Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:16

உற்பாதங்கள்-இடைஞ்சல்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

 

#*#*#*#*#

 

51.உற்பாதங்கள்-இடைஞ்சல்கள்!

 

 

இடைஞ்சல்கள் மூன்றுவகைப்படும். திவ்ய, அந்தரிக்ஷ, பௌமம் உத்பாதங்களின் விளைவு ஒருவார காலம் நீடிக்கும். இதற்கு பரிகாரமாக வேள்விகள் செய்யலாம். அப்படிச் செய்யாவிடில் உத்பாதங்களின் விளைவு நெடுங்காலம் நீடிக்கும்.

திவ்ய-தெய்வீகமாய் ஏற்படுபவை. கிரகம், நட்சத்திரம் ஆகியவற்றால் பயம் ஏற்பட்டு நடக்கக் கூடாது நடந்து விடுமோ என்ற சந்தேகம்

அந்தரிக்ஷம்- பூமியின் சுழற்சியால், இயற்கை பாதிப்பால் ஏற்படுபவை. எரி நட்சத்திரபாதை, திசைகளின் விபரீத சுழற்சியால் மண்டலங்கள் வானில் தோன்றுதல், சூரிய சந்திரர் ஒளியில் மாற்றங்கள், ஆகாயத்தில் கந்தர்வ நகரம் காணுதல், ஆதீத மழை அல்லது மழை இன்மை எல்லாம் அந்தரிஷம் எனப்படும்

பௌமம்- நீர் நிலைகள், மரங்கள், பூகம்பம், பூமி அதிர்வு, எரிமலை ஆகியன பூமியின் உத்பாதம். மின்னல் சமுத்திரத்திற்கு அடியில் ஏற்படும் நெருப்பு- வடவாமுகாக்னி திடீர் எழுச்சி, சர்ப்பங்கள் மேலேறி வருதல் எல்லாம் துர் நிமித்தங்கள். மேகத்திலிருந்து விழும் மழை பாறைகள் மீது விழுந்து கீழிறங்கி பிராணிகளுக்கு நஷ்டத்தைக் கொடுக்கும்.

#*#*#*#*#

Read 360 times
Login to post comments