ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#*#*#*#*#
42.எந்த மாதத்தில் என்ன செய்யலாம்!
சாந்த்ர-சுக்லபக்ஷம் பிரதைமுதல் அமாவாசை வரை சாந்த்ர மாதம் எனப்படும். சிரார்த்தம், திதி போன்ற தர்ம காரியங்களுக்கு சாந்த்ர மாதம் பயன்படும்.
சௌர-சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு போகும் வரையில் சௌர மாதம். விவாஹம் போன்ற சத் காரியங்களைச் செய்ய பயன்படும்.
சாவனம்-சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம்வரை சாவனம். 30 நாட்களைக் கொண்டது. வருடம் பூராவும் சாவன மாதம் வருகிறது. பிராயசித்தம், அன்னப்ராசனம், மந்திர உபாசனை, ராஜகிரஹம் போவதற்கு, வேள்வி ஆகியவற்றைக் கணிக்க சாவன மாதம் பயன்படும்.
நட்சத்திர- அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம்வரை நட்சத்திர மாதம். பித்ரு கணங்களின் காரியங்களைச் செய்ய நட்சத்திர மாதம் பயன்படும். பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகின்றதோ அதைக் கொண்டு அந்த மாதத்தின் பெயர் வைக்கப்படும்.
30 நாட்கள் முழுமையாக அமையாத மாதம் மல மாதம் எனப்படும். மல மாதங்களில் பிண்டம் கொடுக்கலாம். விவாகம், வேள்விகள் செய்யக் கூடாது. தீர்த்த யாத்திரை, தேவதரிசனம், விரத உபவாசம், சீமந்தம், ருதுசாந்தி, ராஜ்யாபிஷேகம் போன்ற சுப காரியங்களைச் செய்யலாம். பொதுவாக ஆடி, மார்கழி தவிர மற்ற மாதங்கள் விவாகம் நடத்திட ஏற்றவை. விரத ஆரம்பம், பிரதிஷ்டை, உபநயனம், மந்திரோபாசனை, விவாஹம், புதுமனை புகுவிழா, ஆகியவை தவிர்த்தல் நலம்.
30 க்கும் மேற்பட்ட நாட்கள் 31 / 32 இருந்தால் அந்த மாதம் புருஷோத்த மாதம் எனப்படும். 2 ½ ஆண்டுகளுக்கு ஒரு முறை 32 நாட்கள் வரும்.
#*#*#*#*#