Print this page
புதன்கிழமை, 06 June 2018 12:51

பௌர்ணமி திதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

&&&&&

 

பௌர்ணமி திதி!

திதிக்குரிய விநாயகர்- நித்ய கணபதி, தர்ப்பைப் புல்லை நனைத்த நீரை அருந்தவும். பூர்ணிமா எனப்படும் இது சந்திரனின் நாள். அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்தவன் சந்திரன். உண்ணாமல் நோன்பு செல்வ வளம் கிட்டும். வானியல் ரீதியாக சில நட்சத்திரங்கள் சந்திரனோடு சேர்ந்து சில கதிர் வீச்சுகளை பூமியை நோக்கி வீசுகின்றன. பௌர்ணமி தினத்தன்று அந்த கதிர் வீச்சுகள் அதிகமாக இருக்கும். சித்திரையில் வரும் பௌர்ணமி-சித்ராபௌர்ணமி மிகவும் கீர்த்தி பெற்றது. ஏனெனில் அன்று சந்திரன் தனது 64 கிரணங்களையும் முழுமையாக வீசிப் பிரகாசிபார். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப் பூசம் ஆகிய நாட்களும் மிகச் சிறப்பானவை.

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம். உத்திரம் 2.3,4-ம் பாதங்கள் கன்னிராசிக்குரியது. கன்னி ராசிக்கு அதிபதி புதன் சூரியனோடு சேர்ந்து மீனராசியில் இருக்கும்போது புதனுக்கு உரிய கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தில் சந்திரன் அமைந்திருக்கும் நாளே பங்குனிமாத பௌர்ணமி தினம். சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பௌர்ணமி நாளன்று புதனும் சேர்ந்து கொள்வதால் பங்குனி உத்திர நாளுக்கு பல சிறப்புகள் உண்டாகின்றது.

சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கியபின் தைமாதத்தில் அவரது பலம் அதிகரிக்கும். குருவின் நட்சத்திரமான பூசத்தில் சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும்போது குரு, சந்திரன், சூரியன் ஆகியவரின் பார்வைகள்- கதிர்வீச்சுகள் முழுமையாக மக்களுக்கு கிடக்கும். அதுவே தைப்பூச நன்னாள்.

$$$$$

Read 16163 times Last modified on வியாழக்கிழமை, 29 October 2020 10:17
Login to post comments