குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
சரியாகச் செயல்படுத்துங்கள்!
Written by குருஸ்ரீ பகோரா வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டின் ஆர்வத்தில் விளையாடிக் கொண்டே அருகில் இருந்த காட்டிற்குள் சென்றுவிட்டனர். தாங்கள் வந்த வழி மறந்து, தாங்கள் செல்லும் வழி வீட்டிற்குச் சென்றுவிடும் என நினைத்து செல்ல இறுதில் அடர்ந்த காட்டின் உட்பகுதியை அடைந்தனர். வழி தெரியவில்லை. நேரம் கடந்தது. காட்டின் உயிர்ப்பு ஓசைகள் அச்சத்தை ஏற்படுத்தியது.
கொடிய மிருகங்களின் ஓசை மிக அருகில் கேட்க பதறிய சிறுவர்களில் ஒருவன் நம்மை கடவுளிடம் ஒப்படைத்து விடுவோம். அவர் காப்பாற்றுவார் என்றான். அடுத்தவன் எல்லாவற்
றிற்கும் அவரை ஏன் கஷ்டப்படுத்தவேண்டும். அவர் கொடுத்த ஆற்றலில் நம் அறிவை உபயோகப்படுத்துவோம். இறுதியில் அவரிடம் உதவி கேட்போம் என்றான்.
இருவரும் அருகில் இருந்த மரத்தில் எந்த உயரத்திற்கு செல்ல முடியுமோ அந்த உயரத்திற்கு சென்றார்கள். மரத்தின் அருகில் வந்த மிருகங்கள் அந்த உயரம் ஏறமுடியாமல் திரும்பியது. உச்சியில் இருந்து பார்த்தபோது அவர்களின் வீடு தெரிந்தது. அப்போது அவர்களிருக்கும் இடத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியும் புலப்பட்டது. இதுவரை அவர்கள் வீடு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் சென்றுவிட்டதை புரிந்தார்கள்,
மரத்திலிருந்து கீழிறங்கி வீட்டை அடைந்தார்கள். நம்மை படைத்த கடவுள் எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க நமக்குள் திறனை வைத்துள்ளார், அதை சரியாக நாம் உணர்ந்து செயல் படுத்தவேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் நாம் யாரையும் தொந்திரவு செய்யக்கூடாது என்பதை புரிந்து கொண்டனர்.
மகிழ்வுடன் வாழப் பழகுக!
Written by குருஸ்ரீ பகோரா குருதட்சணை கொடுக்க நினைத்த மாணவர்கள் குருவின் விருப்பிற்கு ஏற்றபடி பரிசு அளிக்க விரும்பினர். குருவின் விருப்பை தெரிய அவரை அனுகினர். எனக்கு ஒன்றும் வேண்டாம். ஒருமூட்டை காய்ந்த இலைகளை சேகரித்து வாருங்கள் என்றார். அந்த குருகுலம் மரங்கள் நிறைந்த பகுதி. எனவே சுலபமாக இலைகளை சேகரிக்க மாணவர்கள் விரைந்தனர்.
மரங்கள் நிறைந்த பகுதிக்கு சென்றபோதுதான் தெரிந்தது சற்று முன் யாரோ இலைகளை கூட்டி அள்ளி சென்று விட்டனர் என்பது. அருகில் இருந்த வீட்டில் விசாரித்தபோது தினமும் இந்த இலைகளை வைத்து புகை போடுவோம் என்றனர். ஒருவர் தான் இலைசேகரித்து அடுப்பு எரிக்க உபயோகித்துவிட்டேன் என்றார். ஒரு வியாபாரி பெரிய இலைகளை சேர்த்து தைத்து சாப்பிடும் இலை தயாரித்துவிட்டேன் என்றார். ஒருவர் அவைகளில் தரம் பிரித்து மருந்துக்கு பயன்படுத்திவிட்டேன் என்றார்.
அப்போதுதான் குரு கேட்ட காய்ந்த இலைகள் அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்பதை உணர்ந்தனர். சுலபமாக கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள் பலவாறாக பயன் பட்டுள்ளதை அறிந்தனர். குருவிடம் தங்கள் அனுபவத்தை சொன்னார்கள்.
குரு சொன்னார் நீங்கள் தரும் தட்சணை நீங்கள் கற்ற பாடம்தான். காய்ந்த இலைகூட பலவாறாகப் பயன்படுகிறது. இதை நினைவு கொண்டு உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் முக்கியமானவரே. ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். எனவே எல்லோரையும் மதித்து புரிந்து மகிழ்வுடன் வாழப் பழகுங்கள் என்றார்.
ஒரு நிகழ்வு, இரண்டு மாறுபட்ட எண்ணங்கள்!
Written by குருஸ்ரீ பகோரா ஆற்றின் கரையில் காலைகடன்களை முடித்து தன் சீடர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார் ஓர் ஞானி. அப்போது ஓர் சீடனுக்கு சந்தேகம் எழவே அதைபற்றி விளக்கம் கேட்டான். அவன் கேட்டது, மகிழ்ச்சி, துக்கம் இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் என்ன என்பதாகும்.
ஞானி அங்கிருந்த தன் சீடர்களை நோக்கி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றார். சிலர் மழை பெய்ததால் வெள்ளம் கரைபுராண்டு வருகின்றது. வயல்களுக்கு நீர் கிடைக்கும் விவசாயம் நன்றாக இருக்கும். மக்களுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது. இது ஓடும் நிலங்கள் செழிப்பாக இருக்கும் என்றனர்.
சில சீடர்கள் இந்த திடீர் மழை வெள்ளத்தால் எவ்வளவு தாவரங்கள், மரங்கள் அழிந்திருக்கும். கால்நடைகள் மனிதர்கள் எவ்வளவு துன்பப் பட்டிருப்பார்கள் என வருத்தப்பட்டனர்.
ஞானி சொன்னார். மழை பெய்ததால் ஏற்படும் வெள்ளத்தினால் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும். ஒரே வெள்ளக்காட்சி உங்கள் ஒவ்வொருவரையும் வேறு வேறாக நினைக்கவைத்துள்ளது. இந்த வித்தியாசமான எண்ணங்கள் உங்களின் மனதைப் பொருத்தது. ஒரே நிகழ்வு ஒரு மனதில் இன்பத்தையும், வேறுஒருமனதில் துன்பத்தையும் தோற்றுவிக்கக் கூடியது என்றார்.
நிழல் மாயை!
Written by குருஸ்ரீ பகோரா ஒருவர் ஒரு அரேபியக் குதிரை வாங்கினார். குதிரையை விற்றவன் அதன் செயல் பழக்க வழக்கங்களை விரிவாக எடுத்துச் சொல்லியிருந்தான். அதை பராமரிக்க ஒருவனை ஏற்பாடு செய்திருந்தான். எனோ தெரிய வில்லை அவனால் பல சமயங்களில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்து குதிரை நம் பழக்கத்திற்கு கொண்டு வருவது என புரியாமல் தவித்தார் சொந்தக்காரர்.
குதிரையை பழக்கும் வேறு ஒரு நிபுணரை வரவழைத்தனர். அவர் சோத்தித்துப் பார்த்து குதிரை மிகவும் நல்ல குதிரை எனச் சான்று வழங்கினார். பின்னர் தன் முன் குதிரைக்கு சொந்தக்காரரை அதன் மீது ஏறச் சொன்னார். அவர் ஒரு பக்கம் இருந்து முயற்சி செய்ய அந்தக் குதிரை முரண்டு பிடித்தது. அப்போது அந்த நிபுனர் அந்தக் குதிரை அதன் நிழலைப் பார்த்து மிரள்வதைக் கண்டார்.
உடனே குதிரையின் சொந்தக்காரரை மறுபக்கம் குதிரையை திருப்பி அதன் மீது ஏறச் சொன்னார். அவர் ஏறும் போது குதிரை பணிவுடன் இருந்தது. சொந்தக்காரர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
குதிரையை நீங்கள் சூரியதிசைக்கு எதிராக நிறுத்தி ஏறமுயற்சிக்கும்போது அது தன் நிழலை கண்டு பயம் கொளகின்றது. சூரியதிசையில் அது தன் நிழலை கானமுடிவதில்லை. அது அமைதியாக இருக்கின்றது.
மனதை ஆன்மாவின் பக்கம் செலுத்தினால் அமைதி கிடைக்கும். அதைவிடுத்து நிழல் போன்ற மாயையின் பக்கம் செலுத்தினால் அமைதியிருக்காது. துயரங்கள் தோன்றும்.
ஆதாரம்! அரவணப்பு!
Written by குருஸ்ரீ பகோரா மூன்று நபர்கள் ஆற்றைக்கடக்க படகில் சென்றனர். வெள்ளத்தின் வேகம் அதிமாக படகு தாறுமாறாக போய்கொண்டிருந்தது. ஒருவன் தேவையில்லாமல் பயத்தினால் பிதற்ற, அந்த பயமானது மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது. தொடர்ந்து மற்றவர்கள் பயம் அதிகரிக்கும் வண்ணம் உளறிக் கொண்டிருந்தவன் தானும் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.
அவன் தொடர்ந்து படகில் இருந்தால் மற்றவர்களையும் பீதியில் ஆழ்த்தி படகின் பயணம் நிலைதடுமாறிடச் செய்வான் என்பதால் ஒருவன் அவனை ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றில் விழுந்தவன் என்னை காப்பாற்றி படகில் ஏற்றிவிடுங்கள் எனக் கூச்சலிட்டான். படகில் இருந்தபோது படகின் போக்கை பயமுறுத்தும் வகையில் கூறிக் கொண்டிருந்தவன், தற்போது படகினுள் வந்தால் போதும் என்ற நினைவுகளை அடைந்துள்ளான்.
படகில் இருந்தவரை அதன் பாதுகாப்பை உணரமுடியாத அவனுக்கு, படகிலிருந்து ஆற்றில் விழுந்தவுடன் படகின் அருமை புரிய ஆரம்பித்துவிட்டது. எது ஆதாரம் என்பதை புரிந்து கொண்டான். இதுபோன்றே துன்பத்தில் துயருற்று இருக்கும்போதுதான் மனம் கடவுளின் அருளே ஆதாரம் அரவணைப்பு எனப் புரிந்து கொள்கின்றது.
கடை-சரணாகதி!
Written by குருஸ்ரீ பகோரா ஓர் வியாபாரி கலப்படம் செய்து தொழில் புரிந்து வந்தான். கலப்படம் செய்த குற்றத்திற்காக பிடிபட்டு நீதியின்முன் நிறுத்தப்பட்டான். அவனுக்கு நீதிபதி மூன்று தண்டனைகளைக்கூறி அவற்றில் அவன் எதை விரும்புகின்றானோ அதை நிறைவேற்ற ஆனை வழங்கினார்.
முதலாவது-அவைக்கு கொண்டுவந்திருந்த நெய் முழுவதையும் அவனே குடிக்க வேண்டும். இரண்டாவது-நூறு கசையடிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். மூன்றாவது- ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்டவேண்டும். பணஆசை கொண்டவனுக்கு அபராதம் கட்டவும் கசையடிகள் பெற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை. நெய்யை குடிக்க ஒப்புக் கொண்டான்.
நாற்றம் வீசும் கலப்பட நெய்யை முழுவதும் குடிக்க முடியவில்லை. அதனால் பண ஆசை குறையாதலால் கசையடிக்கு ஒப்புக் கொண்டான். ஆனால் பத்து கசையடிகள் கூட அவனால் தாங்க முடியவில்லை. எனவே அபராதம் கட்ட ஒப்புக் கொண்டான்.
முதலில் அபராதம் கட்ட ஒப்புக் கொண்டிருந்தால் நாற்றமெடுத்த நெய்யைக் குடித்தும், கசையடிகள் பெற்றும் உடலை வருத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பணம் ஈட்டுவது என்பது, நாம் நம்மை நலமுடன் பேனுவதற்காக என்பதை புரியாதவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்.
இதுபோன்றுதான் துன்பங்களினால் துயர்படும்போது, முதலிலேயே கடவுளின் அனுக்கிரகம் பெற முயற்சிக்காமல் பலப்பல செயல்கள் புரிந்து துன்பம் தாங்கா தோற்ற நிலையில் பக்தி கொள்கின்றார்கள். இது கடை சரணாகதி.
வாழ்க்கை ரகசியம்!
Written by குருஸ்ரீ பகோரா ஒரு ஊரில் மண்பாண்டம் செய்யும் குயவனுக்கு தினமும் இந்த மண்ணைப் பிசைந்து மண்பாண்டங்களை செய்வதில் சலிப்பு ஏற்ப்பட்டது. அதே ஊரில் உள்ள வைரக் கரிகளைத் தீட்டி வைரமாக்குபவனுக்கும் தன் தொழிலில் வெறுப்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். அப்போது தான் தினமும் சேற்றில் உழலுவதும், பின் மண்பாண்டங்களைச் சுட தீயில்வாடி அவற்றை விற்க அலைவது என தன் தொழிலின் குறைகளை கஷ்டங்களைக்கூறி குயவன் புலம்பினான். அதேபோன்று பட்டை தீட்டுபவனும் பட்டை தீட்டும்போது அடிக்கடி கையில் அறுத்துக்கொள்கின்றேன் என நண்பனிடம் புலம்பினான்.
இருவரும் உலகின் மகிழ்ச்சியான வேலைபற்றி தெரிந்து கொள்ள விரும்பி அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்றனர். தங்கள் கஷ்டங்களை, குறைகளை சொல்லித் தீர்த்தனர். ஞானி சொன்னார் உங்களுக்கு இந்த வேலையைத் தவிர வேறுவேலை தெரியுமா என்றதற்கு தெரியாது என்றனர். மண்பாண்டங்களும், தீட்டப்பட்ட வைரங்களும் இயற்கையாக கிடைத்தால் என்ன ஆகும் என்றார். இருவரும் எங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அந்நிலையில் அவர்களது ஜீவாராதத்திற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை ஞானி உணர்த்தினார்.
இந்த தொழிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தரும் திறமை உங்களிடம் உள்ளது. அதற்காக பெருமைபட வேண்டும். எவனொருவன் தன் தொழிலில் மிகுந்த கவனம் செலுத்துபவன் மகிழ்வுடன் வாழ்கின்றான். தொழிலில் சலிப்பு ஏற்படுபவனுக்கு வாழ்க்கை சோகமாகிறது. துன்பங்கள் தெரிகின்றது. இதுதான் தொழிலின் வாழ்க்கை ரகசியம்.
காலம்காலமாக தொடரும் வன்மம்!
Written by குருஸ்ரீ பகோராஞானி ஒருவர் தனது உரையின் போது ஓர் நகைச்சுவை சொல்ல அனைவரும் சிரித்தனர். இடையிடையே அதே நகைச்சுவையைக்கூற சிரிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக சொன்னபோது யாரிடமிருந்தும் சிரிப்பு வரவில்லை. இதை உணர்ந்த ஞானி சொன்னார், அன்பர்களே! உங்களை மகிழ்வூட்டும் ஓர் சுவையான செய்தியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்களால் சிரிக்க முடியவில்லை. ஆனால் என்றோ எங்கோ நடந்த துயர சம்பவங்களை அடிக்கடி நினைத்து நினைத்து வேதனைப் படுகின்றீர்கள்! அந்த ஒரே விஷயத்தை பல காலமாக நினைவில் கொண்டு வன்மம் பாரட்டுவது சரியா! அதனால் உங்கள் மனமும் எண்ணங்களும் நிலை மாறுவதைப் புரிந்துகொள்ளுங்கள். துன்பங்களை துயரங்களை விட்டுவிட பழகிக்கொள்ளுங்கள் என்றார்.
பழகியமனம்-அநிச்சைசெயல்-இயல்பு நிலை!
Written by குருஸ்ரீ பகோரா இளைஞன் ஒருவன் உழைக்காமல் செல்வம் சேர்க்க விரும்பினான். அருகிலிருந்த ஞானியிடம் அவரைப்போல் கல்லை தங்கமாக்கும் வித்தையை சொல்லிக்கொடுக்க வேண்டினான். ஞானி சொன்னார். அது தனக்கு இறைவன் அருளால் கிடைத்தது. அதைக் கொடுக்க முடியாது. வேறு வழி ஒன்று இருக்கின்றது, அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஓர் கல் இருக்கின்றது அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும் என்றார்.
சிறிதும் யோசனையின்றி ஆற்றங்கரை சென்றான். அங்கு நிறைய கற்கள் இருக்க அதில் எது அந்த கல் எனப்புரியாமல் குழம்பினான். மீண்டும் ஞானியிடம் வந்து சேர்ந்தான். ஞானி வந்து அதை தேர்வு செய்து தரவேண்டும் என்றான்.
ஞானி சொன்னார், அதை நான் தொட்டால் அது உனக்கு பயன்படாது. நீதான் தேடி எடுக்க வேண்டும் என்றார், ஆற்றங்கரையில் உள்ள கற்களில் எந்த கல் கையில் எடுக்கும்போது வெப்பமாக இருக்கின்றதோ அந்த வெண்மையானக்கல் கைபட்டதும் இளம் மஞ்சளாக மாறும் தன்மையுடையது, இதுதான் அதன் அடையாளம் என்றார்.
ஆற்றங்கரைக்கு சென்றவன் கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அவைகள் வெப்பமின்றி குளிர்ச்சியாக இருக்க கீழே போட்டான். அவனுக்கு திடீரென்று ஓர் சந்தேகம். எடுத்த கல்லையே எடுத்து பார்கின்றோமோ என்ற சந்தேகம் வர, எடுத்து பார்த்த கற்களை ஆற்றில் வீசத்தொடங்கினான். எடுத்தான், குளிர்ச்சிகண்டான், வீசினான் ஆற்றில், காலம் கரைந்தது. அன்று முழுவதும் செயல்பட்டும் அவனால் அந்தக் கல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அடுத்தநாள், அடுத்தநாள் என அவன் செயல் தொடர்ந்தது. பல நாட்கள் ஆகியபின் ஓர்நாள் ஒர்கல்லைக் எடுத்தான் அது வெப்பமாக இருந்தது. அதன் நிறமும் இளம் மஞ்சள் நிறமாக மாறத்தொடங்கியது. சற்றும் யோசிக்காமல் அந்த கல்லை முன்பு செய்ததுபோல பழக்கத்தில் ஆற்றினுள் வீசிவிட்டான். அதன்பிறகு யோசித்தான். அடடா! நாம் வீசிய கல் நிறம் மாறியதே, வெப்பமாகவும் இருந்ததே என்று. என்ன பயன். பழகிய மனம் அந்த பாதையில் இருந்து உடனடியாக மாறி செயல்படாது. மீண்டும் ஆற்றினுள் இறங்கி அதை தேடமுடியுமா? தேடினாலும் கிடைக்குமா! எவ்வளவு காலம் விரையமாகும்!
எது சரி! எது தவறு!
Written by குருஸ்ரீ பகோராஒரு ஞானியிடம் எந்த நிகழ்வையும் எப்படி சரி என்றும் தவறு என்றும் கண்டுபிடிப்பது என ஒர் சீடன் கேட்டான். ஞானி சொன்னார். ஒருவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டால் அதற்கு ஒவ்ரொருவரும் ஒரு பதிலைச் சொல்வர். அதில் எது சரி, தவறு என கண்டுகொள்வது உன் திறமை என்றார். மேலும் அவர் எல்லா சீடர்களையும் வரவழைத்து, இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டார்.
ஒருவர், ராமயணத்தில் 4சகோதரர்களும், மகாபாரதத்தில் 5சகோதர்கள் இருக்கின்றனர் என்றார். அடுத்தவர், ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரனுக்கும் தனித்தனி மனைவிகள். மகாபாரதத்தில் ஐவருக்கும் ஒரே மனைவி என்றார். இன்னொருவர், ராமன் 14ஆண்டுகள் வனவாசம் செய்தான். பாண்டவர்கள் 13ஆண்டுகள் வனவாசமும் 1ஆண்டு அஞ்ஞாத வாசம் மேற்கோண்டார்கள் என்றார். மற்றொருவர், ராவணன் பெண்ணாசையாலும், துரியோதனன் மண்ணாசையாலும் அழிந்தனர் என்றார்.
ஒரு கேள்விக்கு ஒரே பதில் கிடைக்கவில்லை. அவர்களின் கவனத்தை ஈர்த்த பகுதியிலிருந்து பதில்கள் கிடைத்துள்ளது. எல்லாமே ஏறக்குறைய சரியான சுருக்கமான பதில்களே. இதில் எது சரி, எது தவறு என்பதை நீங்கள் எந்தகோணத்தில் இருந்து பார்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து பதில் அமையும் என்றார். எது சரி என்று யோசித்து முடிவு செய்யவேண்டும்.
More...
தியானம்!
Written by குருஸ்ரீ பகோரா தியானத்தைப் பற்றி தன் குருவிடம் விளக்கம் கேட்ட சீடனுக்கு, நீ இறந்துகொண்டே பிறந்து கொண்டிருக்கிறாய் என்றார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. குரு சீடனைப்பார்த்து நீ பிறந்த போது என்ன செய்தாய் என்று கேட்க ‘மூச்சு வாங்கினேன்’ என்றான். இறக்கும்போது என்ன நடக்கும் என்றதற்கு மூச்சை விடுவேன் என்றான்.
நீ, தொடர்ந்து மூச்சை வாங்கிக் கொண்டு, விட்டுக் கொண்டுதான் இருக்கின்றாய். ஒவ்வொருமுறையும் மூச்சு வாங்கும்போது நீ பிறக்கின்றாய். நீ மூச்சை விடும்போது இறக்கின்றாய். எனவே ‘நீ பிறந்து கொண்டே இறக்கின்றாய், இறந்துக்கொண்டே பிறக்கின்றாய். உன் மனதை அமைதிப்படுத்து. சுவாச ஓட்டத்தைக் கவனி. சீரான சுவாசமே தியானம்’ என்றார்.
கீழே போடு!
Written by குருஸ்ரீ பகோராஅந்த பகுதிக்கு ஓர் ஞானி வந்தார். அவரைக் காண அந்த ஊர்மக்கள் திரண்டனர். அந்த ஊரின் செல்வந்தர் எதையும் சிறப்பாக தன்னால் செய்ய முடியும் என்ற எண்ணம் உடையவன். ஆரவார குணமிகுந்த அவனுக்கு பக்தியும் உண்டு. அவன் அந்த ஞானி யைக்காண விரும்பினான். அவருக்கு அந்த ஊரில் யாரும் கொடுக்காத அளவிற்கு விலையுயர்ந்த ஆடைகளும், பணமும் கொடுக்க விரும்பினான். அப்போது அவரின் மனைவி பணத்துடன் கொஞ்சம் மலர்களையும் வாங்கி கொண்டு போகச் சொன்னார்.
ஞானியைப் பார்த்ததும் பெருமையுடன் தான் கொண்டுவந்த ஆடைகளையும், பணத்தையும் அவர்முன் நீட்டினான். ஞானி உரத்த குரலில் கீழே போடு என்றார். ஆடைகளையும் பணத்தையும் கீழே வீசினான். மனைவி சொல் நினைவிற்குவர மலர்களை எடுத்துக்கொடுத்தான். அப்போதும் ஞானி கீழே போடு என்று கூறினார். அந்த செல்வந்தருக்கு லேசான பயம் வந்தது. ஞானிக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என நினைத்தான். அப்போது மீண்டும் கீழேபோடு என்று உரத்தகுரலில் யோகி சொல்ல, செல்வந்தருக்கு எதை கீழே போடுவது என்பது புரியவில்லை, விழித்தார். அருகில் இருந்த ஞானியின் சீடர், அவர் உங்களிடமிருந்த ஆடைகளையும், பணத்தையும் கீழே போடச் சொல்லவில்லை. ‘உங்கள் ஆணவத்தை கீழேபோடு’ என்பதுதான் அவர் சொன்னதின் அர்த்தம் என்றார்.
புரிந்த செல்வந்தருக்கு புதிய வானம் தெரிந்தது. ஞானியின் பாதத்தை வணங்கினார். ஞானி சொன்னார் உன் கர்வத்தை, ஆணவத்தை இங்கேயே என்னிடம் விட்டுச்செல், அதை திரும்பவும் எடுத்துச் சென்று துன்பத்திற்கு ஆளாகாதே. வாழ்வில் வளம் பெறுவாய் என்றார்.
கோவில் இருக்கும் இடம்!
Written by குருஸ்ரீ பகோரா ஞானி ஒருவர் புனித பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஓர் மடத்தில் தங்கினார். அன்று இரவு குளிர் அதிமாக இருந்தது. அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அருகில் இருந்த மரத்திலான சிலையை எடுத்து தீ மூட்டி குளிர் காயலானார். தீயின் ஒளியைக் கண்ட மடத்தின் பாதுகாவலர், ஞானி மரச்சிலையை எரிப்பதைக் கண்டு கோபமடைந்து, அவறை திட்டினார். தங்குவதற்கு இடம் கொடுத்தது தவறு எனப் புலம்பினார்.
ஞானி சிலை எரிந்ததும் அதில் எதையோ தேடினார். எரித்துவிட்டு என்ன தேடுகின்றீர்கள் என்றான் பாதுகாவலர். சாம்பலில் எலும்புகள் இருக்கின்றதா எனத் தேடுகின்றேன் என்று கூறியதைக் கேட்டதும், கடுங்கோபம் கொண்ட பாதுகாவலர், நீங்கள் ஒரு முட்டாள். மரச்சிலையில் எப்படி எலும்புகள் இருக்கும் என்றார். அப்படியானால் மற்ற மரச்சிலைகளையும் எடுத்து வாருங்கள், என்னுள்ளே இருக்கும் இறைவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றார் என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கடுங் கோபம் கொண்ட பாதுகாவலர் அந்த ஞானியை வெளியில் துரத்தி விட்டார்.
மறுநாள் காலை பாதுகாவலர் மடத்திற்கு வெளியில் வந்தபோது அந்த துறவி சாலை ஓரத்தில் இருந்த ஒரு கல்லை மலர்களைக் கொண்டு பூசித்துக் கொண்டிருந்தார். பாதுகாவலர் ஆச்சரியமடைந்து பைத்தியகாரனைய்யா நீ, நேற்றிரவு மரச்சிலைகளை எரித்தாய். இப்போது வழிகாட்டிக் கல்லை வழிபடுகிறாய் என்றார்.
‘பிரார்த்திக்கும் கலை உண்மையாக உங்களுக்கு வந்துவிட்டால் நீங்கள் எந்த கோயிலையும் தேடிப்போக வேண்டியதில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் கோவில் இருக்கும். கோவில் அதிர்வுகள் உங்களைச் சுற்றி இருக்கும். அது உங்களுக்கு என ஓர் ஒளி வட்டமாக, மண்டலமாக மாறிவிடும். மனதுக்குள் கடவுள் இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் சக்தி உங்களுக்குப் புலப்படும். உண்மையான பக்தியுடன் ஒருவன் இருந்தால் அவன் செல்லுமிடமெல்லாம் இறை இல்லம் உருப்பெறும்’ என்று புன்னகையுடன் கூறினார்.
சொர்க்கமும் நரகமும் நீங்களே!
Written by குருஸ்ரீ பகோரா தெய்வீகமான ஓர் முகத்தை வரைய விரும்பினான் ஓவியன். பல நாட்கள் தேடி ஒரு சிறுவனைக் கண்டான். ஓவியம்வரையப் பட்டு முழுமையடைந்தது. பார்ப்பதற்கு தெய்வாம்சம் மிகப்பெருந்தியிருந்தது அந்த ஒவியம். நிரைய பிரதிகள் எடுக்கப்பட்டு விற்றது.
பலவருடங்கள் கழிந்தது. ஒவியனுக்கு தற்சமயம் சாத்தானைப் போல் ஓர் ஓவியம் வரைய ஆசை பிறந்தது. பல இடங்களில் தேடி கடைசியாக ஒர் சிறையில் இளைஞன் ஒருவனைக் கண்டான். அவனே தன் எண்ணத்திற்கு பொருத்தமானவன் என்று அவன் ஒவியத்தை வரைந்தான். முடிவில் அந்தபடம் ஒவியன் எதிர்பார்த்ததுபோல சிறப்பாக அமைந்தது. அந்தபடத்தைப் பார்த்ததும் மாடலாக நின்றவன் கதறி அழுதான். விசாரித்தபோது நீங்கள் முதலில் தெய்வாம்சம் என வரைந்ததும் என் உருவத்தைதான். காலம் என்னை சீரழித்துவிட்டது எனப் புலம்பினான்.
இதிலிருந்து மனிதனுக்குள் கடவுள், சாத்தான் இரண்டும் உள்ளது. அதிலிருந்து சொர்க்கம் அல்லது நரகத்தை கண்டுகொள்வது மனிதனுக்கு சிறப்பு. என்னவாக வேண்டும் என்பதை மனமே நீ தேர்ந்தெடு.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.