gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:01

சுத்த நனவாதி பருவம்!

Written by

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#####

சுத்த நனவாதி பருவம்!

2187. சுத்த சாக்கிரதம் முதலிய ஐந்து நிலைகளில் தூல தத்துவங்களே நுண்மையாத் தோன்றும். அத்தகைய இருபத்தைந்து தத்துவங்கள் விந்துவின் சத்தியாகும். தன் உயிரானது விந்து என்ற ஓளிமண்டலத்தினின்று வெளீப்பட்டு நனவில் கனவு போல் தூல தத்துவங்களைக் காணும் முறை இத்தன்மையன.

2188. நனவு நிலையில் துரியாதீதம் அடைந்தவர் குழந்தையைப் போல் கிடப்பார். நனவில் துரிய நிலை அடைந்தவர் தவழும் குழந்தைப்போல் சிறிது அறிவுள்ளவர் ஆவர். நனவில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்த பருவம் பெற்றவர் ஆவார், நனவில் கனவு நிலையில் உள்ளவர் ஒடுதல் போன்றச் செயலைச் செய்பவர் ஆவார்.

2189. நனவில் துரியாதீதம் சென்றவரிடம் கிரியை சிறந்து விளங்குவதால் சிவ தத்துவம் உணரப்படுவதாக இருக்கின்றது. அத்தகையவரிடம் பிரிவின்றிச் செறிந்திருக்கும் சுகருபமான யோகம் சிவத்தின் பொருளாலே ஆகும் அவரிடம் சிறந்த கல்வியும் நல்ல திருமேனியும் நற்குணங்களும் காணப்பெறும். அவர்களுடைய அறிவில் அண்ட கோசத்தில் அசைவனவும் அசையாதனவும் விளங்கும்.

2190. ஆதியான பரமசிவம் சிவம்சத்தி, சதாசிவம், குற்றம் இல்லதா மகேசன் சுத்தவித்தையான தத்துவமும் வித்தை கலை காலம் நியதி மாயை என்னும் தத்துவமும் முறைமையும் முடிவும் உடையனவாய் அமைந்துள்ளான் என்பதை அறிக.

2192. ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் உமியையும் தவிட்டையும் முளையையும் நிகர்க்கும். ஆன்மா சிவத்தைபோல் வியாபகம் பெறலாம். உமி முதலியவற்றால் மூடப்பட்டு உள்ளே இருக்கும் அரிசியைப்போல நிகழும். எனவே உன்னைச் சூழவுள்ள பாசத்தை நீக்கித் திருவடியைப் போற்றுவாயாக.

2193. பசுக்கள் பல நிறங்களை உடையனவாயினும் அவற்றின் பால் ஒரே நிறம் உடையன. அந்தப் பசுக்கள் பல ஆயினும் மேய்ப்பவன் ஒருவனே ஆவான். அம் மேய்பவன் மேய்ப்பதை நிறுத்தினால் பசுக்கள் அவனைச் சுற்றியே சூழ்ந்து அகலாமல் நிற்கும்..

2194. உடம்பில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தி, அகங்காரம் என்ற அந்தக் கரணங்கள் அறியாமையைப் பொருந்திக் கெடும். அத்தகைய உயிரினது மயக்கம் மேலும் பெருகினால் அந்தவுயிர் நரகத்திலும் சென்று துயரம் அடையும்.

2195. துரியாதீதத்தை பொருத்திப் புருடன் கிடப்பது தன்னை அறியாத துரியாதீதம் ஆகும். கொப்பூழைப் புருடன் அடையும் போது பிரணவம் விளங்கும் அகரக் கலையைப் பொருந்தி நிற்பான். இதயத்தில் புருடன் சுழுத்தியை அடையும்போது காமிய வாசனையுடன் விளங்குவான். அவ்வாசனையே அனுபவங்களாக கனவு நனவு நிலைகளில் பொருந்தும்.

2196. சுத்த சாக்கிர நிலைகளில் கனவு இல்லை. சுத்தாவத்தை ஐந்தில் கனவில்லாச் சுழுத்தி பொருந்திய போது விந்து நாதம் உணரப்பெறும். அங்கு நன்றாக அனுபவிக்கப்படுகின்ற விந்து நாதங்களை மாயை ஆன்மாவுடன் சேர்க்கும். பின்பு நனவில் துரியமும் துரியாதீதமும் வந்து பொருந்தும்.

2197. முப்பத்தாறு தத்துவங்களில் உடல் சார்பான ஆன்ம தத்துவமும் புருடனும் ஆகிய இருபத்தைந்து தத்துவங்களும் நீங்கினால் சுத்த நனவு நிலை பொருந்தும். மேல் உள்ள வித்தியாதத்துவத்தில் உள்ள ஆறும் முன்புள்ள இருபத்தைந்தும் ஆக முப்பத்தொன்றும் நீங்கின் நனவில் கனவு உண்டாகும். இவற்றின்மேல் உள்ள வேறான சிவ தத்துவம் ஐந்தும் கழன்றபோது உறக்கம் உண்டாகும். இந்த நிலையில் எஞ்சியிருப்பது தூய மாயை ஒன்றேயாகும்.

2198. மாயையில் வந்த புருடன் நின்மலத் துரியத்தில் அந்தக் கூட்டத்தை நீத்துத் தானும் அங்கு இல்லையாகும். புருடனுக்கு அப்பால் உள்ள விந்து மண்டல ஒளியில் ஆன்மா விளங்கும். அப்படி விளங்க ஆன்மாவுக்கு இவ்வுடம்பால ஆகும் பயன் ஏதும் இலை.

2199. ஆன்மா சாக்கிரதத்தில் துரியாதீத நிலையிலே அறிவே வடிவானவனாம். அந்நிலையில் நனவில் அதீதம் புரிந்தால் சக்கிராதீத நிலையைக் கடந்து அறிவு மயமாய் உள ஆன்மா சிவச் சோதியில் கலந்து ஒளி மயமாய் விளங்குவான்.

2200. நனவில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து. கண்டத்தில் இருபத்தைந்து தத்துவங்களுடன் தொழிற்படும் நிலையைக் கனவு என்று மொழிவர். பொய்யான உடலை இடமாகக் கொண்ட புருடனோடு பிராணன் சித்தம் என்னும் மூன்றும் சுழுத்தியில் ஆகும். உடலை அறிந்து புருடனுடன் பிராணன் என்னும் இரண்டும் கொப்பூழில் பெருந்துதல் துரியம் ஆகும்.

2201. நனவில் புருடனுடன் பொருந்துவன ஐந்து தன்மத்திரைகள் மனம் புத்தி அகங்காரம் என்னும் எட்டு. கனவில் புருடனுடன் பொருந்துவன மனம் புத்தி அகங்காரம் என்னும் மூன்று. சுழுத்தியில் புருடனுடன் அகங்காரம் ஒன்று மட்டும் பொருந்திச் செயல்படும்.

2202. சாக்கிரத்தில் நனவு நிலையில் புலன் அறிவு சிறந்து விளங்கும். புலன்களுடன் தொடர்பு இல்லாமல் அவற்றின் வாதனைகளுடன் கூடியிருப்பது நனவில் கனவு நிலையாகும். அவ்வாதனைகளையும் மறந்து நிற்கும்போது நனவு உறக்கம் உண்டகும். எதையும் பற்றிய நாட்டம் இல்லாமை நனவில் பேர் உறக்கம். நனவில் அதீதத்துச் சிவானுபவம் ஒன்றே.

2203. கனவில் நனவு போல் காண்பது கனவில் நனவாகும். எல்லாவற்றையும் கண்டு அவற்றை மறப்பது கனவிலே கனவாகும். எல்லாவற்ரையும் கண்டும் காணாதிருப்பது கனவில் உறக்கம் ஆகும். கனவில் கண்டவற்றைக் கொண்டு காணாதவற்றை அனுமானத்தால் அறிவது கனவில் பேர் உறக்கம் ஆகும்.

2204. உறக்கத்தில் நனவு என்பது எதுவும் தோன்றாமல் உறங்குவது. உறக்கத்தில் கனவு என்பது ஆன்மா தன் இருப்பை மட்டும் தோன்ற விளங்குதல். உறக்கத்தில் உறக்கமாவது அறிவு அறிவால் அழிதல். உறக்கத்தில் பேர் உறக்கம் கூற இயலாத சூன்யம் ஆகும்.

2205. துரியத்தில் நனவு எனக் கூறப்படுவது நன்மையைத்தரும் சிவ உணர்வில் நிற்பது. துரியத்தில் கனவு என்பது தலைக்குமேல் சீவனை அண்டாகாயத்தில் அறிவது. துரியத்தில் சுழுத்தி என்பது தலைக்குமேல் உள்ள நிராதார வானத்தில் பொருந்துவதாகும். துரியத்தில் துரியம் என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்தபோது தன்னைப் பரமாக உணர்வது.

2206. ஆன்ம அறிவு சிவ அறிவில் கூடி அறிவதை உணரும் நிலை அதிதீதத்தில் விழிப்பு நிலையாகும். அங்ஙனம் அறியும் அறிவு அறியும் இயல்பு மடங்கிச் சிந்தனை நீங்கியிருப்பது அதிதீதத்தில் கனவு ஆகும். ஆன்ம அறிவு சிவ அறிவில் அடங்கி அறிவதை விட்டு அதுவே தானாய் நிற்பது அதீதீதத்தில் சுழுத்தியாகும். தன் அறிவு வேறாக இன்றி இதைஅறிவாகவே ஆகும்போது அதிதீதத்தில் துரியம் ஆகும்.

2207. பரகாயம்போல் எங்கும் விளங்கும் நிலையை அடைந்தவன் ஐந்து மலங்களிலிருந்தும் விடுபட்டு ஞானமே தன் வடிவாய்ச் சிவத்தை விரும்பி அடைந்தவன். தான் எங்கும் நிற்கிற இயல்பையும் விட்டு மேலாய் விளங்கும் நுண்மை நிலையான பிரணவ உடலை எய்துவான்.

2208. முப்பத்தாறு தத்துவங்களுள் இருபத்தைந்து நீங்கிய போது சாக்கிரமும், ஆறு நீங்கிய போது கனவும், ஐந்து நீங்கியபோது சுழுத்தியும் முடிவை அடையும். இவையே நனவில் கனவு, கனவு உறாக்கம், ஆகும். பின்பு தூலமும் சூக்குமமும் சுத்தமயையாம். அத்துரிய நிலையில் தத்துவங்களுக்குத் தலைமை தாங்குபவனாய்தான் அவன் நிற்பான்.

2209. இந்த உண்மையை இவ்வளவு காலம் நான் அறியவில்லை. இதை உணர்ந்த பின்பு வேறு அறிவதற்கு எதுவும் இல்லை. அகண்ட வடிவான சிவமே முதல் என்றும் அஃது அறிவுக்கும் அறிவுருவாகும் என்றும் அறிந்தபின்பு இதுதான் நாம் அடையத் தக்கபேறு என்று அறிந்த இயல்பு உடையவன் ஆவேன்.

2210. சிவபெருமான் உயிருக்கு உயிராகியும் உருவமாகியும் அருவமாகியும் அயலாகியும் அயலிலிருந்து கூடும் பொருளாகவும் அறிவாகவும் எவ்விடத்தும் நிறைந்த பொருளாகவும் விரும்பும் சக்தியாகவும் நாதனாகவும் உலகம் உடம்பு கருவி என்பனவற்றை இயக்காமல் ஒழியின் அவை அனைத்தும் அஞ்ஞானத்தால் அறிவு பெறாது போகும்.

2211. இறைவன் தொன்று தொட்டே ஆன்மாக்களைப் பற்றிய மலமானது நீங்கும்படி ஆன்மாக்கள்மீது வைத்த அருளால் சத்தியுடன் பொருந்தி அவளுக்கு உயிராய் விளங்கி பாசத்தை விளைவிக்கும் ஐந்து மலக் கூட்டத்தையும் முப்பத்தாறு தத்துவ பேதங்களையும் படைத்தான். அவற்றை அனுபவிப்பதற்குரிய உள் கருவியும் புறக் கருவியும் உயிருடனே கூட்டி வைத்தனன்.

2212. சாக்கிரதீதத்தில் ஆணவமலமும் தன் உண்மை என்ற ஆன்மாவும் உள்ளன. சாக்கிராதீதத்துப் பொருந்திய ஒளியில் ஆன்மா சேர ஆஅக்கிரதீதத்தில் பொருந்திய ஆணவமலம் நீங்கப் பெற்றுத் திருவருளைப் பொருந்தி நின்றால் பரத்தின் உண்மை இவர்கலிடம் தங்கி நிலைக்கும்..

2213. ஆன்மாவுடன் மலம் கலந்திருப்பதால் சிவதத்துவம் விளங்கும் மாமாயை மறைந்துள்ளாள். மலத்தின் கலப்பால் தெளிவான ஞானம் விளங்கவில்லை. மலக் கலப்பாலே சிவனும் மறைந்திருந்தான். ஆன்மாவிடம் பொருந்திய மலக்குற்றம் அகன்றால் சுத்த வித்தை விளங்கும். மதி மண்டலம் ஒளி பெற்று விளங்கும்.

2214. நன்மை தீமை என்பனவற்றைப் பிரித்து அறிய இயலாத சிந்தையில் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று சிங்கங்கள் இருக்கின்றன. விடயங்களை மகிழ்ச்சியுடன் போய்ப் பற்றி வஞ்சகமாய் அவற்றை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும் அந்தக் கரணங்கள் என்னும் நரிக்குட்டிகள் நானகு உள்ளன. வெளிப் பொருளை அனுபவிக்கும் முறையில் வகைப் படுத்தி அனுபவிக்க முயலும் பொறிகளான யனைக் கன்று ஐந்து உள்ளன். வெளியிலும் உள்ளேயும் செலுத்துகின்ற இரு தன்மைகள் மனத்துக்கு உண்டு.

2215. பத்து வாயுக்களும் புரியட்டகமும் பொருந்திய உடம்பு வெளியுலகில் விரும்பிச் செல்லச் சிதறுண்டு எழும் உள்ளத்தை நீங்கள் அப்படி கேடு அடைந்து உடம்பு அழியும் முன் இறைவனை அடையும் உண்மை நெறியைப் பற்ரி நின்றால் மேலே கண்ட பதினெட்டும் அதிர்ச்சியை அடைய ஒப்பில்லாத ஆன்மாவின் தலைவனான சிவபெருமான் வெளிப்படுவான்.

2216. நனவில் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் பத்தும் அவற்றின் செயல்களான பத்தும் நீங்கக் கனவில் புகுந்து அந்தக் கரணங்களுடன் முன் மூளையிலிருந்து சிந்திப்பதையும் வைத்து உள்ளம் என்னும் மனமண்டலத்தில் நிலைத்தால் நினைவு இராது. அப்போது ஆன்மா நின்மல-சுழுத்தியில்- உறக்கத்தில் பொருந்தும்.

2217. நின்மல உறக்கத்தில் பொருந்திய ஆன்மா குருவருளால் துரியாவத்தையில் பொருந்தி உலகில் நியமம் தாரணை முதலிய நிலைகளைப் பெற்றுத் துரியாதீதத்தில் துரியாதீதமான சமாதி நிலையில் கூடிச் சிலகாலம் தங்கிச் சென்று பரன் என்?ற பெயரைப் பெற்று மலநீக்கம் பெற்ற தூய ஆன்மாவாகும்.

2218. பரநிலையை அடைந்தவன் எல்லா அறிவும் பெற்று அனைத்து உலகும் ஒருசேர அனுபவித்து சதாசிவமான பெருமையுள்ள சத்தியின் திருமேனியான ஐந்தும் போய் அவற்றைக் கடந்த சிவனாய் பிரணவ உடலை அடைந்து சுயம்பிரகாச ஒளியாய் விளங்குவான்.

2219. உடலுள் உள்ள சந்திரன் ஞாயிறு, அக்கினி என்னும் மூன்று மண்டலங்களுள் மாயத்தைச் செய்கின்ற பெருமானைக் கண்டு உள்ளே எண்ணி நீங்கி மலர்ந்து விளங்கும் சகசிர்ரதளத்தைக் கடந்து மேலே போனபோது அண்டம் யாவும் தானாகவே உள்ளத்துள் விளங்கும்.

2220. ஞானெந்திரியம் எனும் பறவைகள் தங்களுக்கு ஒளிவரும் இடம் அறியாது திகைத்தன. திருவரு/ள் சத்தி இவர்தம் அறியாமையைப் நோக்கி உதவி செய்ய இயலாமல் மயங்கினள். எம் இறைவனான சிவன் இத்தகைய அறியாமையை உடையவரை மாற்றிட வகையறியாமல் உதவி செய்கின்றான். ஆயின் உண்மையை உணர்ந்தவர் தம் தலையில் அகலாமல் சிவத்தை துதித்துக் கொண்டு விளங்கினர்.

2221. சிவம் விளங்கும் நுண்மையை அறிந்து அறு ஆதாரங்களையும் மூன்று மண்டலங்களையும் செர்த்து ஒன்பது பிரிவுகளும் உடலுள் பொருந்துவதை அறிந்தேன். புவனங்கள் எல்லாவற்றுக்கும் தலைவனான பரம் பொருளை நாடி ஒன்பது மண்டலங்களையும் திருத்தி அமைத்தேன். சிவனை உள்ளத்தில் வருவிக்க அறிந்தேன். அவன் என் மனத்தையே பொருந்தி நிலையாய் நின்று விட்டான்.

2222. .உலகத்தில் உள்ள விளக்கை எண்ணெய் வார்த்துச் திரியிட்டு தூண்டுபவனின் செயலைப் போன்று மூலாதாரத்தில் உள்ள அக்கினி மண்டல ஒளி மூல சாதனையாய் ஆகும். அங்ஙனம் தூண்டப்பட்ட மூலாதாரத்தில் உள்ள அந்த ஒளி மற்றக் கதிரவன் சந்திரன் மண்டலங்கள் என்பனவற்றைக் கொண்டு பேரொளியாய் விளங்கும்.

2223. உள்நாட்டம் உடைய ஐம்பொறிகளை உடையவர்க்கு மண்டைக்கு மேலாக விளங்கும் மேல்முகமான சகசிரதளத்தில் வான் மண்டலத்தை ஆராயின் மேல் நோக்கிய அகத்தில் ஐம்பொறிகளும் கூடிய சத்தியில் அது கண்ணால் உள்ளத்தில் நாடிக் காண்கின்ர தனமை உடையது.

2224. எளிய க்ண்ணுக்குப் புலப்படாத பொருளையும் சிவன் அறிவான். சிவத்தைப் பொருத்தி அறியும் அறிவை அடையாதவன் தன் அறிவு நிரம்பியவன் ஆகமாட்டான். நிரம்பிய அறிவில்லாமல் ஐந்து அவத்தை படும் சீவனைத் தன்னோடு சேர்த்து அஃது அறியாமல் கண்காணித்து வரும் பேரறிவுடைய சிவனை அறிபவர் யார்.

2225. நின்மல சக்கிரத்தில் துரிய நிலையைப் பற்றிச் சொன்னோம். துரியாதீதம் உண்டாவது அரிதாகும். சாக்கிரம், கனவு, சுழுத்தி ஆகியவை கழியத்தக்கன. பின்பு துரியத்தில் காலபரமானது மிகப்பெரிய நிலையாகும். அரிய துரியாதீதம் மிகவும் கடந்த நிலையாகும்.

2226. அசுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா அதன் பகுதிகளில் நிலைகொண்டு பொருந்தும். சுத்த மயையில் ஆன்மா சிவ தத்துவத்தை அறிவதில் பொருந்தும். இவ்வுண்மையை அறியாத சகலர் கேவலாவத்தையைச் சேர்ந்து பல யோனிகளில் புகுந்து வருந்துவர். சுத்த மாயையுள் பொருந்தியுள்ளவர் நின்மலத் துரியத்தைக் கண்ட சீவனாவார்.


#####

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

#####

மத்திய சாக்கிராவத்தை!

2167. விழிப்பு நிலை விழிப்பு நிலையில் திரோதன் சத்தியால் ஆன்ம விளக்கம் அறிய இய்லாதபடி மறைக்கப்பட்டு நிற்கும். விழிப்பு நிலையில் கனவு நிலையில் ஆன்மா மாயா காரியங்களில் அழுந்தி நிற்கும். விழிப்பு நிலையில் சுழுத்தியில் உறக்கத்தில் கருவிகள் ஓய்வு அடைந்து விரும்பியதில் அதுவாக நிற்கும். விழிப்பு நிலையில் துரிய நிலையில் விரும்பிய பொருளில் அதுவாக நிற்றலை இழந்து மாயை வயப்பட்டு நிற்கும்.

2168. மாயை ஆன்மாக்களுக்குக் கலை முதலியவற்றைத் தூண்டி எழுப்பும். அதனால் இராகம் முதலியவற்றுக்கு ஏற்பச் சீவதுரியம் பொருந்தும். பின்பு சுழுத்தி கனவு நனவு ஆகிய நிலைகளைப் பொருந்திச் சகல நிலையில் உள்ள ஆன்மா ஆயினான்.

2169. பிறவியிலே குருடனும் இடைக்காலத்தில் குருட்னானவனும் என்னும் இருவரும் நடந்து செல்லும் போது முன்பு போன வழியை அறிந்து பொருந்திய தடியைச் கொண்டு வழியை அறிந்து நடப்பர். அங்ஙனமே மூன்று வகைப்பட்ட உயிர் இனங்களும் செயலில் பொருந்தும்.

2170. சிலந்திப் பூச்சு தான் கட்டிய வலையின் நடுவுள் பொருந்தியிருந்து நெருங்கி வரும் உயிர் இனங்களைப் பிடித்துத் தின்னும். அதைப் போல சிவபெருமானும் ஐம்பொறிகளும் வந்து பொருந்தும் மூளைப் பகுதியில் உடன் இருந்து சத்தம் முதலிய புலன்கள் ஐந்தையும் அனுபவிக்கின்றான்.

2171. வைக்க வேண்டியபடி இருபத்தைந்து தத்துவங்களைச் சாக்கிர நிலையில் வைத்து அவற்றையே உபாயமாகக் கொண்டு பொருந்தி எங்கும் உள்ள சிவன் பொருந்தியிருக்கின்றான். நான் அவனை பித்தன் என்றும் பெரியன் என்றும் பிறப்பில்லாதவன் என்றும் எப்போதும் விரும்பிப் போற்றி அவனது அருளைப் பெற்று உய்தி பெற்றேன்.

2172. ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்குடன் புருடன் என்ற தத்துவத்துக்கு வேறாக உள்ள இருபத்தைந்துடன் ஆன்மா, பிரமம், சொல்ல முடியாத வானம் என்பவனவற்றைச் சிறந்த தத்துவங்களாகப் பிரமவாதிகள் கண்டனர். இவ்வாறு வேறான இருபத்தெட்டும் வேதாந்ததுக்குரிய தத்துவங்கள் ஆகும்.

2173. ஆன்மா பொருத்தமாக உடலுள் இடைகலை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருந்தி அங்குச் சத்துவ குணத்துடன் புகுந்து மூலாதாரம் முதலாக மூன்று முடிச்சுகளையும் கடந்து கலாதீதப் பொருளான சிவபெருமானின் திருவடிகளைக் காணலாம்.

2174. பத்து நாடிகளுள் நன்மையைத் தரும் பிராணன் முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக மேலே செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி இருக்கும். காமப் புணர்ச்சி பெறும் இன்பமும் நன்மையை நாடிய மனமும் இவ்வுட்லில் பொருந்தும்.

2175. ஆக வேண்டியவை ஆகும். போக வேண்டியவை போகும். வரவேண்டியவை வரும். ஆதலால் காக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு அனுபவத்தைத் தந்து சாட்சியாகக் கண்டிருப்பான். அதலால் இறைவன் தக்கபடி செய்யும் அருளாளன் ஆவான்.

2176. பத்துப் பொறிகளுடன் தொழில்கள் பத்தும் நான்கு அந்தக் கரணங்களும் இவை பொருந்திய சீவனும் தலையில் மோதும் பிராணனும் உண்மையான வானமும் மேல் முகத்தில் விளங்கும் பிரமமும் வேதாந்தத் தத்துவங்கள் இருபத்தெட்டு என எண்ணத் தக்கவனவாம்.

2177. விளக்கம் உடைய முப்பதுடன் பத்தாகிய முந்நூற்றைச் சேர்த்து அறுநூற்றை வன்மை ஆறை இரட்டிய முப்பதாறுடனே பெருக்குவதால் வரும் சுவாசம் 21600. மூச்சு நடந்தால் ஆணவம் முதலிய மலங்களும் வணங்கி நீங்கும் மூலவாயு மேல் எழுந்து விலங்கும்போது தத்துவஙகளும் அங்கங்கே நின்றிடும்.

2178. தத்துவங்களை வெவ்வேறாகக் கணக்கிட்டால் அவை நான்கு கோடியே நாறபத்தொண்ணாயிரத்து ஐந்நூறு என்று சிறப்பாய அடங்கும். அவற்றைப் பகுத்து தொகுத்தால் தொண்ணூற்று ஆறுள் அடங்கும். அவற்றை மேலும் சுருக்கினால் இருபத்தைந்துள் அடங்கும்.

2179. மாயையின் காரியம் ஆன தத்துவங்கள் பொதுவாகத் தொண்ணூற்று ஆறு ஆகும். அரிய சைவர் கொண்டுள்ளது முப்பத்தாறு தத்துவங்கள் வேதாந்திகளுக்கு இருபத்தெட்டு தத்துவங்கள் வைணவ சமயத்தார்க்கு இருபத்து நான்கு தத்துவம் மாயாவதிக்குரிய தத்துவம் இருபத்தைந்து.

2180. தத்துவங்களைத் தம் வசம் அடங்கி நிற்கும்படி செய்தால் மிகவும் சமர்த்தன் உடையவனாக விளக்கம் பெற்று விளங்கலாம். பிராண வெற்றி மற்றப் பொய்யான நெறி அகன்று விடும். அதை உணர்த்தும் நெறி அகார எழுத்து அறிவாகும்.

2181. முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மா பொருந்தாத போது அறிவற்றவை. அங்ஙனமிருந்தும் அவற்றை அறியும் என்னை நான் அறியாமல் இருந்தேன். என் குரு நீ அதை அறியும் ஆற்றல் வாய்ந்தவன் என்று உரைத்தான். அதனால் நான் அதை அறியும் ஆற்றல் உடையவன் என்பதை உணர்ந்தேன்.

2182. நனவில் நனவு முதலிய அவத்தையில் சிவ தத்துவம் ஐந்தும் பொருந்தும். அவற்றை மலத்தைக் கார்ணமாக உடைய இந்த நனவு முதலிய ஐந்து அவத்தைகளால் போக்கி இவற்றுடன் பொய்யான முப்பத்தாறு தத்துவங்களையும் அகற்றி ஆன்மா பிரணவநெறி நின்று சிவத்துடன் பொருந்தி நிற்கும்.

2183. நான்முகனுக்கு ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் உள்ளன. திருமாலுக்கு ஆணவம், கன்ம, மாயை திரோதாயி என்னு நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம் கன்மம் திரோதாயி என்ற மூன்று மலங்கள் உள்ளன. மகேசுவரனுக்கு ஆணவமும் திரோதாயும் உள்ளன. சதாசிவனுக்கு ஆணவம் ஒன்று மட்டும் உளது

#####

அத்துவாக்கள்!

2184. மெய்கள்- தத்துவங்கள் முப்பத்தாறு மந்திரங்கள் எழுவகையான முடிவைக் கொண்டன. உண்மையில் வழங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். புவனங்கள் இருநூற்று இருபத்து நான்காகும். பதங்கள் என்பவை எண்பத்தொன்று. கலைகள் ஐந்து இவை படைப்பில் வந்தவை.

2185. திங்கள் கதிரவன் அக்கினி மும்மண்டலங்களின் நன்மையை அறிந்து மூலம் முதலாக மேலே செல்பவர் தங்களுடன் உடம்பில் உள்ள இருபத்தைந்து தத்துவங்களை அறிந்து கூடுவர். அவ்வாறு கூடிச் சகசிர தளத்தில் மேல் ஏறும் வழியை அறிந்து போய்த் தேடி அடைந்தபின் தத்துவங்களின் வழிச் செல்லாதவராய் விளங்கினர்.

2186. சாக்கிரத்தில் சாக்கிரம் முதலிய நிலைகளில் சிவ தத்துவ உணர்வை முதன்மையாகக் கொண்டு இந்தப் பருவுடலில் எல்லையான பிரமரந்தரம் வரை போய் அதன் மேல் உள்ள துரியாதீதம் ஆன துவாதசாந்தப் பெருவெளியில் கலந்து அன்பு வடிவான ஆனந்தக் கூத்தை கண்டு அந்த இன்பம் விளங்கும் சுத்த வித்தை முதலிய ஐந்தும் ஆன்மா சிவசத்தியோடு கூடிப் பொருந்தியிருக்கும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 11:16

அவத்தை பேதம்- கீழாலவத்தை!

Written by

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

#####

அவத்தை பேதம்- கீழாலவத்தை!

2142 இருபத்தைந்து கருவிகளுடன் சிவன் புருவ நடுவில் உள்ளபோது விழிப்பு நிலை ஆகும். பழகிய பதினான்கு கருவிகளுடன் சிவன் கழுத்தில் தங்கும்போது கனவு நிலையை அடையும். அழிவில்லாத புருடன் இதயத்தைப் பற்றியுள்ள போது உறக்கம் ஆகும். அழியாதவனான ஆன்மா உந்தியில் பொருந்தும்போது துரியம் ஆகும்.

2143. சாக்கிரத்தில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவதத்துவம் ஐந்துமாக அவற்றை அடுத்துக் கூறப்படும் கனவு நிலையில் மகேசுவரம் சாதாக்கியம் சத்தி ஐவம் என்ற இரண்டும் துரியாதீதத்தில் சிவம் ஒன்றுமாக அச்சிவம் முதலாய் தொழிற்படும். இப்படி சுத்தவித்தை முதலாகச் சிவம் ஈறாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

2144. ஞானேந்திரியம், கன்மேந்திரியம் பத்தும் அவற்றின் விடயங்களான சத்தாதி வசனமாதி பத்தும் மறை பொருளாக உள்ள் வாயுக்கள் பத்தும் அந்தக்காரணங்கள் நான்கும் இவற்றுடன் ஆன்மாவும் கூட முப்பத்தைந்தும் பந்தத்தைச் செய்கின்ற சாக்கிராவத்தையில் உள்ளனவாகும்.

2145. மண்ணின் நிறம் பசும் பொன் நிறம் நீர் வெண்ணிறம் உடையது தீ செந்நிறம் வாய்ந்தது. மேகம் போன்ற் கரிய நிறம் கொண்டது காற்று வானம் புகை நிறம் பொருந்தியது இவ்வகைப்பட்ட நிறங்களில் ஐம்பூதங்களும் மறைந்து நிற்கும்.

2146. ஐந்து பூதங்களும் ஐந்து பொறிகளும் உயிரைக் குற்றம்படச் செய்த புறக்கருவிகள் இவற்றுடன் சொல்லப்படும் மலம் காரணமாக விளையும் குணம் முதலாகக் கொண்ட சாக்கிராவத்தைக்குரிய கருவிகள் தொண்ணூற்றாறாகும்.

2147. சாக்கிரவத்துக்குரிய இடத்தைக் கூறுமிடத்து ஆன்ம தத்துவமான இருபத்தைந்து யானைகளும் வசனாதியாதியான காலாட்படையும் சத்தாதியான ஐந்து குதிரைகளும் புருடனும் ஆக முப்பத்தாறும் புருவ நடுவுள் பொருந்தும். வைகரியாதி வாக்குகளும் போய் அடைய நெடிய வாயில்க?ள் ஒன்பதாம்.

2148. பிராணவமய கோசமும் ம்னோமய கோசமும் அன்னமய கோசத்தைத் தழுவி நின்ற உடம்பில் உள்ள உயிரின் இயல்பை அறியார் உடம்புக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பை அறியாதார் ஆவார். அவர்கள் மடத்தின் புகுந்த நாய் அலைவது போல் மயங்குவர்.

2149. அறிவிலிகள் உடலை நெடுநாள் வைத்திருக்க அறிய மட்டார்கள். ஆனால் உள்முகமும் வெளி முகமும் ஆகச் சென்று கொண்டிருக்கும் பிராண அபானனது இயக்கங்களை மாற்றி உள்மூகம் ஆக்கி விந்து வெற்றி பெற்றுச் சுழுமுனை வழியாகச் சிவனை அடையும் வழியை உணர்ந்து ஒளி வடிவாய்ப் பெற்ற உடல் என்றும் அழியாது நிலைத்திருக்கும்.

2150. கொப்பூழில் அடங்கியிருக்கும் அகரக்கலை சிறிது சிறிதாகப் பதினான்காவதான அநாசிருதையாக மாறும் உபாயத்தை என்னுள் சிவன் விளங்கி எனக்கு கூறியருளினான். அங்ஙனம் அளிக்கும் கலை ஞானத்தால் பொதுவான அறுபது தத்துவங்களையும் ஒளியில்லாமல் ஒன்றிய உள்ளத்தில் ஒளித்து வைத்தான்.

2151. மண் தத்துவமான சுவதிட்டான சக்கரத்துக்கு அருகில் நீரை முகமாகக் கொண்ட மணிப்பூரகம் உள்ளது. அந்த சுவாதிட்டானத்துக்கு அருகில் பொன் போன்ற மூலாக்கினியும் உள்ளது. இவ்விடத்துள்ள மூல வாயு மேலே போய் வானத்தைப் பொருத்தும். அப்போது மனம் புத்தி அகங்காரம் என்பனவற்றை நினைத்துக் கடந்தால் பூத வெற்றி உண்டாகும்.

2152. முதல் பூதமான வானுக்கு ஓசை என்ற ஒருமகன் அதினின்று உருக்கொண்ட காற்றுக்கு ஓசையும் ஊறுமான இரு மக்கள். காற்றினின்று வந்த தீயினுக்கு ஓசை, ஊறு, உருவம் என்ற மூன்று பிள்ளைகள். பின்பு நீர் என்ற பெண்ணுக்கு நான்கு பிள்ளைகள். கன்னியான பூமகளுக்கு ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்னும் ஐவர் மக்கள். இத்தகைய பிள்ளைகள் சிவத்துக்கும் சத்திக்கும் முதலில் இல்லை. அப்பெருமாட்டியே படைப்பைக் கருதியபோது ஐந்து பிரிவாய் பிரிந்து அவற்றின் வேறாயும் அவற்றின் ஊடேயும் நின்றாள்.

2153. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்களால் பெற்ற காட்சி ஐந்தும் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்?ற அந்தக்காரணம் நான்கும் ஒரு சேரக் கண்டபின்னர் பழைய மேலான விழிப்பு நிலையில் உலகமே தனாய் ஆன்மா நிற்கும்.

2154. அப்படி நின்றவன் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் பத்தையும் விட்டு ஒருமையுடைய அந்தக் கரணங்கள் நான்குடன் புருவ நடுவில் இந்தவுடலால் அனுபவித்த வாசனா ரூபமானவற்றை ஒளி மயமாகக் கழுத்துக்கு மேல் கனவாகக் கண்டான்.

2155. ஆன்மா முன் சொல்லப்பட்ட கண்ட தானத்தை விட்டுச் சித்தம் ஒன்றுடன் தனியே இதயத்தில் புகுந்த அகங்காரமும் தன் வலிமை குன்றிப் புத்தி தத்துவமும் கெட்டு ஒன்றையும் அறிய மாட்டாது மயக்கம் அடைந்து உலகத்தை அறியாத வியந்த நிலையில் உடல் தன்வசம் அற்ற நிலையில் கெடுதல் சுழுத்தியாகும்.

2156. உறக்கத்தின் நிலைக்களமான நெஞ்சத்தில் பிராணனும் சித்தமும் புருடனும் ஆகிய மூன்றும் தொழிற்படும். சித்தம் பிராணன் ஆகியவற்றால் உண்டான அறிவு நீங்க உந்திக் கமலத்தின் உள்ளே இருந்து பெருமையுடைய மூலப் பிரகிருதியுடன் புருடன் பொருந்தி இருந்தான்.

2157. கொப்பூழ்த் தாமரையை விட்டுக் கடந்து மூலாதாத்துத் துரியாதீத நிலையில் வான் மண்டல்த்துக்குப் போய் பூமியை விட்டு நாதமயமான சங்கற்ப வாசனையும் கடந்து உடலின் காரியமான அவத்தையை விட்டு ஊமனான ஆன்மா நின்றான்.

2158. பேச இயலாத எழுத்தான மகாரத்துடன் பேசும் எழுத்துக்களான அகார உகாரங்கள் பொருந்தில் ஆன்மா அதன் உறுப்புக்கள் அடங்குபவன் போல் ஐம்பொறிகளும் தொழிற்படாது அடங்கி விடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளி பெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெடும். அதனை நாம் அறியமாட்டோம்.

2159. பிரணவ யோகிகளின் துரியம் நின்மலச் சாக்கிரம் ஆகும். அங்குள்ள நீல் ஒளியில் வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரிய கன்மேந்திரிய அந்தக் காரணங்கள் செயற்படாமல் அடங்கி விடும். வேகமுடைய மூலவாயு வேகமாய் ஓடி வான் கூற்றை அடையும். இனித் துரியம் கடந்த துரியாதீத நிலை பற்றிக் கூற இயலாது.

2160 .எல்லா உயிர்களும் பக்குவம் அடையும் வரை அவற்றிடம் மறாமல் இருக்கும் ஐம்மலங்கள் சாக்கிரம் முதலிய ஐந்து நிலையை அடையும். உயிரின் வேறான மாயையால் விளைந்த உடல் கருவி முதலிய வற்றுக்கு முடிவு இல்லை. எல்லா உயிர்களும் பிறப்பு இறப்புகளில் அகப்பட்டு முடிவில்லாத வலிய வினையை துன்பம் அடைந்த வண்ணமே இருக்கும்.

2161. வினைப் பயனை நுகர்விக்கும் மாயையானது தன்னை வருத்தாதபடி சிவத்தின் அருளைப் பெற்றதே வீடுபேறாகும் வீடுபேறு அடையாது உயிர் கருவிலேயே திருவுடையவராய் பிறந்து எண்ணத்தக்க ஞானத்தினால் ஏற்படும் ஞானம்.

2162. அநாதி கேவல நிலையில் ஆணவம் சிறிதே கெட அதனால் கருவிகளுடன் கூடிய சகல நிலையில் உணர்வோன் அரிய செயல்களில் பொருந்திய நிலையான கேவல நிலைக்கு இப்படிச் சென்று மேன்மையற்ற ஐந்து அவத்தையை அடைவர்.

2163. பாடம் கற்பிக்கும்போது உறங்கும் மாணவரை அசிரியர் ஒளியுடைய பிரம்பால் தட்டி நழுப்புவர். அதை போன்று நேயப் பொருளான சிவனும் அநாதியாகவே ஆணவமலத் தொடர்புடையவரைச் சுத்த மாயையால் ஒளியை உண்டாகி எழுப்பிவான்.

2164. மேகத்துடன் பொருதிய வான் கங்கை குடத்தில் உள்ள நீரே ஆகும். என்பது அறிவற்றவன் மிக்க அறிவுடையவன்போல் சொல்லும் கூற்று. குறைவு இல்லாத பிரமமும் ஆன்மாவும் ஒன்று என்பதற்கு மாறாக இந்த உடலுக்குத் தலைவனான ஆன்மா பக்குவப்பட்டு நீங்கும்வரை ஐந்துஅவத்தைக்கு உட்படுக்கொண்டிருக்கும்.

2165. நிலத் தத்துவத்தை இடமாககொண்ட சீவன் மூலவாயுவுடன் பொருந்தி அழகான ஊர்த்துவ சகசிரதளத்தை அடைந்த போது அதற்குக் கீழ் நிலையில் உள்ள பிரமன் முதலிய ஐவரும் அவரைச் சார்ந்தவரும் நாத தத்துவத்துடன் பொருந்தி உறக்கத்தை அடைந்தனர்.

2166. புறக் கண்ணுக்குப் புலப்படாத மலத்தை சத்தாவத்தையில் புலப்படும் வண்ணம் மலக் குற்றத்துக்குரிய காரணத்தை நினைத்து நின்மல சாக்கிரத்தில் கண்களுக்குப் புலப்படாமல் இருந்த ஆணவம் முதலிய ஐந்து மலங்களையும் காட்சியில் கண்டு தமது முகத்துக்கு முன் விளங்கும் சிவத்துடன் பிரியாமல் நிறபதே அழியாத நிலையாகும்.

#####

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!

#####

உடலில் பஞ்ச பேதம்!

2122. உடம்பில் அன்னமய கோசம் என ஒன்று உண்டு. பல வினைகள் எனும் பொருளையுடைய பிரணாமய கோசம் ஒன்றும் உண்டு. இதுவன்றி ம்னோமய கோசம் என்றும் ஒன்று உண்டு.. அறிவு விளங்கும் மனோமய கோசம் உடம்பை விட்டு நீங்கினால் மாயப்பை ஆன இரண்டு உடலும் மண்ணுடன் மண்ணாய் கலந்து விடும்.

2123. சிவன் அமைத்தது தூல சூக்கும என்ற இரு கூறால் ஆன உடம்பு. இதில் சுத்தமான நுண்ணிய உடலைப் பற்றிச் சொல்லும்போது சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் மற்றும் புத்தி மனம் அகங்காரம் ஆகிய எட்டும் ஆன புரியட்ட உடலாகும்.

2124. எட்டில் தன்மாத்திரை களிலிருந்து ஐந்து பொறிகள் அமையும். அவற்றுடன் பொருந்திய புத்தி முதலிய அந்தக் காரணம் மூன்றும் உட்கருவிகள் ஆகும். இவற்றுடன் சேர்ந்த பாசத்தை உணர்வுமயமாய் விளங்கியப் பரு உடலில் கூட்டியும் பிரித்தும் சிவனருள்வான்.

2125. உடல், உண்ட உணவின் சாரம், குருதி, ஊன், தோல், நரம்பு, பொருந்திய எழும்பு, கொழுப்புடன் மூளை பரந்துள்ள சுக்கிலம் என்பனவற்றால் ஆனது. பாழான துரியத்தின் உருவமான மயக்கம் தரும் இந்த உடலை ஒரு பொருள் என்று சொல்ல முடியாது.

2126. சிவபெருமானின் திருவ்டிப் பெருமையை எவர் அறிவார். உடலை இடமாய்க் கொண்டு அவர் திகழ்வதை யார் அறிவார். அறுபது பொதுத் தத்துவங்களுடன் எட்டுச் சிறப்பு தத்துவங்களுடன் விளங்கும் இருவகை உடல்களையும் எவர் அறிவார். அவர் மூலாதாரத்திலிருந்து காப்பதை யார் அறிய வல்லார்.

2127. எட்டுச் சாண் அளவுடைய உடலில் அமைந்த கண் கால் முதலிய உறுப்புகளை அவ்வுடலில் மறைக்கின்ற ஒழுங்கில் நிண வழியாய் அறுபத்தெட்டு வடிவான வான் கூற்றை ஒன்று சேர்க்கின்ற நட்பால் பருவுடலும் அதைத் தாங்கிய நுண்ணுடலும் அமையும்.

2128. பருவுடம்புக்கும் பருவுடம்பல்லாத பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமயமான நான்கு உடம்புக்கும் உயிராக விளங்குவது சீவன் ஆகும். அந்தச் சீவன் பரத்துடன் நீங்காத சிவத்தில் ஒடுங்கும். அந்தப் பிரமமான சிவம் உடல் உயிரில் கலந்து வியாபித்திருப்பதைப் போல் சீவன் ஐந்து கோசங்களிலும் அடங்கியிருந்து தொழிற்படுவதையும் இவற்றைவிட்டு நீங்கும் முறையையும் யார் அறிவார்.

2129. மூலாதாரம் முதற்கொண்டு ஆறூ ஆதாரம் கடந்த சக்சிரதளத்தில் நடு நாடி வழியாய்ப் போய்க் கூடினால் பத்து வாயுக்களும் புரியட்டக உடலும் நன்றாக அடைக்கப் பட்டுவிடும். இவ்வகையான பதினெட்டுக் கலைகளும் சேர்ந்தது தான் சீவன். பரிச உணர்வுடன் கூடிய பருவுடலைக் கருதி நடத்துகின்றது.

2130. உண்மையில் காணப்படுகின்ற உடம்பையும் பொய்போல் காணப்படாமல் பொருந்திய பிராண மய கோசத்தையும் மூலாதாரம் முதலாகச் சொல்லும் சுழுமுனை உச்சியில் விளங்கும் ஒளி உடலையும் மூலவாயு கடக்கின்றபோது இவ்வுடல் காணப்படாது அடங்கும்.

2131. போர்க்குதிரை ஒன்று மிக்க வேகத்துடன் பாய்ந்து மீளல்போல் நுண்ணுடல் அண்மையிலும் தொலைவிலும் போய் மீள்கின்ற ஆற்றல் உடையது. உடலில் உள்ள பல நூலாடைகளை ஒவ்வொன்றாக நீக்கி அணிவதால் அவரது உடம்புக்குக் கெடுதல் வராதது போன்று நுண்ணுடலுக்கு கேடு இல்லாது போய் மீளும் தன்மை கொண்டது

2132. நாகப்பாம்பு தோலை விரித்து விட்டுச் செல்வதைப்போல் முட்டையில் உள்ள குஞ்சு அதை விட்டு வெளிவருது போல் கனவில் கண்டவை நனவில் விளங்காது மறந்து விடுவதுபோல் உடலைவிட்டு உயிர் போகும். சிவனது ஆணையால் உடம்பை விட்டுப் பிரிந்து அதன் தகுதிக்கு ஏற்ப நல்வினை தீவினைகளைச் சொர்க்கம் நரகங்களைப் பொருந்தும்.

2133. எடுத்த உடலின் பயனை அனுபவித்து உடலை விடுபவர் நுண்னுடலில் பொருந்தி நரகம் சொர்க்கப் பயனைத் துய்ப்பர். பழமையான வினை தொடர நுண்ணுடலைப் பற்றிவந்து பிறவுடலில் உலவும் நிறம் பொருந்திய யோகி மீண்டும் தன் உடலில் வந்து புகுவதைப் போன்று உடலை எடுத்துப் பிறந்தும் இறந்தும் பிறவிச் சக்கரத்தில் வருத்தப்படுவர்.

2134. அவனே தான் ஆன அந்நெறியில் நின்று பரம்பொருளைத் தன்னிடம் கண்டவர் உடலுக்கு இயல்பாய் வரும் இயலபை மாற்றிப் பரமம் என்ற மேலான நிலையை அடைவார். இவ்வாறு செய்யாத மற்ற உயிர்கள் அவரவர் வினைகளுக்குரிய பத நிலைகளைப் பெற்றுச் சொர்க்கம் நரகம் அடைந்து மீண்டும் இவ்வுலகில் பிறந்தும் வருந்துவர்.

2135. யோகிச் சிவத்தையே எண்ணியிருப்பதால் உடம்பு சிவதனுவாகும். உடல் தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடல் சிவத்தினுடையது. உச்சித்தலையின் மீது சித்தித்திருக்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் உடலாகும். மோனம் பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மயை ஆகிய மூன்றுமான உடம்பு கெட்டுச் சிவ சாயுச்சியத்தை அடைவர்,

2136. தெளிந்த அறிவினையுடைய விஞ்ஞானகலர்க்கு-ஒரு மனம் உடையவர் ஒன்றே உடம்பாகும். அறிவினைப் பெறும் பிரளயாகலர்க்கு-இருமனம் உடையவர் மாயையே உடலாகும். அஞ்ஞானத்துடன் விளைந்த போக போக்கியமே உடல் ஆகும் உண்மையான ஞானிக்கு அகண்ட சிவமே உடலாய் அமையும்.

2137. உடல் மலத்தால் ஆனது என்று உணர்ந்து இதனை ஒதுக்காத அறிவற்றவர். இதுவே சிறந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த உடலே நன்மை அளிப்பது என்று எண்ணியிருப்பாராயின் இவ்வுலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி வந்து கொண்டே இருக்கும்.

2138. நல்ல மொழியைப் பேசும் வாக்கு வன்மையும் நல்லதையே எண்ணித் தெளியும் மனம் முதலியவும் உடையவர்கள் உள்ளத்தில் மலம் அற்ற சிவன் மெல்ல விளங்கியருள்வான். அங்ஙனம் அல்லாதவற்றைக் கேட்கும் செவியும் பேசும் வாக்கு முதலியனவும் நினைக்கும் மனமும் மெல்லப் பெறுபவர் சிவம் பிரகாசியாது வாட்டம் அடையும் முகம் கொண்டவரே ஆவர்.

#####

உடல் விடல்!

2139. இன்பம் தரும் காமத்தை உண்டாக்கும் பேச்சும் வான் கூற்றில் செல்லும் பிராணனும் அங்கு உண்டாகும் ஓசையும் ஊன் பொருந்திய உடலில் பொருந்தும் மனமும் தலையின்மீது நிலைபெறச் செய்ய உடம்பின் பிரக்ஞையும் போயவிடும்.

2140. அழியும் இயல்பை உடைய ஓர் உடம்பிலே உள்ள செவி, கண் முதலியவை அழியும் இயல்பு உடையவை. கால வயப்பட்டுச் செய்யும் விரதம் அறம், வைகரி வாக்கு, இடைகலை பிங்கலை நாடி ஆகியவையும் முடிவை அடைகின்றன. ஆகவே இவை அழிகின்ற உடம்புக்குத் தக்க துணையாகா.

2141. அரசு இலை போன்று விளங்கும் பெண்களின் இடையில் போகும் காம உணர்வு தனங்கள் பொருந்திய மார்பில் மூழ்கி வருத்தும். அப்படியாயின் மலை போல் அசையாத சிவத்தை முன்னிட்டுச் சித்தித்திருகின்றதாயின் சிறந்த ஒளியுடலைத் தாங்கி நிற்கும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 11:10

எட்டாம் தந்திரம்

Written by

எட்டாம் தந்திரம்

#####

உடலில் பஞ்ச பேதம்! உடல் விடல்!
அவத்தை பேதம்- கீழாலவத்தை!
மத்திய சாக்கிராவத்தை! அத்துவாக்கள்!
சுத்த நனவாதி பருவம்!
கேவல சகல சுத்தம்!
பராவத்தை!
முக்குண நிர்க்குணம்! அண்டாதிபேதம்!
பதினோராம் தானமும் அவத்தை! கலவு செலவு!
நின்மலாவத்தை!
அறிவுதயம்!
ஆறந்தம்!
பதி பசு பாசம் வேறின்மை!
அடிதலை அறியும் நிறம் கூறுதல்!
முக்குற்றம்! முப்பதம்!
முப்பரம்!
பரலட்சணம்!
முத்துரியம்!
மும்முத்தி! முச்சொரூபம்!
முக்கரணம்! முச்சூன்ய தொந்தத் தசி!
முப்பாழ்!
காரிய காரண உபாதி!
உபசாந்தம்!
புறங்கூறாமை!
அஷ்டதள கமல முக்குண அவத்தை!
நவாவத்தை நவாபிமானி!
சுத்தா சுத்தம்!
மோட்ச நிந்தை! இலக்கணாத் திரயம்!
தத்துவமசி வாக்கியம்!
விசுவக்கிராசம்!
வாய்மை!
ஞானி செயல்! அவாவறுத்தல்!
பத்தியுடைமை!
முத்தியுடைமை! சோதனை!

 

திருச்சிற்றம்பலம்

@#@#@#@#@#@#

சனிக்கிழமை, 20 June 2020 12:49

இதோப தேசம்!

Written by

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

#####

இதோப தேசம்!

2102. இறைவனை மறக்கின்ற இவ்வுலக்த்தில் நிலையற்றது உடல். ஆதலால் இறக்கும் காலத்தும் இறைவனை வணங்குங்கள். வாழ்கின்றபோது அலைந்து நிலை கலங்கி அமையும் துன்பங்கள் எல்லாம் தீர்வதற்காக மேலான சிவ நெறியை மனத்தில் கொள்ளுங்கள்.

2103. முடிந்த அளாவு சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்துங்கள். முடிந்த அளவில் உண்மைப் பொருளான சிவத்தை எடுத்துக் கூறுங்கள். சிலர் இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் எங்கும் இருக்கின்றான். ஆதலால் சிவநெறியைத் தேடி அடையுங்கள்.

2104. குலம் ஒன்றே இறைவ்ன் ஒருவன்தான். நல்லவனவற்றை நினையுங்கள் இய்மன் உங்களை நாடி வரமாட்டான். நீங்கள் வெட்கம் அடையாமல் போய்ப்புகும் கதி வேறில்லை. மனதில் இறைவன் எண்ணம் நின்று நிலைபெற அவனை நினைத்து உய்யுங்கள்.

2105. இறைவன் அனைவரும் வணங்கும் கயிலை மலையில் விளங்கும் பேரொளி வடிவானவன். தலையின் நாற்புறமும் விளங்கும் சத்தியோசதம், வாம தேவம், அகோரம், தத்புருடம் என்னும் நான்கு முகங்களுக்கும் நடுவேயுள்ள ஈசான முகத்தினன். நம்பத் தகுந்தவன். உள்ளே போகும் வெளியே வரும் மூச்சுகளை உடைய உடலைப் பற்றி நின்று கூற்றுவனைக் காய்ந்தவன். இத்தகைய சிவனைத் துதித்து நின்று உய்தி பெறுங்கள்.

2106. இந்த உடலை நீத்து இனி ஓர் உடலில் புகுந்து பிறவாதபடி உய்ந்து போகும் நெறியை விரும்புங்கள். எப்போது இவ்வுடல் நமக்கு வந்தது என்று அக்காலத்தை எண்ணி ஆராய்ந்தால் இறைவனின் அருளைப் பெறலாம்,

2107. சீவரின் விருப்பம் செல்கின்ற முறையில் உடனாகும் பொருளானவன் சிவன். அவன் சீவர் பக்குவம் ஆகின்ற காலத்தை அறிந்து இன்பம் அளிப்பவனாகவும் விளங்குகிறான். எனவே இறக்கும் காலத்தும் அவனையே நினையுங்கள் அப்போது அந்தப் பரம்பொருள் பிறவிக் கடலை நீந்தி அக்கரை சேர உதவியாயிருப்பான்.

2108. உடலை விட்டுப் பிரிய இருக்கின்ற இச்சீவனை இதனுள் வாழ்ந்த பயனை அடைய வேண்டின் சாகின்ற போதேனும் சிவனைத் துதியுங்கள். அதனால் சிறப்புடன் சிவநெறியும் தானே வந்து அடையும். பின் பிறப்பு இல்லாத பெரிய உலகத்தை அடையலாம். சாயுச்சியபதம் கிட்டும்.

2109. அடியவர் கூட்டத்துடன் கூடி நின்றும் தனித்து நின்றும் வணங்கி எம் இறைவனின் உடலான பாசறையுள் நின்று அவனது திருவடிகளை வணங்குங்கள். கண்ணாடி போன்ற முகத்தின் முன் உள்ள ஒளியில் நிலைபெற்று அறிவால் தொழுபவர்க்கு கன்றையுடைய பசுவானது பாலைச் சொரிவதுப் போல சிவ ஒளி உயிரிடம் பெருகி நிற்கும்.

2110. உடம்பை விட்டுச் சிவன் நிராதாரம் செல்லும் போது பிரமரந்திரத்தின் நடுவே நின்று சிவனின் விந்து நாதமாகிய திருவடியை வணங்குங்கள். வலிய வினைகள் யாவும் கெடும். அழியாப் புகழை உடைய இறைவன் தேடிவந்து உங்களை தேவர்களுடன் கூட்டி இறவாத பெரு நெறியை அடையும்படி செய்வான்.

2111. காளை ஊர்தியை உடையவனே. சிவஒளிக்கு ஒளியாய் விளங்குபவனே. எம்மை இய்க்கி நடத்துபவனே எனக் கூறி திருநீற்றை அணிந்த அடியார் தேவரைப் போன்றவர். கங்கை அணிந்த சிவந்த சடையை உடைய சிவபெருமானின் விந்து நாதமான திருவடிகளைத் தனியாய் இருந்து தியானிப்பவர்க்கு வினைகள் இல்லை.

2112. ஓயாமல் பிறவியில் பொருந்தி நின்று துன்பம் தரும் பாசத்தில் உழன்று இருப்பவரே. எமது இறைவனை நாடி இன்பத்தை அடையுங்கள். அன்பைச் செலுத்தி தவத்தைச் செய்யுங்கள். அதனால் உண்மை ஞானம் பெற்று இறைமைக் குணத்தை அடைவீர்.

2113. பிறவித் துன்பத்தை போக்கிக் கொள்ள நினைப்பவர்க்கு மேற்கொள்ளத் தக்க உண்மையான தவம் உள்ளது. அடையத் தக்க திருவடியும் உள்ளது. அதனால் கிட்டும் உண்மை நெறியும் ஒன்று உள்ளது.

2114. மூல வாயுவை மேலெழுப்பி அதனுடன் போய் மதி மண்டலத்தை அடைந்தவர்க்கு அக்கினி வடிவான சிவன் இன்பத்தை தரும். அவ்வாறு சேராமல் பிரிந்தவர்க்குத் துன்பம் தருவதான பிறவியைத் தந்துவிடும். மூலவாயுவுடன் மெலே போய் ஆழ்ந்தவர்க்கு அவர்களிடம் தனது சிலம்பு அணிந்த பொன்னடியைக் காட்டி நாதத்தை எழுப்பும். அவ்வாறு சேர்ந்தவர் நாத சம்மியம் செய்வதால் சிவத்தை உணர்ந்திருப்பர்.

2115.0 இறைவன் வீடுபேறாகவும் அதன் வழியான ஞானமாகவும் ஞானத்துக்கு துணை செய்யும் முத்தமிழ் ஓசையாகவும் இருப்பவன். அத்தகையவனை பலகாலம் புறத்தில் வணங்குவர். ஆனால் பாலில் கலந்திருக்கும் நெய்யைப்போல நின்மலச் சிவனும் அவருடன் மறைந்திருப்பான். அத்தகைய சோதிப் பிழம்பான அச்சிவனை உள்ளத்தில் கண்டு வழிபட அறியார்.

2116. தணு கரண புவன போகங்களை உயிர்களுக்கு நியமிப்பவன். இறைவன். அவன் அமைந்தருளிய காலம் எவ்வளவு என்று யாரும் உணர்வதில்லை. பிறப்பிலே வந்து படுவதை தவிர சிவமாகிய பரம்பொருளின் பெருமையை உணராமல் கெடுகின்றனர்.

2117. இங்குள்ள வாழ்வும் எவ்வளவு துன்பம் ஆயினும் இறப்பு வந்த காலத்தில் தூய செம்மணி போன்ற சிவபெருமானை விஞ்ஞானத்து உறையும் விகிர்தனே என்று நைந்து உருகி போற்றுங்கள். பற்றற்ற வரை அவன் அடையான். அங்ஙனம் இன்றேல் அவன் உம்மை அடைய இயலாது.

2118. வஞ்சம் உடையார் நற்குருவை நாடி அடைவராயின் இவ்வுலகத்தில் பஞ்சம் ஏற்படும். அன்னாரைக் கண்டு இறைவனே அச்சம கொள்வான். கொடிய நரகத்தில் அவர்களைச் சேர்ப்பான். வஞ்சம் இன்றி செம்மையான ஒழுக்கத்து நிற்பவரை காண்பதே அனைத்துச் சித்திகளையும் தரும்.

2119. அளவு இல்லாத தேவர்கள் சிவனைக் கிரியை நெறியில் நின்று வழிபட்டனர். அங்ஙனம் அவர்கள் அவனை வழிபட்டு ஆகும் பயன் ஏதுமில்லை. அவனை வழிபடும் நெறியான ஞான நெறியை உபதேசிக்கும் நல்ல குருவை வழிபட்டால சிவனைப் பெறலாம்.

2120. மக்களும் தேவரும் ஆகியவற்றின் பாசத்தை பொருத்தி வினைகளைச் செய்து அழிவதைப் பார்த்து குருவான ஞானி பாசம் நீங்கியவராய் இருப்பானாயின் நீ பரத்துடன் கூடிப் பரமாவாய் என உபதேசிப்பதன்றி மாணவனுக்குக் கூறக்கூடியது ஒன்றுமில்லை.

2121. குருவாக எழுந்தருளி வந்தவன் ஒப்பில்லாத சிவன் ஆவான். அவனிடம் அன்பு கொண்ட மாணவனின் வினைகள் நாள்தோறும் தேய்ந்து ஒழியும். நீரையுடைய நீண்ட சடையை உடைய் இறைவன் வடிவு கொண்டு வந்து ஆட்கொண்ட முறையே வருந்தி வினையைக் கெடும்படி செய்தான்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:47

கேடுகண்டிரங்கல்!

Written by

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

#####

கேடுகண்டிரங்கல்!

2084. ஒவ்வொரு கணத்திலும் தம் வாழ்நாள் கழிவதை அறியாத பாவிகள் வினைகள் என்னும் விதைகளைச் சேமிப்பர். விதை போகத்தை அறுவடை செய்ய உடம்பான நாற்றங்காலில் அந்த விதையை முளைக்கும்படி செய்வர். தமக்குற்ற வினைப் போகத்தால் உண்டாகும் துன்பத்தைச் சற்றும் உணர மாட்டார்கள். அவர்கள் கொழுந்து விட்டு எரியும் தீயில் கெடுவதைப் போன்/றவர் ஆவர்.

2085. வாழ்நாள் திடீரென்று முடிவதைப் பார்த்தும் மக்கள் சாதனை இல்லாமல் வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனை அடைவது. நேர்மை பொருந்திய அகண்டமாகிய் மலம் அற்ற சிவத்தினது திருவடியை வணங்கி ஆதியான இறைவனிடம் அன்புடன் பொருந்தும் நெறியை அறியும் ஆற்றல் இல்லாதவராய் விளங்குவர்.

2086. அறிவற்ற மக்கள் உடலைப் பெற்றேனும் நெல்லைப் பெற்றுக் குத்தி உண்டு கயவராகிய பொறிகளைத் திருப்தி செய்து தம் உடலை வளர்த்து அந்த உடம்பே உயிர் என மதித்து திரிவர். அகன்ற மலைச்சரிவில் தீப்பொருந்திய முருட்டுக் கட்டையில் ஏறி இந்த உடம்பு கிடக்கும் என்பதை அறியார்.

2087. முன் காலத்தில் சனகர் முதலிய முனிவர் நால்வர்க்குக் கயிலாயப் பதியில் சேர்ந்து இருந்து கல்லாலின் மரத்தின் கீழ் இருந்து அறக் கடவுளான குருநாதன் விரைந்து உபதேசித்த சிவத்தை உணராமல் பழிச் சொற்களை பேசும் மக்கள் தம் உயிர் அறிவையே இயல்பாகக் கொண்டு ஒருப்பட்டு நின்றனர்.

2088. நிலையான புகழையும் நிறைந்த தவத்தின் பயனையும் எப்போதும் எம் சிவபெருமான் அடியவர்க்கு அருள்வான். அஃது அறிந்தும் உலகத்தவர் முதற் கடவுள் அது என்றுன் இது என்றும் பேசி நிலை கெடுதலால் குறைவடைந்தனர்.

2089. இன்ப நிலையில் பிறந்து இன்பச் சூழ்நிலையில் வளர்ந்து இன்பப் பொருளான சிவத்தை இன்பம் அனுபவிக்கும்போதே எண்ணுவதை விட்டுச் சிலர் இன்பத்தை விரும்பித் சோறு ஆடை என்னும் துன்பத்துள் நின்று துன்பத்தையே எண்ணிக் கொண்டு அறியாமையில் உழல்கின்றனர்.

2090. பெருவதற்கு அருமையான மனிதப் பிறவியை இறைவனது அருளால் பெற்றிருந்தும் பெறுதற்கு அரிய சிவனது திருவடியைப் போற்றாது இருக்கின்றனர். பெறுவதற்கு அரிய பிறவியைப் பெற்ற மக்கள் எல்லாம் பெறுவதற்கு அரிய இன்பப் பேற்றை இழந்தனர்.

2091. வேட்கை பொருந்திய உள்ளம் அளவில்லாத இளமை அன்பு என்ற இவை ந்ல்ல நிலையில் உள்ள காலத்தில் மாற்றம் தரும் ஓர் உடல் உறவு கொண்டு நிலை பெற்ற மாதவனான சிவனை எண்ணி இன்பம் பெறாமல் இவ்வுலக்த்தவர் கெடுகின்றனர்.

2092. மேல் பாடல் முறையில் இளங்கதிரவன் போன்ற வடிவம் வாய்க்கும். அவ்வாறு அக்கினி மண்டலத்துள் அயர்ந்த தலைவனும் இம் முறையில் சுவாதிட்டான முலாதாரங்களில் விளங்கும் ஈசனுமான இறைவனின் உண்மை இயல்பை இதுவரை விசாரனை செய்யாமல் இருந்தோம் என்னே அறியாமை.

2093. குருவானவர் காட்டிய குறியில் பொருந்திச் சீவனைக் கூடமாட்டார். சிவத்தை நாடி அடைய மாட்டாதவர் நூல்களில் தாம் கண்ட நயத்தைப் பேசித் திரிவர். இறைவன் செய்த உதவிகளை எண்ணி அவனது புகழைப் பாடமாட்டார். வீணாகக் களியாட்டம் ஆடுவதில் வல்ல இவர்கள் எய்தும் பயன் யாது.

2094. உள்ளத்தில் நிறைந்து எழுகின்ற சோதியை நம் செம்பொருளான சிவம் என்று நம் தலைவனை நாள் தோறும் உறங்கும்போதும் துதியுங்கள். அவ்வாறு தொழாவிட்டால் நம் ஐந்து பொறிகளூம் கட்டினை அறுத்துக் கொண்டு திரியும் யானை போல் ஆகும்.

2095. விலங்கு மனிதர் தேவர் பறவை என்பனவற்றால் இறைவனிடம் அன்பு கொள்ளாதவை இல்லை. ஞானத்துடன் பொருந்திய மாதவம் செய்த ஞானியர் சிவத்தை எண்ணுவதுடன் அமையாமல் சிவ அமுதத்தை உண்டு திளைப்பர். மகிழ்ச்சியால் ஓடுவர். இவ்வுலகில் பிறந்ததால் ஆகிய பயனை உறுவர்.

2096. நேர்மையில்லாதவர் தமக்குக் கிடைத்த பொன்னைப் போற்றார். அது போன்ற முறைப்படி இறைவனை பேரொளியாய் அறிந்து போற்றுபவர் இலர். ஆனால் நான் அவனை நாம் பெறுகின்ற முதல் பயன் என்றும் தேவர்க்கு மேலான தேவன் என்றும் அநதி காலம் தொடங்கி மனத்துள் வைத்து அவனையே விரும்புகின்றேன்.

2097. மிக்கத் தேனை உடைய மலரைப் பொருந்தி மகிழ் வதர்காக வண்டுகள் மிகுதியாய் தேனைச் சேர்ப்பதை மக்கள் அறியமாட்டார்கள். சுற்றி வரும் வண்டு நுகராமல் வாயில் வலிய வந்து சொட்டும் தேனும் எல்லாராலும் பெறுவதற்கு அரிய தேனும் போன்றவரான இறைவனை எவரும் உணரமாட்டார்.

2098. இறைவனை அறியும் நெறியை அறியாமல் இத்தனை காலம் வீணே கழிந்தது. வானவரின் தலைவனான அவன் அன்பினுள் இருக்கின்றான். அவன் ஒருவனே உயிர்கள் எல்லாவற்றிலும் உயிராய் உள்ளவன். அவ்வாறு இருந்தும் அறிவற்றவர் அவனைத் தங்கள் அனுபவத்தில் வருவித்துக் கொள்ளாமல் தவறி விடுகின்றனர்.

2099. வாழ்நாளைக் குதித்தோடச் செய்கின்ற கூற்றுவனுக்குச் சார்பாக வரையறுக்கப்பட்ட நாள்களும் பயன் இல்லாமல் கழிந்தன. அதற்கெண நடுக்கம் கொண்டிருந்து என்ன செய்யப் போகிறீர்கள். நீவிர் ஆறுதல் அடைய விரும்பினால் மூலாதாரத்தில் கொதிக்கின்ற கூழில் உள்ள அமுதத்தை பக்குவப்படுத்தி உண்ண அகப்பையை இடலாம்.

2100. இடைகலை பிங்கலையாகிய கரைபக்கம் சுக்கிலமாகிய வயல் விளைந்தது. சுக்கிலத்தின் வளமை சுருங்கிக் கெடுவதற்கு முன்பு அச்சத்தியைப் பயன்படுத்திப் பேரின்பத்தை அடையுங்க்ள். குண்டலினி சத்தி மேல் முகமாகத் தலையை அடைந்து இன்பம் ஊறுகின்ற தவத்தைச் செய்தால் மயிர் நரைத்து முதிர்ந்த பருவம் இல்லாமல் நீங்கும்.

2101. உயிர்க்ள் எல்லாம் உடலுடன் கூடித் தோன்றும் ஆதிப் படைப்பை அறிபவன் அறியாமை உடைய அவ்வுலகத்தில் அதன் தன்மையை அறிபவன், தானே எழுந்து விளங்கும் சோதி இத்தகைய இறைவனைக் குண்டலினி யோகம் பயின்றவர் முன் விளங்கும் ஒரு தெய்வம் என்?று அதை அடைய வகை அறியாமல் இருள் மிக்க உலகத்தில் ஆசை வைத்துக் கெடுகின்றனர்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:46

கூடாஒழுக்கம்!

Written by

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

கூடாஒழுக்கம்!

2067. உலகத்தவர் தாம் செய்வனவற்றை மேற்பார்வை பார்ப்பவர் இல்லை என்று பல வகையான வஞ்சகச் செய்ல்களைச் செய்வர். எல்லோரையும் மேற்பார்வை செய்யும் இறைவனான க்ண்காணி இல்லாத இடம் ஏதுமில்லை. உலகத்தார் செய்வனவற்றை மேற்பார்வை செய்து எங்கும் நிறைந்து விளங்கும் இறைவனைக் கண்ணை இடமாகக் கொண்டு பார்த்தவர் தாம் செய்யும் வஞ்சகச் செயலிலிருந்து நீங்குவர்.

2068. கரிய கண்டத்தையுடைய சிவன் செழுமையான கடல் சூழ்ந்த உலகில் பொய்யானவற்றையே பேசித் திரியும் மக்கள் உண்மைப் பேசுவராயின் தேவரும் வழிபடும் தன்மையை அளிப்பான். இவ்வுலகத்தைப் படைத்த அவ்விறைவன் பொய்யையும் மெய்யையும் நன்கு அறிவான்.

2069. பக்தியை விலை கூறி விற்றுப் பகல் பொழுதைக் கழிக்கின்ற மதம் கொண்டவர்க்கு மறுபிறப்பு அமைந்துள்ளது அன்றோ.. பிறப்பை உண்டு பண்ணும் காமம் முதலிய விதையை நசுக்கிக் கழுத்துக்குக் கீழே உள்ள பகுதியான வினை புல்த்தைக் கெடுத்து தரிசாக்கும் இறைப்பித்த்துக் கொண்டவர்க்கு என்றும் பிறவியான பயன் விளையாது.

2070. பௌராணிகர் வடக்கே உள்ள மூர்த்தி தலம் தீர்த்தம் என்பவை பெருமை உடையவை என்பர். வடக்கே உள்ளது ஏதுமில்லை. என்றாலும் அறிவற்றவர் மற்றவர் அங்குப் போகும்படி தூண்டுவார். வடக்கே உள்ள பதிகள் எல்லாம் ஞானியின் உள்ளத்தில் அடங்கியுள்ளன.

2071. இறைவன் உயிரை உடலுடன் சேர்த்து வைப்பவன். உடம்பையே தான் வாழும் நாடாய்க் கொண்டவன். உடலுக்குள் இருந்து வெளிப்படும் குரு மண்டலத் தலைவன். இத்தகைய இறைவனை நாட்டில் எங்கும் தேடி அலைவார்கள். அவன் அவரவர் உடலுலும் பொருந்தி விளங்குகின்றான். இதனை அறியவில்லையே.

2072. இறைவன் மேற்பார்வை செய்பவனாக மூலாதாரத்திலிருந்து எழுகின்ற தீயில் உள்ளான். மேற்பார்வை செய்பவனாக அவரவர் உடலிலும் உள்ளத்திலும் உள்லான். அவ்வாறு விளங்கி அவரவர் உடலிலும் உள்ளத்திலும் கலந்து நெறிப்படுத்துவான். சிவத்தின் பால் பக்திகொண்அ உயிர்களுக்கு அவர்களைக் கண்காணித்து நடத்தும் காதலன் ஆபவனும் அவனே.

2073. காமத்திற்கு காரணமான கன்னியர் வலையில் விழுபவர் ஒரு வகையில் சிறைப்பட்டவர். மறைகளை ஓதுபவர் ஒருவகையில் சிறைபட்டவர். உடம்பை வருத்தித் தவம் செய்பவர் ஒருவகையில் சிறைப்பட்டவர். தத்துவ விசாரனையால் அனுபவம் இன்றித் தன்னையும் தலைவனையும் உணர முற்படுவோர் ஒருவகையில் சிறைபட்டவர். இவ்வகையினரான நாலவரும் இறைவன் இயல்பை அறியாதவர்கள் ஆவார்கள்.

2074. மறையும் காண இயலாத படலத்தால் மூடப்பட்ட கண்ணுக்கு இருளே அதன் ஒளி. சிவ ஒளி எங்கும் பரவியிருந்தாலும் அந்த ஒளியானது சாதாரண மக்களால் காணப்படாததாகவே உள்ளது. காணாதவர்கட்கு அகக் கண்ணாய் இருந்து காட்டும் பெருங் கண்னொளியாகும். கடவுளை ஊனக் கண்ணால் காணாமல் ஞானக் கண்ணால் பார்த்தவர் தாம் செய்யும் களவு ஒழுக்கத்தினின்றும் உய்ந்து ஒழிந்தார்.

2075. பித்தம் கொண்டவன் மருத்துவன் கொடுத்த மருந்தால் பித்தம் நீங்கப் பெற்று தன் இயல்பான தன்மையைப் பெறுவான். படலத்தால் மறைக்கப்பட்ட கண் படலம் நீங்கப் பெற்றுக் காணும் தன்மையன் ஆவான். அவை போன்று சிவபெருமான் அருள் செய்ய உள்ளம் தெளிவு கொண்டேன். உயிரின் இயல்பான செயல்களை விட்டு நின்றேன்.

2076. சிவத்தின் உறுப்புகள் நிலம் நீர், தீ, காற்று, ஆகாயம், கதிரவ்ன், சந்திரன், ஆன்மா என்ற எட்டு ஆகும். இவை அவனுடைய சத்திகள் என்பதை எண்ணி அஞ்ஞானமான உறக்கத்திலினின்று விழித்திருத்தலைச் செய்யார். கள் முதலியவற்றின் மயமாய் ஆக எண்ணிய தீவினையாளர் இன்பமயமான இறைவனது நினைப்பை விட்டவர் ஆவார்.

2077. கலப்பால் ஒன்றாய் பொருளின் இயல்பால் சீவனும் சிவனும் என்று இரண்டாயும் நின்று உயிர்த் தன்மை கெட்டுச் சிவம் ஆனவர்க்கு ஒன்று இரண்டு என்னும் வேறுபாட்டு உணர்வு ஒரு போதும் வராது. அங்ஙனம் இன்றி ஒன்று இரண்டு என்னும் வேறுபட்ட அறிவு உடையவர் எல்லாருக்கும் அந்நியமாய் உள்ளது. ஒன்று என்றும் இரண்டு என்றும் வேறு பிரித்து எண்ணும் நிலையில் வேறாக விளங்கும்.

2078. மூச்சானது உடலில் நின்று விட்டால் உணர்வு எங்கு இருக்கும். அறிவு இல்லாமையாலே பரிச உணர்ச்சி நிறைந்த உடல் நீங்கிக் கீழே விழும். உயிரும் உடலும் ஆகிய இவற்றுடன் பொருந்தியிருக்கும் உணர்வாவன சிவப்பயிரும் அமைந்து கிடந்த உள்ளத்தின் தன்மையை உலகத்தார் அறியமாட்டார்.

2079. உயிர் எனப்படுவது உடலின் வேறாய் உணர்வாய் எங்கும் நிலைபெறும் இயல்பு உடையது. உயிர் எத்தன்மையுடையது என்று அறிந்தால் அதனால் ஆன உணர்வு அறியப்படும் உடலுக்குள் பரவியிருப்பது பிராணன் அன்று உணர்வே ஆகும். அந்த உணர்வில் மறைந்திருக்கும் சிவம் ஒன்று உள்ளது என்பதை யாரும் அறியமாட்டார்.

2080. இன்றைய உலகம் நிலைபெறுவதற்குரிய அச்சாணி போன்றவன் ஒளியுடைய மேலான அறிவு பொருந்தியவன். நிலம் முதலிய ஐந்து பூதங்களின் தன்மையாய் அவற்றுள் உள்ளும் புறமுமாய் காணப்படுவன். சில வாக்கு வடிவான் தேவர்களுக்குத் தலைவனை தலையில் வாக்கு வடிவமாக அறிவதே தன்னை அறியும் செயலாகும்

2081. இறைவன் உலகப் பொருள் யாவற்றுக்கும் ஒடுங்கும் இடமாக உள்ள ஒப்பில்லாத பேரொளி. உடல் உலகு எல்லாமாக நின்ற ஒளி பொருந்திய சுடர் இத்தகைய தலைவனின் எல்லையில்லாத அருளால் விளையும் பேறு உனக்கு உண்டாகும். அதனால் விருப்பையும் பின்பு முடிவில் சோர்வையும் அளிக்கும் சிற்றின்பத்தை நீ விட்டு விடுவாயாக.

2082. உனக்கு முதல்வனாய் உடம்பில் உயிர் நிலைபெறும்படி செய்த ஒளிமண்டலதில் விளங்கும் இறைவனின் கருத்தை அறிபவர் இலர். நல்ல முதல்வனாய் சிவம் மிக்குத் தோன்றத் தமக்கு எனப் பெயர் இல்லாது அப்பெருமானுடன் ஒன்றி நின்றால் தன்க்கு முதல்வனான சிவத்தினது பண்பு உண்டாகும்.

2083. ஐம்பொறிக்ளும் அந்தக்கரணங்களும் வந்தனவாகிய சூக்கும உடலும் உயிர் அன்று இவையெல்லாம் மகத் தத்துவத்தினின்று தோன்றியவை. புருடனும் கலை காலம் நியதி வித்தை அரகம் என்னும் ஐந்தின் கூட்டத்தால் பொருந்துவதாகும் . அனாதியாய் உள்ள ஆன்மாவானது முப்பத்தாறு தத்துவத்தின் முடிவில் நிலை பெற்றிருக்கும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:44

சற்குரு நெறி!

Written by

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#####

சற்குரு நெறி!

2049. உத்தம குரு என்பவன் சிவத்தின் திருவடியான் சிவ உணர்வைச் சீடன் சிரசில் அமையுமாறு செய்யும் ஆற்றல் உடையவன் ஆவான். அத்தகையவனே சிவத்தின் திருவடியைப் பதிப்பித்துச் சிவனின் உண்மை வடிவத்தை அறியும்படி செய்ய வல்லவன். சிவத்தின் திருவடி பதிப்பதால் முப்பத்தாறு தத்துவங்களையும் கண்டு விளங்கும் சீவனின் பாசங்களை ஞானம் அளித்துத் தணிக்க வல்லன் அவனே சிறந்த குரு ஆவான்.

2050. சத்குருவானவன் தன்னிடம் உபதேசம்பெற்ற அடியவரின் வினை தீரும்படி திருவருள் செய்தான். வினையால் தீவினை நெருங்காதபடி மாணவனின் தலையில் திருவடி சூட்டியருள் செய்தான். இயமனும் அவனது தூதரும் மாணவ்ன்பால் அனுகாமல் திருவருள் செய்தான். அதனால் பிறவித் துன்பம் நீங்கச் செய்தான்.

2051. கரிய இரும்பு இரசவாத முறையால் பொன்னாகும். அது திரும்ப இரும்பு ஆகாது. அதுபோல் பக்குவம் வந்த போதே குருவினது அருளைப் பெற்றவன் மீளவும் பிறவிக்கு வாரான்.

2052. பாசத்தைக் கெடுத்துச் சிவத்துடன் தனக்குள்ள தொடர்பை ஆராய்ந்து பாசக் கூட்டங்களை முழுவதும் அகற்றும் அனுபவம் உடையவரே குற்றம் இல்லாத சற்குரு ஆவர். சிவ அனுபவம் இல்லாது வாய் வாதம் செய்பவர் சிவஞானமுடைய குரு ஆகார்.

2053. தெய்வப் பொருளான சிவத்துடன் பொருந்தியிருக்கும் மலம் அற்றவனே மலம் நீங்கப் பெற்ற நேயப் பொருளை அளிக்க வல்லவன். அவனே நிலையானவனும் தூய்மை உடையவனும் ஆவான். அவனே ஆராய்பவரின் குணத்தை அறிந்தபோது செருகுற்ற அன்பர்க்கு உப்தேசம் செய்பவன் ஆவான். அவனே சி/றந்த குரு ஆவான்.

2054. தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக மாற்றும் மருந்து பட்ட இடம் எல்லாம் மேன்மையைத் தருகின்ற பொன்தன்மை ஆவதைப் போன்று குருவின் திருவடிபட்ட உலகத்தவர் யாவரும் ஆணவம் கனமம் மாயை ஆகிய மூன்று மலங்களும் நீங்கிச் சிவகதி பெறுவர்.

2055. சிவமே தானாய் எழுந்தருளிய நல்ல குருவின் திருமுன்பு ஆன்மாவின் தன் உண்மை உணருமாயின் ஆன்மாவே சிவத்தை பெருமைபெற அறிவதாகும்.. அந்த அறிவே உடலுள் இருக்கும் சிவம் என்று அறிந்து கொள்வாயாக.

2056. பிறப்பு இறப்பு என்னும் இரண்டும் அற்ற இறவாத நெறியைக் கரு இடுவதையே செயலாக உடையார். காம விருப்புடையவர் காணாத வழியை சிவபெருமான் பெருந்துறையாகப் பேசும் வழியை அனுபவம் மிக்க குரு உபதேச வழியில் போய்ப் பொருந்தலாம்.

2057. சிவகுரு என்பவன் வேதாகமம் கூறும் பேரின்ப வடிவு உடையவன். அவ்வடிவுடையவனாகிச் சிவயோகத்தை உயிர்க்குச் சேர்ப்பித்து அருள்வான். அவ்வுயிர் திருவடியுணர்வு வரப் பெற்றமையால் வேறோர் எண்ணமும் உண்டாவதில்லை. அதனை உயரச் செய்து பாசத்தை அகற்றி அகத்தே தோன்றும் மேலான சிவத்திடம் வருவித்துச் சேர்ப்பவன் ஆவான்.

2058. சத்தான சிவமும் அசத்தான மாயையும் சத்துடன் கூடிச் சத்தாகவும், அசத்துடன் கூடி அசத்தாகவும் உள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருளகளின் இயல்பை உணர்த்தி சித்தான ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்துடன் சேர்த்துச் சுத்தமயையும் அசுத்த மாயையும் அகல இன்பவடிவான பிரணவ உபதேசம் அளிக்கின்ற தலைவனே அருட்குரு எனக் கூறப்படுவான்.

2059. உயிர்களிடம் உள்ள பாச உணர்வால் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதயி என்ற ஐந்தும் பொருந்தும். சிவத்தின் திருவடியை வழிபடுவதால் அவா நீங்கும் சிவப் பற்றை ஆதாரமாய்க் கொண்டு ஆன்மாவைச் சுற்றியிருக்கும் பேத ஞானத்தைச் சீவ துரியம் சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்றாலும் கெடுத்துத் தற்பரம் என்ற மேலான சிவத்தை சார்பவார் மேலானவர் ஆவார்,

2060. அனைத்து உயிர்களும் இன்பம் அனுபவித்தற்குரிய வன்மை மிக்க புலன் உணர்வுடன் பொருந்த வரும் காலத்து இறைவன் இறைவியுடன் உள்ளத்தில் தோன்றிடவே சொல்லாமலேயே ஐம்மலக் குறுபுகளும் அடங்கி உயிர் சிறந்து மீண்டும் வாரா நெறியை அடையச் செய்தல் இறைவனுக்கு விளையாட்டாகும்.

2061. இழிவான பிறப்பிலே செலுத்திப் பின்பு அதனின்று மீட்டு வினைப் போகத்தை அனுபவிக்கச் செய்து பதமுத்தியை அடையும்படிச் செய்து பதவிகளின் இன்பத்தைத் துய்க்கும்படிச் செய்து உயிர்களைப் பிறவிக் கடலில் ஆழ்த்துதலும் பின் சிவஞானத்தில் மீளும்படி செய்தலும் வீட்டை அடையச் செய்து மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் ஆகியவை முத்தியினைத் தரும் சிவனின் செயலாகும்,.

2062. சிவன் ஐந்தொழில்கள் செய்து விளையாடும் இடம் உடலகும். அறிவு அறியாமையை நீக்கித் தெளிவித்த சீவனை அதன் மலத்தினைப் போக்கித் தூய்மை உடையவன் ஆக்கித் தன் வயமாக்கலே ஐந்தொழில் காரியமாகும்.

2063.. இறைத் தன்மையைப் பெறுவதைப் போல் பெரும் பேறு இல்லை என்று அப்பால் ஆகி நின்ற சதாசிவ மூர்த்தியை பாசத்தில் உள்ள போதே பற்றி நில்லுங்கள். பாசத்தில் சிவன் பொருந்தியிருப்பினும் அதிலே ஒட்டாத நின்மலன் ஆவான். அவன் பொருந்தியிருக்க பாசமயமான உலகங்களை ஒளிமயமாகச் செய்தான்.

2064. சிவந்த மாணிக்க மாலையைப் போல் ஒளிவிட்டு எழும் புருவ நடுவான மண்டலத்தில் மாற்று உயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்திப் பேரின்பமான அமுதை விளையச் செய்தது. இதை அறிந்து விந்து வெற்றியால் அமுதத்தைப் பெருகும்படி செய்பவரே பிறவியற்ற நெறியை அறிந்து வாழ்பவர். இதை உணராதா விலங்கைப் போன்ற மற்றவர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர்.

2065. மலத்துடன் கூடிய ஆன்மா உயிர்த்தன்மை நீங்கவும் கூட்டப்பட்ட பாசப் பற்றுகள் அழிந்து ஒழியவும் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும் பிரண்வ உபதேசம் செய்பவனும் சிவன் ஆவான்.

2066. மூலாதாரத்தினின்று தலையை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிணிக்கும் மல இயல்பைச் சுட்டெரித்து மேலே செலுத்தலாலும் முடிவில்லாத நாத ஒலியால் இருளை நீக்குதலாலும் பசுவின் இயல்பான பாசத்தன்மை கெடுமாறு வாடுவதாலும் முத்தியுலகை அடையும்படி உபதேசிக்கும் சிவமே குருவாகும்.

#####

சனிக்கிழமை, 20 June 2020 12:43

அசற்குரு நெறி!

Written by

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!

#####

அசற்குரு நெறி!

2044. சிவசிந்தனை இல்லாத மூடனும் உண்மைப் பொருளை ஆராயதவனும் சிக்கல் இல்லாமல் வேத நெறியைக் காணாதவனும் அடக்கம் இல்லாதவனும் மற்றவரைப் பழிப்பவனும் ஆன்ம பேதம் உடையவனும் சன்மார்க்கத்தை உபதேசிக்கும் நெறியற்றவர் ஆவர்.

2045. மந்திரம் தந்திரம் யோகம் ஞானமுடன் பாசம் முத்தி என்பவனவற்றைக் கண்டு உணர்ந்திருப்பவரை உள்ளத்தால் நினைத்தும் உண்மை ஞானம் பெற வேண்டுவன செய்யாமல் வயிற்றுப் பாட்டுக்காக் குருடராய் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.

2046. பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை அறியாதவன் அறிவற்ற செயலைக் செய்பவன் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகன் பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவன் ஆகிய இத்தன்மையை உடையவன் சிறந்த குரு ஆகமாட்ட்டார். அவன் அசற்குரு ஆவான்.

2047. உலகத்து வாழ்வைப் பற்றிய எண்னங்களை நீக்காமல் மந்திரத்தை உபதேசம் செய்தால் சிவசிந்தனை சிறந்து வெளிப்படாது சுருங்கி விடும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கு ஒன்று முரணானதால் தீமை விளையும். இத்தகைய குருமார்கள் வாழ்கின்ற நாட்டுக்கும் மன்னனுக்கும் தீமை யுண்டாகும் என்று முன்பே சிவபெருமான் மொழிந்துள்ளார்’

2048. கண்பார்வை அற்றவர்க்கு கோலைத் தந்து வழி காட்டிச் செல்லும் கண்பார்வை அற்றவர் வழியல்லாத வழியில் போய்ப் பழைய குழியில் விழுவர். அதன்பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவர். அதைப்போல் ஞானத்தை உணராத மாணவரும் அசற்குருவுடன்கூடி முன்பின் இல்லாமல் ஒரு சேர அஞ்ஞானத்தில் விழுவர்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26935289
All
26935289
Your IP: 54.81.33.119
2024-03-29 06:11

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg