Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:27

நிலத்தின் தன்மையை அறிவது எப்படி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!


#*#*#*#*#

 

54.நிலத்தின் தன்மையை அறிவது எப்படி!

 

பால், மலர், கிழங்கு, நீர் போன்ற மணம் வீசும் நிலம் / மண் பெரிய கட்டிடங்கள் கட்ட பயன்படும்.

புன்னை, ஜாதிமுல்லை, தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ, பசு போன்ற வாசம் வீசும் நிலங்கள் வீடு கட்ட உகந்தது.

தயிர். நெய், எண்ணெய், ரத்தம், மீன் போன்ற வாடை வீசினால் கட்டிடம் கட்ட விலக்கப்பட்ட நிலங்களாகும்.

மாயானம். பள்ளமான நிலம், யுத்தம் செய்த இடம், கோவில் புற்று இருந்த இடம் ஆகிய இடங்களில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

கோவில், கோவில் கோபுரம், அரசு, வன்னி, எருக்கு, வில்வம் ஆகியவற்றின் நிழல் விடுகளில் படக்கூடாது.

நிலத்தை கொத்தும்போது அல்லது குழி தோண்டும்போது யானை, குதிரை, மூங்கில். வீணை, சமுத்திரம் ஆகியன எழுப்பும் ஓசை கேட்டால் அந்த பூமி/ நிலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

புதிய விவசாய நிலத்தை உழுது தனியங்களை பயிர்செய்து, பயிர் விளைந்த நிலையில் பசுக்களைவிட்டு மேய விட்டால், பசுக்களின் சிறுநீர், கழிவுகள் மற்றும் வாயில் இருந்து வரும் நீர், நுரை ஆகியவை பூமியில் கலப்பதனால் அந்த பூமியின் சகல தோஷங்களும் நீங்கும். நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நிலத்தை வளப்படும்.

#*#*#*#*#

Read 438 times
Login to post comments