gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 16 July 2020 12:09

தூல பஞ்சாக்கரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

தூல பஞ்சாக்கரம்!

2698. ஐம்பது எழுத்துக்களால் வேதங்கள் எல்லாம் கூறப்பெற்றுள்ளன. அப்படியே எல்லா ஆகமங்களும் ஐம்பது எழுத்துக்களால் கூறப் பெற்றுள்ளன. ஐம்பது எழுத்துக்களும் உடலுள் பொருந்தியிருக்கும் முறையை அறிந்தால் ஐம்பது எழுதோசையால் அடையக்கூடியதை நமசிவய என்ற ஐந்து எழுத்தால் அடையலாம்.

2699. எழுத்துக்கள் அ முதலாக ஐம்பத்தோர் எழுத்துக்களாகி உ காரம் முதலாக நிலைபெற்று நின்று மகரத்தால் இறுதி அடைந்து தேய்ந்து தேய்ந்து மேல் போய் நகாரத்தை முதலாக உடைய நந்தியின் பெயர் நமசிவய என்பதாகும்.

2700 அ முதலான உயிர் எழுத்துக்கள் பதினாறுடன் கலந்த பரை என்ற சிவசத்தியுடன் பரையில் பிரிந்து மற்ற மெய்யெழுத்து முப்பத்தைந்தையும் இயக்கும் பிராமி முதலிய எட்டு சத்தியுடன் கலந்து ஒளியாய்த் திகழும் சிவம் அதனது கைவசமாம் கண்ட சிவயநம என்ற மகாமந்திர அங்குசமாகும். இதை அறிந்தவர்க்கு வேதம் கூறும் ந முதலிய நமசிவய என்ற உணர்வு மூலாதாரம் முதல் உடலிலே பொருந்தும்.

2701. வாயால் கூறப்படும் இறைவனின் ஐந்து எழுத்தான சிவயநம என்பது வாய், கழுத்து இதயம் உந்தியுடன் இலிங்கம் என்ற ஐந்து இடங்க்ளிலும் பொருந்தி மேலிருந்து வான் மயமாய் படர்ந்து மூலாதாரத்தை அடைந்து முதுகுத்தண்டின் வழியாய் நேரே வான் வீதியான உச்சியில் உள்ள சகசிரதளத்தை அடைந்து முடிவதில் நமசிவய என்ற பேரொளி வடிவம் மேற்கூறிய ஐந்து இடங்களிலிருந்து எழும்.

2702. ஏழு நிறக் கதிர்களும் தலையின்மீது ஒளிமயமாக விளங்கிக் கருவிகளை விட்டு யோகியின் உயிர் தலைக்குமேல் போகும் போதும் இயல்பாக இறப்பு வந்து கருவிகளை விட்டு உயிர் பிரியும் போத்ம் பாதுகாவலாய்த் துணை செய்வது ஐந்தெழுத்தாகும்.

2703. கதிரவனும் சந்திரனும் மிக்கு மேல் எழும்போது அழகுடைய ஒளியாய் விளங்கும் மந்திரத்தை எவரும் அறிய்வில்லை. செம்மை நிறமுடைய குண்டலினி அம்மைக்குரிய ஐந்தெழுத்தை வாய்க்குள் மென்மையாக உச்சரித்தல் கூடும்.

2704. தெளிந்த அமுதமயமான ஒளி உண்டாகச் சிவயநம் என உள்ளே ஒளிபெற ஒருமுறை எண்ணுங்கள். இவ்வாறு வெள்ளம்போல் பெருகி வரும் சீவ ஒளியை விரும்பிப் பெறாதவர் துல்லிய நீர் மீண்டும் நீரிலேயே விழுந்து கெடுவதுபோல பிறவிச் சக்கரத்தில் மீண்டும் வந்து விழுவர்.

2705. ஒளி நெறியின் இயல்பை உணர்ந்து நின்று பிறவிக்குக் காரணமான வினைகளை ஒழிக்க அப்பிறவி வரும் வழியைத் தடை செய்யும் திறன் உடையவர்க்கு அருள் நெறியைக் காட்டுவது ஐந்தெழுத்தகும்.

2706. உள்ளம் தடுமாற்றத்தை அடையும்படி தீவினையால் ஏற்படும் துயரம் வந்தபோது உன்னிடம் பொருந்தியுள்ள சிவத்தை ஒளிரச் செய்ய ஐந்தெழுத்தை ஓதுக. உன் விருப்பத்தை அறிந்து ஒலிக்கின்ற திருவடியால் உனக்கு உறுதுணையாக இருப்பதை உணர்த்துவான்,. இத்தகைய் குறிப்பை அறிபவரது தவம் சிவ வடிவத்தை உருவாக்கும்.

2707. நாள் தோறும் உறங்குவதற்ம் திருவைந்தெழுத்தை நினைத்து தம் தொண்டை வழியாகப் பிரமரந்திரம் போகும் மேல்முகமான கதியை எழுப்பிச் சிவனது திருவடியில் அடைக்கலம் புகுவதாக எண்ணியிருப்பின் பனிப்படலம் போன்ற வெண்மையான சகசிரதளத்தில் விளங்கும் அஞ்செழுத்தில் விளங்கும் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

2708.பரவியுள்ள பூமித்தத்துவம் முழுவதும் கீழோடு எல்லாவற்றையும் தாங்கும் குண்டலியான பம்பை உள்ளும் புறமுமாய் இயக்குபவனே சிவன். அத்தகைய இ/றைவன் அருளீய ஐந்தெழுத்தின் பெருமையை உண்ராமல் ஞானச் செல்வம் பெறாத ஏழை மக்கள் அவர்களிடம் பொருந்திய அஞ்ஞானமான இருளை அகற்ற முடியாது.

#####

Read 1543 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26943802
All
26943802
Your IP: 54.81.136.84
2024-03-29 12:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg