Print this page
வெள்ளிக்கிழமை, 05 April 2019 08:34

ஒதுக்கீடு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !
#*#*#*#*#

ஒதுக்கீடு!

பிறப்பால் ஒதுக்கீடு அளிப்பது முற்றிலும் சரியில்லை. மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வாய்ப்புக்கள் கிட்ட தாம் இந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! அந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! என ஏங்கும் நிலை. இதற்காக பொய் கூறி பிறப்பை மாற்றி சான்றிதழ் பெறும் அவல நிலை

சமுதாயத்தில் சமமான நிலைக்காக தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள அனைவரும் மேம்பாடு அடைய ஓர் ஊக்கம் தர வேண்டியது அவசியம் அனைவரின் கடமை. அதன் முகத்தான் அரசும் மற்றையோரும் படிப்பிற்கும், முதல் வேலை வாய்ப்புக்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் செயல்பட சட்டங்களைத் திருத்துவதில் தவறில்லை.

இதையே எல்லா நிலைகளிலும் பயன்படுத்துவது ஓர் போட்டி, பொறாமை உணர்வுகளை மற்ற்வர்களிடையே தோற்றுவிக்க வழி வகுக்கும். வேலை வாய்பிற்குப்பின் ஊக்குவிப்பு என்றபெயரில் அடுத்த நிலை தருவது சரியில்லை. அந்நிலை அடைந்தோர் எந்தவிதத் திறமையையும் வெளிபடுத்தா நிலையில் பிறப்பால் தனக்கு வேலை மட்டுமல்ல ஊக்குவிப்பும் என்பது என்றென்றும் ஓர் மெத்தனமான போக்கையே உருவாக்கி கொண்டிருக்கின்றது..

இதே நிலையில் இணையாகப் பணி புரிந்தோருக்கு எல்ல திறமைகளிருந்தும் பிறப்பு ஜாதி இல்லை. அதனால் ஊக்குவிப்பு இல்லை அதனால் இங்கேயும் மெத்தனப் போக்கு உருவாக சாதகமான மனநிலை ஏற்படுகின்றது. இப்படிப் பட்ட நிலை உருவானால் நிர்வாகம் எப்படி சீரும் சிறப்புமாக இருக்க முடியும். விரைவில் நலிவடையும் நிர்வாகம் சீர் கெடும்— -குருஸ்ரீ பகோரா

#####

Login to post comments