Print this page
வியாழக்கிழமை, 07 June 2018 20:55

சந்திரன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

$$$$$

சந்திரன்!

உலகுக்கு மகிழ்ச்சி அளித்து அமுதைப் பொழிவதால் சந்திரன் என்று பெயர். பௌர்ணமி - சந்திரனின் நாள். அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்தவன் சந்திரன். ஸ்ரீலட்சுமிக்கு சகோதரன். உண்ணாமல் நோன்பு கடைபிடித்தால் செல்வ வளம் கிட்டும். நல்ல கீர்த்தியை தருபவர். சித்திரையில் வரும் பௌர்ணமி-சித்ராபௌர்ணமி மிகவும் கீர்த்தி பெற்றது. ஏனெனில் அன்று சந்திரன் தனது 64 கிரணங்களையும் முழுமையாக வீசிப் பிரகாசிப்பார். சந்திரன் மனைவி -ரோகினி,

சுக்ல பட்சத்தில் சந்திரனின் கிரணங்கள் விருத்தியடைவதற்கும் கிருஷ்ணபட்சத்தில் சந்திரன் கிரணங்கள் தேய்வடைவதற்கும் காரணம் சூரியனின் சக்தி ஆதாரம். சந்திரனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-வேப்ப மரம்

அத்ரிமா முனிவர் 3000 ஆண்டுகள் தவம் செய்ததன் பலனாக அவர் உடம்பு சோமரசமயமாயிற்று. தேவஸ்திரீகளை அழைத்த பிரம்மன் அவர் கண்களிலிருந்து வழியும் அந்த சோமபானத்தை அருந்துங்கள் கர்ப்பமாவீர்கள் என்றார். தேவ மங்கைகள் அந்த சோமபானத்தை எடுத்து அருந்தமுடியாமல் அதன் கனத்தை தாங்காமல் கீழே விட்டனர். கீழே விழுந்த அவை ஒன்றாக இனைய சோமன்-சந்திரன் உருவானதும் அவனை கீழே விடாமல் பிரம்மன் தன் தேரிலேற்றிக் கொண்டு உலகை 21 முறை சுற்றிவர ஔஷதிகள், வனஸ்பதி- தாவரங்கள் தோன்றி வளர்ந்தன. சந்திரன் தவம் செய்து தன் சக்தியைப் பெருக்கிக் கொண்டான். சந்திரன் மூலம் சிருஷ்டி தழைத்து பெருகுவதால்தான் மூலிகைச் செடிகளும் மருந்துவ செடிகளும் வளர்கின்றது. தாணியங்கள், உணவுப் பொருட்கள், காய் கறிகள் கிடைக்கின்றன.

ஒருவர் தெளிவான சிந்தனையுடன் மனக்குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு சந்திரனின் அமைப்பே காரணம். தட்சனின் 27 பெண்களை சந்திரன் மணந்தான். புராணங்கள் 27 நட்சத்திரங்களையும் கன்னியராகக் கொண்டு அந்த பெண்களின் கணவனாக சந்திரனை சொல்கின்றன. இதன் உட்பொருள் என்னவென்றால் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவரது மனம்தான் அவரது செயல்களைக் கட்டுப்படுத்துவதால் அந்த மனத்தினை செலுத்திடும் கிரகம் சந்திரன் எல்லோருக்கும் பொதுவானவன் என்று பொருள். ஒருவருடைய மதியை சந்திரனின் அமைப்புதான் தீர்மானிக்கின்றது என்பதை உணர்த்தவே சந்திரனை மதி என்று குறிப்பிடுகின்றோம்.

