Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 19:32

இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மோதக விநாயகா போற்றி!
யாணை முகத்தனே போற்றி!
ரத்தின விநாயகா போற்றி!
ராஜகணபதியே போற்றி!


இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!


முப்புரங்களை அழிக்க சிவபெருமான் நினைத்தபோது விண்ணோர் அனைவரும் தங்களுடைய ஆற்றல்களுக்கு ஏற்ப உதவியாய் நின்றனர். சூரியனும் சந்திரனும் சக்கரங்களாய், பூமி தேராகவும், மேரு வில்லாகவும், கொண்டு போருக்குச் செல்லும்போது விநாயகர் வழிபாடு செய்யாததால் தேரின் அச்சு முறிந்தது. இந்நிலையில் திருமால் காளை (இடபம், விடை) வடிவங்கொண்டு சிவனைத் தாங்கி நின்றார். இந்நிலையே விடையேறுச் செல்வர் திருவடிவமாகும்.
சிவன் நின்றகோலத்தில் வலக்கால் நேராகவும் இடக்கால் சற்று வளைந்தும், வலக்கரத்தில் ஒரு விரல் தடிப்புள்ள மூன்று வளைவுகள் கொண்ட வச்சிரதண்டாயுதமும் பின்வலக்கரத்தில் உடுக்கை, இடக்கரத்தில் மானும் மழுவும், தலையில் சடாமகுடமும் அருகிலுள்ள தேவியின் வலக்கரத்தில் நீலோற்பல மலரும் இடக்கரம் தொங்கிய வாறும் இருக்கும். இந்தக் கோலவடிவமே சிவன் அடியார்களுக்கு காட்சி அருளி கருணையுடன் பாதுகாப்பு அளிப்பார். அம்மையும் அப்பனும் தருமத்திற்கே எந்தக் காலகட்டத்திலும் வெற்றியினை அருள்வார்கள் என்பதை நமக்கு நினைவு படுத்தும் வடிவம்-இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!. விடையேறிய விமலர் காட்சி: மதுரை, திருவாவடுதுறை,விராதனூர்(மதுரை)

&&&&&

Read 5612 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:20
Login to post comments