குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நினைத்தாலே போதும்!
Written by குருஸ்ரீ பகோரா தன் எதிர்கால பலன் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்தவன் ஓர் ஜோசியரிடம் சென்று தன் ஜாதகத்தினை கொடுத்தான். அதைப் பார்த்த ஜோதிடன் திகைத்து, நான் உன் ஜாதகத்தைக் கணித்து வைக்கிறேன். நீ இரண்டு நாள் கழித்து வா.. எனக்கூறி அனுப்பினான்.
வேலைத் தேடி சென்றவன் வேலை ஏதும் கிடைக்காததால் சலிப்புடன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான். புழுதிக்காற்று வீசவே அருகிலிருந்த பாழடைந்த மண்டபத்திற்குள் சென்று ஒளிந்தான். அங்கு ஓர் சிவலிங்கம் இருக்கக் கண்டவன், அடடே, ஒரு கோவில் இப்படி பாழடைந்து விட்டதே. என்னிடம் பணம் வசதியிருந்தால் இந்தக் கோவிலை சீர்படுத்துவேன் என எண்ணினான். மனதில் கோவிலை சீரமைக்க திட்டம் போட்டான்.
அப்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. மின்னலடித்தது. அப்போது மண்டபத்தின் மேல் பகுதியில் பாம்பைப் பர்த்து பயந்தவன் நிலை தடுமாறி வெளியே விழுந்தான். எதிர்பாரா விதமாக மண்டபமும் சரிந்தது. இவன் ஒதுங்கியிருந்த இடத்திலிருந்து ஓர் கொடிய நாகம் ஊர்ந்து சென்றது. ஒருகணம் நிலைகுலைந்து போனான். இன்னும் சிறிது நேரம் இருந்தால் பாம்பு கடித்தோ, அல்லது மண்டபத்தின் இடிபாடுகளில் சிக்கியோ மரணம் அடைந்திருக்க வேண்டும் என நினைத்து அங்கிருந்து அகன்றான்.
மறுநாள் இவனைக்கண்ட ஜோதிடருக்கு பேயைக்கண்டது போலாயிற்று. இவனிடம் நேற்று நடந்தது என்ன எனக் கேட்டார். விளக்கமாக கேட்டவர், உனக்கு நேற்றுடன் ஆயுள் முடிந்து விட்டது. அதை எப்படி உனக்குச் சொல்வது என்பதால்தான் உன்னை இன்று வரச்சொன்னேன். நீ ஒளிந்திருந்தபோது உண்மையாகவே கோவிலை கட்ட நினைத்த நல்ல எண்ணங்களே உன்னை காப்பாற்றியிருக்கின்றது என்றார். நல்லது நினைத்தாலே போதும் நன்மை பெறுவீர்.
உழைப்பின் அருமை!
Written by குருஸ்ரீ பகோரா தன் ஆசிரமத்தில் காந்திஜி நடந்து சென்றுகொண்டிருந்தபோது பஞ்சு சுருள் ஒன்று இருக்கக் கண்டார். அன்று அவர் மௌனவிரதம். தன் கூட வருபவர்களிடம் அதைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றுப்புறத் தூய்மை குறித்து குறிப்பிடுகிறார் என நினைத்து உடன் வந்தோர் அந்த பஞ்சை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
மௌன விரதம் முடிவுற்றபின் காந்திஜி அந்த பஞ்சு பற்றி கேட்டார். குப்பையில் போட்டவர் பதறிவிட்டார். இதுவே காசாக இருந்தால் இப்படி செய்திருப்பாயா எனக்கேட்டார். பருத்தி பயிரிடுவதிலும் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகி இருக்கின்றது தெரியுமா! முதலில் அந்த பஞ்சை தேடி எடுத்துவா என்றார்.
பஞ்சை திரும்ப பெற்றதும், பஞ்சு அழுக்கானால் நூல்நூற்று அழுக்கை அகற்றலாம் எனக்கூறியவரின் எளிமை மற்றும் சிக்கனத்தை ஆசிரமத்தில் உள்ளோர் தெளிவாக புரிந்தனர். உழைப்பின் அருமையை உழைத்தவர்தான் உணர்வர். அவருக்குத்தான் எளிமையும் சிக்கனமும் கைவரும்.
விழிப்புணர்வு!
Written by குருஸ்ரீ பகோரா ஒரு ஞானியிடம் பயிற்சி பெற வந்தான் இளைஞன். நீ விழிப்புணர்வு பெற திடீர் திடீரென்று தடியால் தாக்குவேன், அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றார். அதன்படி அவர் தாக்குதலில் பலமுறை அடிபட்டான். நாளடைவில் அறிவு கூர்மையாகி அவரது காலடி ஓசையை துல்லியமாகக் கணித்து அவரின் அடியிலிருந்து தப்பினான். ஞானி முதல் பயிற்சி முடிந்தது.
அடுத்த பயிற்சி உறங்கும்போது எனக்கூறி தாக்கினார். பலமுறை அடிவாங்கி, எப்போது தாக்குவார் என்ற நினைவில் தூக்கத்தை இழந்தான். நாட்கள் செல்லச் செல்ல தூக்கத்தில் விழிப்புணர்வு அடைந்து, ஞானி தாக்கவருவதை அறிந்து தடுத்தான்.
ஞானி இனி உனக்கு அடுத்த பயிற்சி வாளில், கொஞ்சம் அசந்தால் உயிர் போய்விடும் என்றார். விழிப்புணர்வுக்காக தாக்கும் குருவை நாம் ஏன் அவர் உறங்கும் போது தாக்கக்கூடது என எண்ணினான். ஞானத்தால் மனதில் நினைப்பதை அறிந்த ஞானி, அவனைக் கண்டித்தார். ஞானியிடம் மன்னிப்பு கோரினான்,
மனதில் நினைப்பதை அறியும் அளவிற்கு விழிப்புணர்வு அடைய உறுதி கொண்டு பயிற்சிகளை செய்தான். விரைவில் தேர்ச்சியடைந்து முழு விழிப்புணர்வுநிலை அடைந்தான். வாழ்வில் நாம் அனைவரும், விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் விழிப்புணர்வுடன் இருப்பது வாழ்வு பயணத்தில் சிறந்த பலன்களைத்தரும்.
சிறந்த சீடன்!
Written by குருஸ்ரீ பகோரா தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் சிறந்தவனை தேர்ந்தெடுத்த குரு, அவன் மற்றவர்களைவிட எப்படி சிறந்தவன் என தெரிந்து கொள்ள அவனிடம் சில கேள்விகளை எல்லோர் முன்னிலையில் கேட்டார்.
‘நீ மலைப்பகுதியில் சென்று ஆன்மீகத்தை பரப்ப போகிறாய். அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். உன்னிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால் நீ என்ன செய்வாய்’ என்றார். அதற்கு அந்த மாணவன் அவர்கள் என்னை அடித்தாலும், என்மீது கல் எறிந்தாலும், எப்படி நடந்து கொண்டாலும், நிதானத்துடன் நட்பு பாராட்டி, அன்பு கொண்டு நடப்பேன் என்றான்.
குரு, ‘உன்மீது கல்லால் அடித்தால்’ என்றார். ‘என்னை ஆயுதங்களால் தாக்க வில்லை’ என எண்ணிக்கொண்டு நட்பு பாராட்டுவேன் என்றான்.
குரு. ‘ஆயுதங்களால் தாக்கினால்’ என்றதற்கு, அவர்கள் ‘என்னை கொல்ல வில்லையே’ என நினைத்து அப்போதும் நட்பு பாராட்டுவேன் என்றான்.
குரு, அந்த மாணவனை உற்றுப்பார்த்து, சரி, ‘அவர்கள் உன்னை கொல்ல வந்தால்’ என்றார், ‘குருவே, அவர்களை அப்போதும், எப்போதும் அன்புடன் நட்பு பாராட்டி மகிழ்வேன், ஏனெனில் அவர்கள், எனக்கு உடல் பந்தங்களிருந்து விடுதலை அளிக்கப் போகின்றார்கள் என்பதற்காக, என்றான்.
தீங்கு செய்பவர்களிடமும் காட்டும் அன்பின் நட்பு சிறந்த மேன்மையைத் தரும்.
பிறர் மகிழ்வு தன் மகிழ்ச்சி!
Written by குருஸ்ரீ பகோரா நீதி நேர்மை தவறாத அரசன் ஒருவன், மிகுந்த இரக்க குணம் கொண்டவன். மக்களின் நன்மைக்காக வாரி வழங்கினான். பிறர் மகிழ்ச்சியைக் கண்டு தான் மகிழ்ந்தான். அவன் ஆயுட்காலம் முடிந்ததும் எமதூதர்கள் வந்து அழைத்துப் போயினர். அந்த அரசன் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்திருந்ததால் அந்த ஜீவனை நரகத்தின் செயல்பாடுகளை கண்டு பின் சொர்க்கம் அழைத்துச் செல்ல ஆணையிட்டான் எமதர்மன். அவ்வாறே அவன் செர்க்கம் செல்லும் வழியில் நரகத்தின் செயல்பாடுகளை பார்க்க அனுமதித்தனர். நரகத்தில் ஜீவன்கள் படும் துயரத்தைக் கண்டு மிகவும் வருந்தினான். அரசன் செய்த தவறுக்கு அதுவே தண்டனை என்பதால் அவனை அங்கிருந்து சொர்க்கம் கொண்டு செல்ல முனைப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த ஜீவன்கள் மன்னா, உங்கள் மேனியை தழுவிய காற்று, துன்பத்தில் இருக்கும் எங்களை அடையும்போது இதமாக இருக்கின்றது, எனவே இன்னும் சிறிது நேரம் இங்கிருங்கள் என வேண்டினர். மன்னர் அப்படி இதமான காற்று என்னால் உங்களுக்கு கிடைகிறது என்றால் நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்றார். தூதர்களின் நிலை தர்ம சங்கடமானது. எமதர்மனுக்கும், இந்திரனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து மன்னா அவர்கள் செய்த பாவம் அவர்கள் அனுபவிக்க வேண்டியது என்றனர். நான் இங்கு தங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதைவிட எனக்கு மகிழ்வு வேறில்லை. அப்படியில்லையெனில் நான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு தந்து விடுகிறேன் என்றான் மன்னன்.
அந்த புண்ணியத்தால் அனைவரும் சொர்க்கம் சென்றுவிடவே அங்கு இருந்த மன்னனிடம், அரசனே, கொடை அளிப்பதால் புண்ணியம் பெருகுமே அன்றி குறையாது. நீங்கள் உங்கள் புண்ணியங்களை தானம் செய்ததால் வந்த புண்ணியம் உங்கள் கணக்கில் இருப்பதால் நீங்களும் சொர்க்கம் சொல்லாம் என அழைத்துச் சென்றனர்.
சூரிய சந்திரன்!
Written by குருஸ்ரீ பகோரா சூரியன் பிரகாசித்தால் அது பகல். சந்திரன் குளிர்ந்தால் அது இரவு. சூரியன் கோலோச்சும் பகல் காலத்தில் சந்திரன் அமைதியாய் இருந்தும், சந்திரன் கோலோச்சும் காலத்தில் சூரியன் அமைதி காத்தும், ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்தும், உலகின் இயக்கத்திற்கு இரண்டும் தமது கடமைகளைச் சரிவர செய்கின்றது.
வாழ்க்கைப் பயணம் இதைப்போன்றதே. ஆண்கள் சூரியனாக ஒளிர்ந்து, பெண்கள் சந்திரன் போல குளிர்ந்து மனம் ஒன்றி பயணித்தால் இரவு, பகல் கழிவது போன்று வாழ்க்கையின் நாட்கள் இனிதாக கழியும். ஒரு கண் பார்வைவிட இருகண்களால் நோக்கின் அகன்ற பார்வை படலம் தோன்றும். அது இயற்கையின் நிறைந்த பார்வை. எல்லாம் அங்கு தெரியும், புரியும். அங்கு ஆணும், பெண்ணும் இரு கண்களாக செயல்பட்டு ஒருவர்மீது ஒருவர் அன்பின் மேலீட்டால் ஆத்ம நண்பர்களாய் செயல் பட்டு வாழ்வில் வெற்றியுடன் முன்மாதிரியாய் திகழமுடியும்.
ஏமாறாதே! ஏமாளியாகாதே!
Written by குருஸ்ரீ பகோரா ஒரு அரசன் தன் உபயோகத்திற்கு வெளிநாட்டு குதிரைகளை வாங்க விரும்பினான். ஒருநாள் அதுபோன்ற வியாபாரி ஒருவனிடம் சில குதிரைகளை வாங்கிவிட்டு இன்னும் குதிரைகள் கிடைத்தால் கொண்டு வாருங்கள் என்றான். அவன் வெளிநாட்டு குதிரைகளை கொண்டுவர கால அவகாசம் வேண்டும், மேலும் அதற்கு முன் பணம் வேண்டும் என்றான். அரசனும் 10 ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான். வியாபாரி சென்று பல நாட்கள், மாதங்கள் கடந்தும் ஒரு தகவலும் இல்லை.
இந்நிலையில் ஏமாந்தவர்கள் பற்றி ஒருவழக்கு வந்தது. அதை விசாரித்தபின் அரசன் இது போன்று ஏமாந்தவர்களுக்கு அரசின் உதவி கிடைக்க, ஏமாந்தவர்கள் யார் யார் என பட்டியல் தயார் செய்யச் சொன்னார். அமைச்சர் தயாரித்து வந்த பட்டியலில் தன் பெயர் முதலில் இடம் பெற்றிருக்க கண்ட அரசன் கோபங்கொண்டான். அப்போது அமைச்சர், மன்னிக்க வேண்டும் ‘முன்பின் அறிமுகம் இல்லா வியாபாரியிடம் ஒன்றும் விசாரிக்காமல் 10000 பொற்காசுகளை கொடுத்துள்ளீர்கள். அவன் வருவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை’ என்றார்.
மன்னர், ‘சரி, குதிரை வியாபாரி வந்து விட்டால் இந்த பட்டியல் என்னவாகும்’ எனக்கேட்க, அமைச்சர், ‘பட்டியலில் உங்கள் பெயருக்குப்பதில் அவன் பெயரை பதிவு செய்து விடுவேன்’ என்றார். நீங்கள் ஏமாந்து விட்டீர்கள். உங்களை ஏமாற்ற சரியான சந்தர்ப்பம் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவனும் ஒருவகையில் ஏமாளிதான், என்றார்.
நித்ய பிரம்மச்சாரி, நித்ய உபவாசி!
Written by குருஸ்ரீ பகோரா மறுகரையில் இருக்கும் துர்வாசமுனிவரிடம் நிவேதனப் பொருளை கொடுத்துவரச் சொன்னார் கிருஷ்ணர். வெள்ளம் அதிகமாக இருக்க திகைத்த ருக்மணியிடம் ‘கண்ணன் நித்யபிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக் கண்ணன் கூறிவாறு சொல்லி ஆற்றைக் கடந்தாள். துர்வாசரிடம் நிவேதனப் பொருளைக் கொடுத்து திரும்பும்போது நதியைக் கடக்க துர்வாசர் கூறியபடி, ‘துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக்கூறி நதியைக் கடந்தாள்.
கண்ணனைப் பார்த்து, என்னுடன் குடும்பம் நடத்தும் நீங்கள் நித்ய பிரம்மச்சாரி என்கிறீர்கள், நான் கொடுத்ததை உண்டுவிட்டு துர்வாசர் நித்ய உபவாசி என்கிறார் இது எப்படி சரி என்று கேட்க, கண்ணன், ‘எங்கள் இருவருக்கும் எதன் மீதும் பற்று இல்லை. அதனால் இல்லறத்தில் இருந்தாலும் நான் பிரம்மச்சாரி, நீ அளித்ததை உண்டாலும் துர்வாசர் உபவாசி என்றார். பற்று இன்றி, அனைத்தும் இறைவனது என எண்ணி வாழ்ந்தால், வாழ்க்கை பயணம் ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும்,
குருடும், குருடற்ற மணமகன்!
Written by குருஸ்ரீ பகோரா ஒரு ரிஷியின் மகள் மணப்பருவம் அடைந்தாள். வேதநெறியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த ஒருவனை மணமுடிக்க ரிஷி விரும்பினார். ஆனால் அவள் தனக்கு வரும் மாப்பிள்ளை, ‘குருடும், குருடு இல்லாதவருமான’ ஒருவரை மணக்க விருப்பம் தெரிவித்தாள். ஒரே நேரத்தில் குருடாகவும், குருடற்றவனாகவும் எப்படி ஒருவன் இருக்க முடியும், அவனை எப்படி தேடுவது. எப்போது மகளுக்கு திருமணம் என கவலை கொண்டார் ரிஷி. காலம் கடந்தது.
ஒருநாள் வேறு ரிஷியின் மகன் ஒருவன் முறைப்படி வந்து பெண் கேட்டான். அவனிடம் மகளின் நிபந்தனைகளைக் கூறினார். அவன் அந்தப் பெண்ணிடம் சென்று, எந்தக் கண்ணால் மனம் நினைக்கின்றதோ, புத்தி உண்மையை அறிகிறதோ, உலகம் ஞானம் எனச் சொல்லுகின்ற அந்த ஞானக்கண் எனக்கு இல்லை. அது ஒருவகைக் குருடே!
தினமும் நான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்கிறேன். காரியமான இயற்கையான பிரபஞ்சத்தையும், காரணகர்த்தாவாகிய பரம்பொருளை நெஞ்சில் நிறுத்தி செயல்படுவதால் என் செயல்களில் கடவுளைக் காண்பதால் நான் குருடு அல்லாதவனாகவும் இருக்கின்றேன், என்றதைக்கேட்ட அந்த பெண் அவனை கணவராக ஏற்க சம்மதித்தாள். இறக்கும் தருவாயில் பீஷ்மர், தருமருக்கு சொல்லிய அறம். அதுபோலவே நம்மில் ஒவ்வொருவரும் குருடாகவும், குருடற்றவருமாக இருத்தல் சிறப்பு.
வெற்றி,தோல்வியா! சந்தோஷ ஆரோக்கியமா!
Written by குருஸ்ரீ பகோரா அந்த நாடு அப்போதுதான் விடுதலைப் பெற்றிருந்தது. அதன் அதிபராக பொறுப்பேற்றவர் நாட்டில் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி, கல்வியுடன் விளையாட்டுகளையும் பயில்விக்க திட்டம் போட்டார். அதன்படி ஒரு பயிற்சியாளர் அந்த கிரமத்து இளைஞர்களை இரு குழுக்களாகப் பிரித்து அந்த விளையாட்டின் சட்டதிட்டங்களை போதித்தார். எந்த அணி என்னென்ன தவறுகள் செய்தது, எத்தனைப்புள்ளிகள் என்று கணக்கிட ஆரம்பித்தார். முடிவில் இந்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள் அடுத்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள். குறைவாக புள்ளிகள் எடுத்த அணி தோற்ற அணி என்று கூறி நாளை அனைவரும் நன்றாக விளையாடி போட்டி போட்டு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கும் இங்குமாக நட்புடன் விளையாடி ஆனந்த மகிழ்வு கொண்டோம். வெற்றியும் தோல்வியும் எங்களுக்கு வேண்டாம். விளையாடிய அந்த சந்தோஷம் மட்டும் போதும் என்றனர். இதேபோன்று வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாக கருதினால் அது இன்பம். போட்டியாக கருதினால் அது சூதாட்டம். இன்பமும், துன்பமும் வரலாம். அதனால்தான் குழந்தைகள் விளையாட்டை விரும்புகின்றன. தெரிந்த மனிதன் அதை ஒரு போட்டியாக புரிந்து கொள்கின்றான். அவதிபடுகின்றான்.
More...
விசாரிக்காமல் நம்பாதே!
Written by குருஸ்ரீ பகோரா அருகில் படுத்திருக்கும் மனைவி தூக்கத்தில், ‘அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்’ என்ற உளறிய வார்த்தைகளைக் கேட்டதும், அவள் மேல் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அகன்றது. மனம் அமைதியிழந்தது. அவளுக்கு ஏதாவது ரகசியத் தொடர்பு இருக்குமா எனப் பலசந்தேகங்கள் தோன்ற நிம்மதியின்றி காலையில் அந்த அரண்மனையை தீயிட்டுக் கொளுத்த ஆணையிட்டார். பின்னர் அந்த ஊருக்கு வந்திருந்த ஞானியைப் பார்க்கச் சென்றார்.
ஞானி அப்போது பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். கற்பு பற்றி பேசியவர் ராணியைப் போற்றி பாராட்டினார். பிரசங்கம் முடிந்ததும் ஞானியிடம் நடந்ததைச் சொன்னார் மன்னர். ஆடையின்றி குளிரில் தியானம் செய்த துறவியை பார்த்து வணங்கிவிட்டு ராணி சென்றார். ராணி இரவில் உறங்கும்போது போர்வைக்கு வெளியே இருந்த கை குளிரினால் விரைக்கவே, சிறிது நேரத்தில் என் கை விரைத்து விட்டதே, அந்த துறவி என்ன ஆகியிருப்பார் என புலம்பியிருக்கின்றார். இதை நீ தவாறாக எடுத்துக் கொண்டாய் என்றார். மன்னர் விசாரனை செய்யாமல் செயல்பட்டதின் விளைவை உணர்ந்து தான் இட்ட ஆணை என்ன ஆயிற்று எனக்கேட்டு அதை செயல்படுத்துமுன் நிறுத்தினார். எதையும் தீர விசாரணை செய்யாமல் முடிவு எடுக்காதீர்கள். நீங்கள் துன்பப் படுவீர்கள்.
உண்மை சந்தேகம்!
Written by குருஸ்ரீ பகோரா காவல்பணி செய்து கொண்டிருந்தவனுக்கு தோட்டத்தில் சப்தம் கேட்கவே, அவசரமாக அங்கு வந்தவன் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருக்க கண்டான். அதை பிடித்து கட்டிப்போட முயன்றான். மாட்டைபிடிக்க முடிவில்லை. கையில் வால்தான் சிக்கியது. அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்த மாடு இவனை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்து பின் பறக்க ஆரம்பித்தது. விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அது அவனை கயிலாயம் கொண்டு சென்றது. சிவனைக் கண்டவன் அவரிடம் மாட்டைப்பற்றி முறையிட்டான். தோட்டத்தில் விளைந்த பயிரெல்லாம் நாசம் என்றவனிடம், சிவன் அதற்கு ஈடாக பொற்காசுமுடிச்சு ஒன்றை தந்தார். நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்தான். அவனுக்கு ஒருசந்தேகம் தோன்றியது. உண்மையில் அந்த மூட்டை முழுவதும் தங்கம்தானா என்று.
ஒரு காசை எடுத்துக்கொண்டு நண்பனிடன் சென்றான். அதை சோதித்த அவன் அது சொக்கத் தங்கமாக இருக்கக் கண்டான். இருந்தாலும் நண்பனுக்கு எப்படி அது கிடைத்தது என அறியும் ஆவலில், இது பித்தளை உனக்கு இதை யார் கொடுத்தது என்று கேட்டான். நடந்ததைக் கேட்டவன் அன்று இரவு நண்பனின் தோட்டத்தில் பதுங்கியிருந்தான். நந்தி வந்தது. பித்தளை கொடுத்து ஏமாற்றி விட்டீர்களே இது சரியா எனச் சிவனிடம் கேட்க நினைத்து நந்தியின் வாலைப் பிடித்தான். அது விர்ரென்று உயர கிளம்பியது. மறைந்திருந்த நண்பன் இவன் காலை இறுக்கிப் பிடிக்க இருவரையும் மேலே கொண்டு சென்றது நந்தி.
அப்போது காலைப்பிடிந்திருந்த நண்பன் உனக்கு இப்படி எவ்வளவு காசுகள் கொடுத்தார் என்றான். ஆர்வமிகுதியில் இவ்வளவு என்று இருகைகளையும் விரித்துக் காட்டினான். கைகளை விரித்ததால் வாலைப்பிடித்தபிடி நழுவ இருவரும் பூமியில் விழுந்தார்கள். அடிபட்டார்கள்.
உண்மையைச் சந்தேகப்பட்டவன் வாலைப்பிடிக்க, பேராசை கொண்டவன் காலைப் பிடிக்க இருவருக்கும் உடலில் காயம், துன்பம், துயரம். உண்மையைச் சந்தேகப்படாதீர்கள்.
நரியா! சிங்கமா!
Written by குருஸ்ரீ பகோரா காட்டில் விறகு பொறுக்கி விறபவன் விறகைச் சேகரித்து வரும்போது வழியில் நரி ஒன்று படுத்திருக்க கண்டான். அதற்கு முன்கால்கள் இரண்டும் நொண்டியாக இருக்கவே, அதைப் பார்த்து பரிதாபப் பட்டான். அதற்கு எப்படி உணவு கிடைக்கும் என புலம்பினான். அதைக் கேட்ட, அந்தப் பக்கமாக வந்த ஒருவர் கடவுள் இருக்கின்றார். அவர் காப்பாற்றுவார் எனக்கூறியது இவனுள் பொறிதட்டியது போன்ற உணர்வு ஏற்பட, அந்த நரிக்கு உணவு எப்படி கிடைத்திடும் எனக்காண ஆவலில் அங்கேயே காத்திருந்தான்.
அப்போது சிங்கம் ஒரு மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்து அங்கேபோட்டு தான் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே விட்டுச் சென்றது. நரி தவழ்ந்து சென்று மீதியிருந்த மானை உண்டது. இதனால் ஆச்சரியமுற்றவன் முடியாத நரிக்கு உணவு கொடுக்கும் இறைவன், தினமும் கோவிலுக்கு சென்று வழிபடும் நமக்கு உணவு தரமாட்டாரா என எண்ணத் தொடங்கினான். அதன் விளைவு வேலைக்குச் செல்லாமல் கோவில் வளாகத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து கடவுள் நமக்கு ஏதேனும் தருவார் எனக் காத்திருந்தான்.
இரவு பகல் மாறி மாறி வந்தது. அவன் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. நாளுக்குநாள் பசியால் வாடி எழும்பும் தோலுமாய் மெலிந்து காணப்பட்டான். ஒருநாள் இரவு கோவிலில் யாருமில்லாத நேரம், ‘கடவுளே உன்னை எப்போதும் நினைக்கும் என் பக்தியில் என்ன குறைகண்டாய், கால் முடமாகிய நரிக்கு சிங்கத்தின் மூலம் உணவு வழங்கினாய், நான் இப்படி பட்டினியால் சாகத்தான் வேண்டுமா!’ என புலம்பினான்.
கடவுள் இப்போது அவனிடம் பேசினார். ‘நீ பாடம் கற்றது சரியில்லை, நரியைவிட்டு சிங்கத்தை ஏன் முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் நீ செய்த தவறு.’ கடவுளை வணங்கும்போது யாரிடமிருந்தாவது உதவி கிடைக்குமா என வேண்டாதீர்கள், உங்களால் யாருக்காவது உதவி செய்ய முடியுமா! என வேண்டுங்கள். உயர்வு பெறுவீர்.
காலத்தை வென்றான் தர்மன்!
Written by குருஸ்ரீ பகோரா “தருமனிடம் வந்த பிச்சைக்காரனை நாளைவா எனக்கூறி அனுப்பினான். இதைக்கண்ட பீமன் முரசையறைந்து “என் தமையன் தருமன் காலத்தை வென்றுவிட்டான்” என்றான். தருமன் அவன் செயலுக்கு விளக்கம் கேட்க, ‘அண்ணா, நாளை நீ நிச்சயம் இருப்பாயா? பிச்சைக்காரன் நிச்சயம் இருப்பானா? உன்னைச் சந்திப்பானா? நாளை அந்த பிச்சையிடும் மனோபாவம் உன்னிடம் இருக்குமா? நாளைவரை அந்த பிச்சைக்காரன் அப்படியே பிச்சைக்காரனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்? நீ இருப்பதும், பிச்சைக்காரன் அப்படியே இருப்பதும் உன் கூற்றினால் உண்மை என்றால், நீ காலத்தை வென்று விட்டாய் என்றுதானே பொருள்” என்றான். தர்மன் தன் தவறை உணர்ந்து அந்த பிச்சைக்காரனை வரவழைத்து இயன்றதை அப்போதே கொடுத்து அனுப்பினான்.
நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இன்றே இப்போதே செய்ய வேண்டியதை செய்க என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். “உறங்கும் போது விடுகின்ற மூச்சு சுழி மாறிப்போனாலும் போச்சு” என சித்தர்கள் நிலையாமை குறித்து சொன்னது, நிகழ்காலத்தில் ஒவ்வொரு கணமும் முறையான எண்ணங்கள் முறையான செயல்பாடுகளுடன் நம் வாழ்வுபாதையை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.