gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:33

பிண்டாதித்தன்! மனவாதித்தன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

பிண்டாதித்தன்!

1985. நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் என்னும் செயலைச் செய்யும் போதும் இளைய யானை வடிவுடைய பிரணவக் கடவுள் என் மனத்தில் இருந்தனன். அதனால் மலங்களை நெருக்கி வீணாத் தண்டில் உணர்வு கீழ் நோக்காமல் மேல் நோக்கி எழ வெல்லுதலைச் செய்கின்ற பரந்த கதிர்களையுடைய கதிரவன் வெளிப்படுவான்.

1986. கதிரவன் மேல் எழுந்து அடங்கும் இடமான ஈசான திக்கைக் கண்டு அங்கே இருந்து மேலே போய் மேல் முகமான சகசிரதளத்தை அடைந்து அங்கே உள்ள ஒளியில் நிற்க வல்லவரே தம்மை உணர்ந்தவர். ஆவார். இந்த உண்மையை உணராது பிதற்றும் உலகத்தவர் அனைவரும் கீழ் உள்ள கதிரவனை மேல் எழச் செய்ய வகை அறியாமல் அழிவர்.

1987. கதிரவன் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு உலகமாகிய உடலை வலம் வந்து சொருகிக் கிடக்கும் ஈசான திக்கை யாரும் அறிய மாட்டார். அங்ஙனம் அறிகின்ற அறிவுடையவர்க்கு என் உள்ளதில் உள்ள அன்பு அவரிடம் போய் உருகி நிற்கும்.

#####

மனவாதித்தன்!

1988. எரிக்கும் கதிர்களையுடைய கதிரவனும் ஒளியுடன் பனியையும் பெய்யும் ஒளிவிடும் கதிர்களையுடைய திங்களும் மாறி மாறி நின்று விளங்க அந்த இரு கதிர்களும் விரிந்து விளங்குவதில் இயங்கிக் கொண்டிருக்கும் என் உயிரும் கூடி ஒரு கதிராகப் பூரணமானால் அதற்கு முழுமதி என்று பெயர்.

1989. கதிரவனிடம் சந்திரகலை வந்து பொருந்தும் வகையிலே பொருந்தி பின்பு சந்திரகலையில் சூரிய கலை வந்து பொருந்துவது பூசனை முறையாகும். அந்த இருகலைகளும் ஒத்து இயக்கம் இல்லாமல் மேல் முகமான சசிகரதளத்தில் பொருந்தி நிற்க சிந்தை தெளிந்தவர் சிவமே ஆயினர்.

1990. திங்களும் கதிரவனும் மூலக்கனலும் பொருந்தி மதிமண்டலம் உண்டாகும், அவ்வாறான மதி மண்டல்த்தில் தாரகை என்ற ஆன்ம ஒளியிலும் கலந்து நான்கு கலைகள் உள்ளன என்பர். கதிரவன் குண்டலினித்தீ சந்திரன் என்னும் இம்மூன்றும் பொருந்த அதுவே பௌர்ண்மியாகும் என்று அறிவீர்.

1991. தீ மண்டலத்தையும் கதிரவ மண்டலத்தையும் கடந்து விளங்கிய சந்திரமண்டல ஒளி ஓர் அண்டம் என்கின்ற தீ மண்டலத்தில் காம உணர்வோடு வழ்கின்ற தனமையுடைய மக்களுக்குப் புலப்படாததாயும் தலைக்குமேல் விளங்கும் பிரமாண்டத்தில் உய்ர்ந்து போகும் ஒளியாய் நின்றது யார். அந்த நிலையை அடைந்த அவரே அந்த ஒளியை அறியக் கூடியவர் ஆவார்.

1992. மன மண்டலத்தில் உள்ள கதிரவன் பிருதிவி முதலிய ஒன்பது நிலைகளிலும் பொருந்தி உடலால் உலகத்தை வலம் வரும். இத்தகைய ஒன்பது தத்துவங்களும் ஈசனது சத்தி நிலையாகும் என்பதை அறிவார் இலர். இவ்வகையான ஒன்பதிலும் ஆன்மா பொருந்தியுள்ளதாயினும் சிவபெருமானின் அருள் இல்லாதவர் இன்பம் பெறாதவராய் இருள் சூழ்ந்த அண்டாகாயத்தை அடைந்திருப்பர்.

#####

Read 2472 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27077970
All
27077970
Your IP: 3.144.233.150
2024-04-25 16:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg