Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:29

சக்திபீடம்-48-ஸ/ஸம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-48-ஸ/ஸம்

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-48 

அட்சரம் ஸ/ஸம்(முப்பத்திரண்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)

தோன்றிய இடம் பஞ்சாப் மாநிலம்-விஸ்வாமுகி
அட்சரதேவிகள் சரஸ்வதிதேவி/ சித்தக்ரியாதேவி
அங்கம் இடதுஸ்தனம் 
பைரவர்/இறைவன் பீஷணர்
அங்கதேவி/ இறைவி திரிபுரமாலினி
பீடங்கள் ஹிரண்யபுராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் வலது கால் நுனிவிரல்வரை
ஊர் ஜலந்தர்/ஜாலந்தர்
அருகில் கூர்ஜரம்
மாகாணம்/நாடு பஞ்சாப்

இது ஸ்ரீமகாலட்சுமிபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு சர்வ சித்தி அடையலாம். இந்த ஆலயத்தை தேவி தலாப்- தேவி குளம் என அழைக்கின்றார்கள். பெரிய ஏரியாக இருந்தது சுருங்கி தற்போது குளம் ஆனது.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

இளஞ் சிவப்பு நிறமேனியில் சிவப்பு நிற ஆடை அணிந்து வலது கரங்களில் சின்முத்திரை, அபய முத்திரை, இடது கரங்களில்- தாமரை மலர், வர முத்திரயுடன் வெண் தாமரை மலரில் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
ஸித்த க்ரியா ஸகா ராக்யா ஸிதாம் புஜ நிவாஸிநீ
பாடலாபா கரைர் தத்தே சிதம்புஜ வரபயாந்:

#####

Read 14157 times
Login to post comments