விதி வலியது! பிரம்மாவின் மகன் தேவர்குரு பிரகஸ்பதி மனைவி தாரை. மிகுந்த அழகுள்ளவள். நடந்தது. நடக்கவிருப்பது. வேதம், உபநிஷத்துக்கள் எல்லாம் அறிந்த பிரகஸ்பதி பிசாசு, மரம், செடி, கொடிகளின் பாஷைகளையும் அறிந்தவராவார். அவரிடம் சந்திரன் குரு கல்வி கற்றான். தேர்ச்சியடைந்தான். அதனால் யாகம் ஒன்று செய்தான். அதற்கு தன் குரு பிரகஸ்பதியை அழைத்தான். அவரால் செல்ல முடியாததால் தன் மனைவி தாரையை அனுப்பினால் சந்திரன் மகிழ்வான் என நினைத்து அனுப்பினார். குரு பத்தினி வருகைகண்டு பூரித்தவன் மரியாதையுடன் வரவேற்றான். யாகம் முடிந்ததும் அவரவற்கு அளிக்க வேண்டிய காணிக்கை தட்சனைகளை வழங்கினான். அதைப் பெற்றுக் கொண்ட தாரை சந்தரனின் தேஜஸ் கண்டு மதிமயங்கி திரும்ப போகாமல் சந்திரனை வசீகரித்து அவனுடன் தங்கி விட்டாள். சந்திரனும் தன் அழகால் மயக்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். பலநாட்கள் சென்றும் தாரை வரவில்லை. ஏன் என அனுப்பிய ஆட்களிடம் தான் வரவில்லை என தாரகை சொன்னாள். அவர்கள் சந்திரனிடம் கேட்டதற்கு அவள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள் என்றான். பிரகஸ்பதி மீண்டும் கேட்டும் திருப்பி அனுப்பவில்லை. எல்லாம் அறிந்தவராயிருந்தாலும் விதி வலியதாகும்போது என்ன செய்வது என மனம் நொந்த பிரகஸ்பதி பலசேத்திரங்கள் சென்று சிவனை வழிபட்டு பெருஞ்சேரி வந்தார். பஞ்சாட்சார மந்திரம் ஜபித்து தவம் செய்தார். சுவந்திரநாயகியை லிங்கத்தின் வடகிழக்கு மூலையில் ஸ்தாபித்து வழிபட்டார். ஒரு மாதம் பழம் மட்டும், பின் இரண்டு மாதம் பால், பின் அதுவுமின்றி நீர் மற்றும் காய்ந்த சருகுகளை உண்டு 12 ஆண்டுகள் தவம் செய்தார். பின் தன்னைச் சுற்றி அக்னி மூட்டி வழிபட தோன்றிய சிவனிடம் தன் சீடன் தன் மனைவியை பறித்ததை சொன்னார். சிவன் நினைக்க சந்திரன் அங்கு தோன்றினான். நடந்ததை அறிந்த சிவன், நீ உடனே தாரையை விடுவிப்பாய் என்றார். பிரம்மா சந்திரன், தாராவுடன் பேசி தாராவை பிரகஸ்பதியிடம் சேர்க்கும்போது தாரா கருவுற்றிருக்க பிரகஸ்பதி அந்த கருவை விட்டுவரச் சொல்ல தாரா அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுச் சென்றாள். அந்தக் கரு வளர்ந்து சந்திரனைப் போல அழகுடன் விளங்க அதற்கு புதன் என்று பெயரிடப்பட்டு தவம் செய்து கிரகங்களுள் ஒன்றாக பதவி பெற்றான். தாரைமேல் தவறு இருப்பதால் சந்திரனை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை என குரு பிரகஸ்பதி சந்திரனை மன்னித்தார்.

மனச் சோர்வு, மனக்குழப்பங்கள், தாயாருடனும் தாய்வழி உறவுகளுடனும் சுமூக உறவு இல்லாமை, தாயரின் உடல்நிலை பாதிப்பு, சிறுநீர உபாதை, ஜலதோஷம், சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதற்கு சந்திர தோஷம் காரணமாகும். சிவனும் பார்வதியும் இனைந்த அர்த்தநரீஸ்வரரி வணங்குவது- திருச்செங்கோடு, சிவனும் பார்வதியும் ஒன்றினைந்து இருக்கும் நாளான பௌர்ணமியன்று சிவபூஜை செய்வது சிறப்பு.

கிரகத்தின் பெயர்: சந்திரன்
உரிய மலர்: வெள்ளரளி
உரிய மரம்: வேப்ப மரம்
தானியம்: பச்சரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
ரத்தினம்: முத்து
கிழமை: திங்கள் கிழமை
திசை: தென்கிழக்கு
உலோகம்: ஈயம்
நிறம்: வெள்ளை
சமித்து: முருங்கை
வழிபடும் பலன்கள்: தடங்கள்கள் நீங்கி முன்னேற்றம்

நவகிரக சந்திர பகவான் காயத்திரீ-(மனம் ஒரு நிலைப்பட, சோம்பல் விலக)
”ஓம் பத்வ த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம பிரசோதயாத்”
(குறைகள் தீர்க்கும் திங்களே, தாமரை மலரைத் தாங்கி தரணியெங்கும் தண்னொளி தருபவனே, தாழ்விலா மனம் தரும் தண்ஒளி மதியே போற்றி.)

$$$$$

Read 19197 times
Login to post comments