Print this page
வியாழக்கிழமை, 04 April 2019 19:33

அம்மன்கள்-108

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#*#*#*#*#

அன்பளிப்பு! 

ஒருவருக்கு ஒருவர் கொடுகும் லஞ்சத்தை கீழ்கண்ட பெயர்களில் கூறினாலும் பொதுவாக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு! குற்றம்!. தண்டனைக்குரியது. என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை,
அன்பளிப்பு,
நல்லெண்ணம் பரிமாறல்,
வாழ்த்துக்கள்
வெற்றிபெறுவதற்காக
பழிவாங்க
ஜென்ம கடனை திரும்ப செலுத்துதல்
இயற்கை சமன் (நாம் வாங்கிய லஞ்சத்திற்கு)

ஒருவருக்கு ஒருவர் பணம் கொடுத்தால் அது ஒன்று வட்டியில்லா கடனாக அல்லது வட்டியுடன் கூடிய கடன் அல்லது லஞ்சமாகத்தான் இருக்க முடியும்.

மனிதனுக்கு மனிதன் பொருளோ அல்லது பணமோ கொடுத்தால், உறவாயிருந்தாலும் சரி, நண்பர்களாயிருந்தாலும் சரி, மூன்றாவது நபராக இருந்தாலும் சரி அவரவர் சூழ்நிலை, எதிர்பார்ப்பு இவைகளைக் கணக்கில் கொண்டுதான் அன்பின் மிகுதியால் கொடுக்கப் படுகின்றதா அல்லது மறைமுக எதிர்பார்ப்புடன் கொடுக்கப் படுகின்றதா என தீர்மானிக்க முடியும்,

அன்பு என்ற ஓர் காரணத்திற்காக கொடுக்கப்பட்டாலும், அதே காரணத்திற்காக பெறப்பட்டாலும் காலங்கள் மாறும்போது சூழ்நிலை உறுவாகும்போது ஒருவன் செயலை மற்றவன் நினைத்துப் பார்த்து அவன் இப்படிப்பட்டவன், இவ்வளவு அன்பு காட்டியுள்ளான், இதுகாறும் ஏதும் செய்ய வில்லை. இனியாவது அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும், இப்போதைக்கு அவன் கேட்காமலேயே இந்த உதவியாவது செய்யலாம் என்ற ஓர் எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. என்றோ எதற்கோ பெறப்பட்டதிற்கு பிரதி பலன் வேறு முறையில் திருப்பி செலுத்தப் படுகின்றது- இது ஒருவகை.

ஒரு சின்ன குழப்பத்தில் ஆழ்த்தி அவனுக்கு பணம் கொடுத்து விவகாரத்தில் மாட்டி வைப்பது ஒரு வகை பழி வாங்குதல்.

ஒருவனை சந்தோஷத்தில் பணம் கொடுத்து வாழ்த்துவது ஒருவகை

ஒருவனை வேதனையில் வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு சபிப்பது ஒரு வகை.

இவையெல்லாம் ஏன்! எதற்காக!`

லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும்! எதற்காக கொடுக்க வேண்டும்!

ஒருவனுக்கு ஓரிடத்தில் ஓர் செயல் நடக்க வேண்டும் என்றால் நடக்க இருக்கும் காரியத்தின் தன்மை, அதனால் கிடைக்கும் பலன் இவைகளைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டு பிரதியாகப் பணம், பொருள், மது, பெண்ணாகக் கேட்கப் படுகின்றது. இவனால் அந்தக் காரியத்தை செய்து முடிக்க அவனுக்கு என்ன லாபம் என்று வரையறுக்கப் பட்டு ஏதாவது ஒன்றாக கொடுக்கப் படுகின்றது.

முதலில் தொடர்பு கொண்டு இந்த பரிவர்த்தனையை நட்புடன் ஆரம்பிக்க, வாங்க காபி அல்லது தேநீர் அருந்திக் கொண்டே பேசலாம் என்ற அழைப்பு. பின் ஷேம நலன்கள், ஊர் முறையில் அல்லது ஜாதி முறையில் ஏதாவது ஓர் முறையில் ஒருவரை ஒருவர் நெருங்க முயற்சி. நெருங்கிய வட்டத்திற்குள்தான் எல்லாம் விரிவாக பேச முடியும் என்பதால் எல்லா விபரங்களையும் கேட்டு எப்படியாவது இரு பாலரும் அந்த குறுய வட்டத்திற்குள் நுழைய பிடிவாதம் பிடிக்கின்றனர். அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று புகழ் பாடி ஏதாவது ஓர் தொடர்பை ஏற்படுத்தி அரசியல் நிலை, காலப் போக்கு, சூழ்நிலை இவைகளை பேச்சுத் திண்ணைபோல் பரிமாறி.. இன்றைய சூழலில் செலவின்றி ஏதும் செய்ய முடியாது. அவருக்கு இவருக்கு என்று கணக்குச் சொல்லி ஒருமித்த கருத்தடைவர்.

இருவரும் சமரசம் ஆகி ஓர் நிலையில் இந்த வேலை செய்து முடிக்க என்ன தருவாய்! என்ற கேள்வி வரும்.. அவர் அந்த வேலையைச் செய்வதற்கு நிர்வாகம் ஊதியம் தந்தாலும் அவருடைய ஆசைக்கு பேராசைக்கு பணம் பற்றாக் குறையாக இருப்பதால் அல்லது அவன் ஆடம்பரச் செலவு செய்வதற்கு தேவையாக இருப்பதால் இந்தக் கேள்வி. இது மற்றயவருக்கும் தெரியும், இந்த வேலையைச் செய்வதற்குத்தான் அவன் சம்பளம் பெறுகின்றான் என்று. இருந்தாலும் தனக்கு வேறு வேலை இருப்பதாலும் மீண்டும் மீண்டும் அலைய முடியாது என்பதாலும் கேட்பதை கொடுத்து தொலைத்து விடலாம். நமக்கு காரியம் ஆனால் சரி. இல்லையென்றால் ஏதாவது கேள்விகேட்டு இழுத்தடிப்பான் என்று நினைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதவரைப் போல நான் என்ன செய்ய வேண்டும் என்பார்.

சரியாக நம் வழிக்கு வந்து விட்டார் என கணக்கிட்டு எல்லோருக்கும் தரவேண்டும் மீதிதான் எனக்கு என்று கிம்பளம் வாங்காத ஆட்களையெல்லம் சொல்லி கணக்கிட்டு ஒரு தொகையைச் சொல்வார். அந்தத் தொகையைக் கேட்டதும் பகீர் என்றிருக்கும் கேட்டவருக்கு. இவ்வளவா! என்பார். அதற்கு இதே போன்ற ஒரு கேஸிற்கு முன்பு இவ்வளவு வாங்கினோம். நீங்கள் மிகவும் பழகி விட்டீர்கள். முன்பு பேசியதில் ஏதாவது உறவு ஒன்றைச் சொல்லி, அதனால் உங்களுக்காக நான் பெரும் தொகையை குறைத்துக் கொண்டுதான் சொல்லியுள்ளேன் என்று ஒரு அற்புதமான விளக்கமான பதிலை தருவார்.

வேறு வழியில்லாமல் சில்லரையாக உள்ள ஐம்பது அல்லது நூறைக் குறைத்துக் கொண்டு தருகின்றேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துவிட்டு கொஞ்சம் முன் பணமாக கொடுத்துவிடுவார். பின் இரண்டு நாட்கள் கழித்து மீதி பணத்தையும் கொடுத்து விட்டு அவனிடமிருந்து காரியம் முடிந்து பெறும்வரை நடப்பார். அவனும் இதே முடிந்துவிட்டது. அங்கு பைல் இருக்கின்றது. அவரிடம் கையெழுத்து வாங்க வெண்டும் என்று எதையாவதைச் சொல்லி இழுத்தடித்து மிகவும் கஷ்டப்பட்டு காரியத்தை முடிப்பது போல பாவலா செய்து விட்டு உங்களுக்காகத்தான் இவ்வளவு சிரமப்பட்டு சீக்கிரம் முடித்து தந்துள்ளேன் என்று கூறுவான். நபர் மிகவும் நம்பிவிட்டால் எனக்கு கொஞ்சம் சேர்த்து தாருங்கள் என்று மேலும் ஒரு சிறியதிற்கு ஆசைப்பட்டு பேசுவான். அவனின் அந்த ஆசை தீருவது இவரின் ஏமந்த நிலையைப் பெறுத்தது.

அப்பாடா ஒருவழியாய் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டார்கள் இதில் ஏது லஞ்சம் எனக் கேட்போர் கேட்கலாம். அவர்கள் இருவரும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பெறவேண்டியதை பெற்றுக் கொண்டேன் என்றும், பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு தரவேண்டியதை தந்துவிட்டேன் என்று சொல்வார்களா! எப்படிச் சொன்னல் என்ன! காரியம் சிக்கலின்றி இனிது முடிந்தது.

என்ன தருவாய்! என்ன வேண்டும் என்ற பேரத்தில் ஆரம்பித்து இன்ன இன்ன பிரச்சனைகள் யார் யாருக்கு பங்கு என அலசப்பட்டு நாளொரு தேதியும் ஒவ்வொரு செயலுக்கும் விலை நிர்ணயிக்கப் படுகின்றது. காரியங்கள் ஒழுங்கு முறையின்றி வரிசை ஒழுங்கு முறையின்றி மாறி நடத்தப்பட்டு விரைவாக முடிக்க அதைப் பெற்று முடித்து வைக்கப் படுகின்றது.

இந்த முறையில்லையேல் இந்தக் காரியம் நடந்திருக்க முடியாது. இவ்வளவு நாள் ஆனாலும் செலவானாலும் பரவாயிலை காரியம் நடந்தேறியதே என்ற மகிழ்வு ஓர்புறம். சம்பளம் பெற்றுக் கொண்டு முறைப்படி செய்ய வேண்டிய வேலையை முறையின்றி பெற வேண்டியதை பெற்று ஒழுங்கு முறை தவறி செய்து கொடுத்ததால் அடைந்த பணப்பயன் புற சந்தோஷங்களுக்கு பயன் படுகிறது என்கிற அளவிலா ஆனந்த சந்தோஷம் மறுபுறம்.

இவைகள் உண்மையான சந்தோஷங்களா. இது நீடித்து நிலைக்குமா! என்று தெளியும் இந்த சந்தோஷ மோகம்! யார் அறிவார்! இறைவனன்றி!---குருஸ்ரீபகோரா.

#####

Login to post comments