Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:53

வணங்கும்முறை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

#*#*#*#*#

 

44.வணங்கும்முறை!

 

1.ப்ரதுதானா- எழுந்து நின்று வணங்கி வரவேற்பது.

2.நமஸ்காரா- நமஸ்தே / வணக்கம் என்று கூறி வணங்குதல்.

3.உபஸங்க்ரஹன்- பெரியோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதங்களை தொட்டு வணங்குதல்.

4.அஷ்டாங்க / ஸாஷ்டாங்க- இறைவன் மற்றும் பெரியோரின் முன்னே கால்கள், முழங்கால்கள், வயிறு, மார்பு, நெற்றி மற்றும் கைகள் நிலத்தில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல். ஆண்களுக்கு மட்டுமே உரியது. எட்டு அங்கங்கள் தரையில் படும்படி வணங்குவதாகும்.

5.ப்ரத்யபிவாதனா- பிறர் வணக்கத்திற்கு பதிலாக வணக்கம் கூறுதல்.

6.பஞ்சாங்கநமஸ்காரம்- இது பெண்களுக்குரியது. இறைவன் மற்றும் பெறியோர்களை நெற்றி, முழங்கால்கள் இரண்டு, பாத நுனிகள் இரண்டும் பூமியில் படுமாறு வணங்குதல்.
7.உத்தம நமஸ்காரம்- லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மந்திரங்களை உச்சரித்து இறைவனை மனதார வணங்குதல். மனிதன் தன் ஆத்ம இருப்பிடமான இதயத்திலிருந்து வணங்குவதாக ஐதீகம்.


#*#*#*#*#

Read 324 times
Login to post comments