ஓம்நமசிவய!
மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!
#####
புறச்சமய தூஷணம்!
1530. கூட்டமான ஆறு சமயங்களும் உடலுள் இருக்கும் இறைவனைக் காண உதவி செய்யாது. அத்தகைய சமயங்களை மேற்கொள்பவர் மயக்கத்தை தரும் குழியிலே விழுவர். மனைவி மக்களை தளையில் கட்டுண்டு திகைப்பர்.
1531. எங்கும் நிறைந்துள்ள இறைவன் ஒவ்வொரு உயிரிடமும் அவரவர் உள்ளத்தில் தன்னைக் காட்டாமல் மறைவாய் உள்ளான். கொடைத்தன்மையில் வள்ளல். சிரசில் இருக்கும் சகசிரதளத்தில் சத்தியுடன் பொருந்தி நிற்பான். ஒன்பது வாயில் உடலினு/ல் புகுந்து மேல் நோக்கிப் போகும் கள்வன் அவன் செயல்படும் வகையை உலகத்தார் அறியார்.
1532. உயிரில் இருந்து அறிவு செம்மை பெற்ற ஞானியர்க்கு உயிரினது இடமாகி அருள் செய்வான். உயிர்களுக்கு அன்னியனாக இருந்து உயிர்களை நடத்துபவன் என்று பேத ஞானமுடைய அடியானுக்கு வேறாக வெளியில் நின்றபடி அருள்வான். உள்ளும் வெளியும் இல்லை என்ற நாத்திகர்க்கு இரண்டிடத்தும் இல்லாதவ்வன்.
1533. ஆறு சமயங்களையும் உணர்ந்தவர் இறைவனை உள்ளபடி உணர்ந்தவர் இல்லை. ஆறு சமயங்களால் முடிவாகக் கூறப்பட்ட பொருளுமவன் அல்லன் என்பது உண்மை. இறைவனைப் பற்றிய அறிவை ஆராய்ந்து தெளிவு கொள்ளுங்கள் அதன்பின் முத்தி இன்பத்தை அடையலாம்.
1534. சிவனைக் காட்டிலும் எங்கும் நிறைந்த பொருள் இல்லை. ஆன்மாவில் மறைந்துள்ள சிவத்தை அறிந்து அனுபவத்தைப் பெற்றுச் சிறப்படைதலே த்வமே தவிர மற்றது இல்லை. உண்மை அறியாது சமயத்துறையில் புகுந்து சிறப்புப் பெற விரும்புவர்க்கு ஆறு சமயங்களும் வீண் ஆனவை. தவத்தின் பயனை அளிக்கவல்ல குருமண்டலத்தில் இருக்கும் சிவத்தை அடைந்து மேன்மை அடையுங்கள்.
1535. ஈசனைத் தேடி ஆறு சமயங்களில் நிற்பவர் விண்ணவர் ஆவதற்கு விரும்பி மயக்கம் கொண்டு அழிவர். தேவனான இறைவனை அடைய முயலாதவர். பிறவி நீங்கும் உபாயத்தை அறியாதவர் ஆவார்.
1536. சிறப்பான நெறி சிவநெறி. மற்றாவை பிறவியைத் தரும் நெறிகள். அவற்றைச் சேர்ந்தால் மலத்தினால் உண்டாகும் பிறவி உண்டு. உள்ளத்தில் சிவ நெறி தோன்றினால் தவ நெறியாகும். நான்முகன் திருமால் உருத்திரர் ஆகிய மூவரும் பிறவியை அளிக்கின்ற நெறியினர் ஆவர்.
1537. நூற்றுக் கணகான உலக சமயங்களில் ஆறு சமயங்களும் அடங்கும். பல சமயங்களும் மேற்கொண்ட நெறிகளைக் கடந்தது சிவநெறிஇதுவே முத்தியை அளிக்கும் நெறியாகும்.
1538. மூடர்கள் பொருள அறியாமல் கத்தும் கழுதையைப் போன்றவர்கள். சிவன் எங்கும் நீக்கம் அற நிற்கின்றான் என்றாலும் தம்மிடம் குற்றம் நீங்காதவர் சிவனிட,ம் உள்ள குணங்களைப் பாராட்ட மாடார். உண்மையை இன்னது என்று கொள்ளாமல் மயக்கம் கொண்டு பிறந்து இறந்து வருந்துவர்.
1539. ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்தவரும் ஓதாமல் பத்தி நெறியில் நின்றவரும் இருவினை அனுபவித்து சுழுமுனை நாடியின் வழியில் சென்று முடிந்த பிரமரந்திரத்தில் கூடி அருளைப் பெற்று அச்சம் நீங்கி நிற்பவர்க்கு மேலான் நெறியாகும்.
1540. பல தலங்களுக்குப் பயணம் செய்யும் அடியார் விரும்பிய இடங்களில் நின்று அருள்வான். இயற்கையாகவே பாசங்களினின்று நீங்கியவன். அவனை நந்தி எனப் புகல்வர். மன ஒருமைப் பாட்டுடன் துதிக்க வல்லார்க்கு தூய பேரொளி வடிவில் வெளிப்படுவான். மாயையின் கவர்ச்சி நீங்காதவர்க்கு புலப்படாதவன். மாயையின் பிடியிலிருந்து மயக்கத்தை விடாதவர் எடுத்த உடம்பின் பயனை அறியாதவர்.
1541. நல்ல நெறியை அறிந்து வாழ்பவர்க்கும் அறியாது வாழ்பவர்க்கும் வினைக்குட்பட்ட உடம்பு வித்தாகும். புவியில் வாழ்ந்து மீண்டும் பிறவியையும் இறப்பையும் அடைதல் பழியாகும். பிராண்னைப் பிரமபுழைக்கு போக்கும் வழியை கற்பிக்கும் குருவின் வழி நின்று பரந்தவெளியில் ஒன்றுபடுத்திக் கொள்ளும் நெறியை விருப்ப வில்லையே மக்கள்!
1542. பெருந்தவத்தை உடையவர் எல்லாரும் மகாதேவனான சிவனைத் தம்மை செலுத்துபவன் என வழிபடுவர். குரு மண்டலத்தில் நாத வடிவாய் வெளிப்படுவதால் அறியப்படத் தக்கவன். நாத உணர்வே அவன் என்று வீணாத்தண்டின் வழி வணங்கினால் அவனும் அந்நெறியில் வெளிப்பட்டு அருள்வான்.
1543. அனைத்து சமயங்களும் தலைவனை எல்லாவற்றிற்கும் முதலானவனை பக்தியால் விரும்புபவர்களின் உள்ளத் தாமரையில் விளங்குபவனை நாடிய பக்தர்களின் சித்தம் விரும்பித் தேடியபோது அவன் அறிந்து வெளிப்படாது போனால் உண்மையை அறிய இயலாமல் பொய்விடும்.
1544. உயிர்களுக்கு அளிக்க வேண்டியவற்றின் நன்மைகளை அறிந்தவன் விரும்பியவரை ஆதரிக்கும் இயல்பை உடையவன். ஒளிவடிவானவன், வானவர் பெற்றிருக்கும் பேறுகளுக்கெல்லாம் அவனே பெருந்தலைமையாய் இருப்பவன் என்பதை உன் ஐய அறிவை அகற்றி நினைப்பாயாக. தூய ஒளிக்கல்லைப் போன்றபேரொளி உடையவன்.அவன் வைத்த அறநெறி அரிதாகும்.
1545. சமயங்களுள் அது சிறந்தது. இது சிறந்தது எனக் கூறும் மயக்கத்தை உடைய மக்களின் மய்க்கச் சூழலை விட்டு நீங்கு. நாதந்தத்தில் இருக்கும் சிவபெருமானை நாடு. பல மாயச் செயல்களுடன் கலந்திருக்கும் ஊன் உடலைக் கடந்திருக்கும் பிரண உடலை பெறுக.
1546. நாத மார்க்கத்தை அறிந்து அடைந்த தேவர்களும் முனிவர்களும் நல்ல நெறி இது எனக்கண்டு சிவமாம் பேற்றை அடைந்தனர். அப்படியிருக்க மக்கள் வகுத்த வேறு நெறிகளை நாடி இறைவனான முதல்வனின் கருணையைப் பெறாதவர் செல்ல வேண்டிய நெறியில் செல்லாது திகைப்பது ஏன்.
1547. நாம் அடையத்தக்க நெறியாய் அறியத் தக்கதும் உயிருக்கு உயிராய் நின்று சோதியை பெறுவதற்குரிய நெறியில் நின்று அறிந்தால் யாதொரு மாறுபாடும் ஏற்படாது. கன்மங்கள் நீங்குவதற்குரிய வழியாய் இருக்கும் சிவந்த தீயுள் சுயபேதம் கழிவதை மக்கள் அறிவதில்லை. அறிவற்றவர்கள் அவர்கள்.
1548. இறைவனை அடைய வகுக்கப்பட்ட நெறி முன் சொன்னதாகும். உலக இன்பத்தில் மிகவும் நாட்டம் கொண்டு நடப்பவர் மற்றவர் கூறும் கற்பனையைக் கேட்பர். பிறப்பு என்ற சுழியில் அகப்பட்டு நடக்கும் துன்பத்தைப் போக்கி உலகத்து இன்பத்தைப் பழித்து நடப்பவர் மற்றவரால் புகழ்ப்படுவர்.
1549. சிவநெறியைப் பற்றி தவம் நிலை பெற்றபோது பழி பாவங்களில் புகுத்தும் வன்மையால் வினைக் கட்டுகளை அழித்து அந்த வினை வழியே போகும் திவினையாளரை புறக்கணித்து பிரமரந்திரத்தொலை வழி சென்றால் தேவ தேவனான சிவம் வெளிப்படுவான்.
#####