழிபட பத்ரம்(இலை), பலம்(பழம்), புஷ்பம்(பூ), தோயம்(சுத்தமான நீர்) ஆகியவை கொண்டு எளிய முறையில் பூஜை செய்து இறைவனை வழிபட வேண்டும். இலை என்றால் சிவனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு துளசியும், அம்பாளுக்கு வேப்ப இலையும், கணபதிக்கு அருகம் புல்லும் என வரையறை செய்துள்ளார்கள். இவற்றைக்கொண்டு அந்தந்த தெய்வங்களை வீட்டில் பூஜை செய்தும் ஆலயத்தில் வழிபட்டும் பெரும் பலன்களை அடைந்துள்ளார்கள்.

பசுஞ்சாணியால் பூஜை நடத்தும் இடத்தை மெழுகி கோலமிட்டு ஸ்நானம் செய்த பின் முதலில் முதுகை துவட்டி பின் மற்றபாகங்களைத் துடைத்து விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, விளக்கேற்றி, புனித மந்திரங்களை ஜபித்து பிரதிமை என வழிபடும் சிலைக்கு நெய் முதலிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்வித்து நெய்வேத்தியத்தை படையலிட்டு தூப தீபம் காண்பித்து மனதால் நிறைவுடன் நினைந்து வழிபட வேண்டும். இனிய பாடல்களால் பாமாலை சூட்டி கண்களில் திருவடியை நிறைத்து சிந்தை முழுவதும் இறை எண்ணங்களை நிறைத்து செவியில் இறை கீர்த்தனைகளை மட்டும் கேட்கும்படி உடலும் உள்ளமும் ஒன்றி உயிர் உருக இறைவனை வழிபாடு செய்வது ஆகும்.

தூய்மையற்ற பொருட்களையோ மது, மாமிசங்களையே உண்டு பின்னர் பூஜை செய்யக்கூடாது. மாயான பூமியிலிருந்து வந்து பூஜை செய்யக்கூடாது. தூய்மையற்ற ஆடைகளை அணிந்து கொண்டோ அல்லது மற்றவர் ஆடைகளை அணிந்து கொண்டோ பூஜை செய்யக்கூடாது. கோபம் மற்றும் வெறுப்பு ஆகிய உணர்வுகளின்றி சாந்தமான அமைதியுடன் பூஜை செய்யவேண்டும்.

சாதாரண மனிதர்கள் தங்களின் துக்கங்களைக் குறைக்க, சுகத்தைப் பெருக்க வீட்டில் சாந்தி, போஷாக்கு பெற யாகங்கள் செய்யலாம். சுத்தமில்லாதவர்கள் வீட்டிலோ தீட்டு உள்ள வீட்டிலோ ஹோமம் செய்யக்கூடாது.

தெய்வ வழிபாட்டை செய்யாமல் இருப்பதும் தெய்வ நிந்தனை செய்வதும் மது அருந்துவதற்குச் சமம்.

காயத்திரி மந்திரம், ஓம் என்ற பிரணவ மந்திரம், ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம், ஓம் நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை உச்சரிப்பவனை எந்த பாவங்களும் அணுகாது. கடவுள்களுக்கு பிரியமான மந்திரத்தைக் கூறி மனதால் தியானிப்பது ‘மனோஸ்நானம்’ ஆகும்.

பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கப்படும் லுங்கிகள் அணியக்கூடாது. ஆண்கள் மேலாடையின்றி இடுப்பில் உடுத்தியிருக்கும் ஆடையின்மேல் ஓர் துண்டைக் கட்டிக்கொள்ளுதல் சிறப்பு.

துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி வழிபடுபவன் சொர்க்கம் செல்வான்.

கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் நித்ய பூஜைகள். அவைகள் கோவில்களின் நிதி நிலை வசதியைப் பொருத்து ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஆறு காலங்கள் என நடைபெறும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய விசேஷ காலங்களில் நடைபெறும் பூஜைகள் நைமித்திக பூஜைகள் எனப்படும்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க செய்யப்படுவது காம்யபூஜை.

Read 363 times
Login to post comments