gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

கோபம் வேண்டம்-ஆறாவது அறிவு!

Written by

    அந்த ஞானிக்கு கோபமே வராது. அதை நன்றாகப் புரிந்துகொண்ட சீடனுக்கு அது எப்படி சாத்தியம் என்று அவரிடம் விளக்கம் கேட்டான். ஞானி சொன்னார், நான் அடிக்கடி படகில் அமர்ந்து தியானிப்பது வழக்கம். அப்போது நான் இருந்த படகை யாரோ முட்டினார்கள். எனக்கு சரியான கோபம், என் தியானத்தைக் கலைத்துவிட்டார்களே என்று. கண்திறந்து பார்த்தபோது என்படகை முட்டியது ஓர் வெறும் தளையறுந்த படகு. அதன் மேல் எப்படி கோபம் கொள்வது. அன்றுதான் புரிந்தது ஒவ்வொரு நிகழ்வுக்கும் எதோ ஓர் கரணம். அது புரியாமல் நாம் கோபப்பட்டு என்ன பயன். என்னை கோபப்படுத்தும் நிகழ்வுகள் ஓர் தளையறுந்த படகு என நினைத்துக் கொள்வேன். கோபம் வராது என்றார்.
    சீடனுக்கு ஓரளவு புரிந்தது. ஓர்நாள் சீடர்களுடன் வெளியில் சென்று கொண்டிருந்த போது ஞானியின்மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவர்மீது கல்லை எறிந்து ஓடப்பார்த்தான். சீடர்கள் விரைந்து அவனைப்பிடித்து அடிக்க முயன்றனர். ஞானி சீடர்களிடம் அவன் ஓர் தளையறுந்த வெற்றுப் படகு. அவனை துன்புறுத்தாதீர்கள். அவனை அழைத்துவாருங்கள் என்று அருகில் அழைத்து தன்னிடம் உள்ள பழங்களில் ஒன்றைக் கொடுத்தார். தன்மீது எதாவது சாபம் இட்டுவிடுவார் எனப் பயந்தவனுக்கு பழ ம்கிடைத்தது. அன்பின் வயப்பட்டான். அதுகாறும் கொண்டிருந்த வெறுப்பு மறைந்தது.
    சீடர்கள் அவன்மீது நீங்கள் கோபம் கொள்ளவில்லை. அதுசரி. எதற்காக பழம் தந்து உபசரிக்கின்றீர்கள் என்றனர். ஞானி சொன்னார் தன் மீது கல் எறிந்தவனுக்கு ஐந்தறிவுடைய மரம் பழம் தரும்போது, மனிதநேயத்துடன் நான் கனி தருவது தப்பாகாது என அறிவுரை பகர்ந்தார். கல்வீசியவன் மனிதனான். மகானின் காலில் விழுந்தான்.

யார் தவறு!

Written by

     தன் பின்னால் வந்துகொண்டிருந்த சீடன் திடீரென்று அலற நின்றார் சாது. கல் ஒன்று காலை இடித்துவிட்டது என்று வருத்தத்துடன் கூறினான். சாது உடனே அவன் காட்டிய கல்லைப்பார்த்து, ‘கல்லே ஏன் சீடனின் காலை இடித்தாய்?’ எனக் கோபமுடன் கேட்டார்.
    கல்லிற்கு உயிரேது, அது எப்படி பதில் கூறும்! என திகைப்புடன் சொன்னான் சீடன். சாது சொன்னார், சீடனே அந்த உயிரற்ற கல் உன்னை இடிக்கும்போது ஏன்பேசாது. நீயாக அதன்மேல் கவனமின்றி இடித்துக் கொண்டு, கல் இடித்துவிட்டது எனக் கூறினாய், பலர், இதைப்போன்று தவறுகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டு பிறர்மீது சுமத்துகின்றார்கள். தான் கல்லின்மீது குற்றம்போல் சொன்ன சொல்லிற் உள்ளதவறுக்கு சரியான பாடம் புரிந்தான் சீடன்.

அன்புடன் கலந்தது!

Written by

    பண்பு நிறைந்த ஓர் வீட்டின் கதவு தட்டப்பட்டது. அந்த ஒலி கேட்டதும் வீட்டின் உள்ளே இருந்த கணவன் மனைவி இருவரும் கதவைதிறக்க வந்தனர். திறக்குமுன் வந்திருக்கும் தாங்கள் யார் எனக் கேட்டனர். வந்தவர்கள் நாங்கள் செல்வம், வெற்றி, அன்பு. உங்கள் பண்பு கண்டு வந்துள்ளோம். எங்களில் யார் ஒருவர் உங்கள் வீட்டிற்குள் வர அனுமதி கொடுப்பீர்கள் எனக் கேட்டனர்.
    கணவன் மனைவி இருவரும் சிறிது யோசனை செய்து, உங்களில் யார் அன்போ, அவர் வரலாம் என்றனர். அன்பு நுழைய, தொடர்ந்து வெற்றி, செல்வம் இரண்டும் அன்பு இன்றி நாங்களில்லை எனக்கூறி உள்ளே வந்தது. எனவே எல்லோரிடமும் எல்லாவற்றின் மேலும் அன்பு கொள்ளுங்கள். எல்லா இன்பங்களும் அடைவீர்.

நீங்கள் ஒளியாகுங்கள்!

Written by

    தன் ஸ்தூல வாழ்க்கையின் இறுதியில் படுக்கையில் இருந்த குருவை நோக்கி அவரின் சீடர்கள் நீங்கள் இது காறும் எங்களை நல்வழி நடாத்திக் கொண்டிருந்தீகள். உங்கள் அறிவுறையில் நல்வழி கண்டோம். நீங்கள் இல்லா வாழ்வு எங்களுக்கு ஒர் ஒர் இருண்டவானம். அந்த இருளில் நாங்கள் தடுமாருவோமே. எங்கள் கதி என்ன ஆவது என பேதலித்தனர்.
    அன்புடையவர்களே! எல்லா மானுடல்களும் ஓர் நாள் அடையவேண்டிய நிலையைத்தான் நான் அடையப்போகின்றேன். இதுகாறும் நீங்கள் சென்ற நல்வழியை நினைவு கூறுங்கள். என்றும் எப்போதும் இருட்டு எனக்கலங்காதீர்கள். அங்கே நீங்களே விளக்காக, விளக்கின் ஒளியாக மாறுங்கள். நல்வழி, நல்வாழ்வு, நலவாழ்வு பெறுவீர்கள் என்றார்.

தர்மத்திற்கு நன்மை!

Written by

    சத்யபாமாவின் தந்தை சத்ராஜித் தன்மகளை மணப்பதற்கு சீதனமாக, தான் சூரியனை உபாசித்தி பெற்ற அரிய ‘சியமந்தகமணி’ யை கொடுக்க, கிருஷ்ணர் அதை வாங்க மறுத்தார். அந்த அரிய மணியால் செல்வம் சேர்ந்தது. நாடே சுபிடசம் அடைந்தது. ஆனால் சத்ராஜ் தன்னிடம் சேரும் செல்வத்தைப் பார்த்து எல்லோரும் பொறாமைப்பட வேண்டும் என நினைத்தான். அந்த மணியால் மமதை கொண்டான்.
     சததன்வா என்ற உறவுமுறைப் பையனை அனுப்பி உனக்கு பெண்தான் கொடுக்கவில்லை, அந்தமணியையாவது பெற்றுக்கொள் என அனுப்பினார் அக்ரூவர். சததன்வா தான்கேட்டு மணி கிடைக்காதலால் சத்ராஜை கொன்று மணியை அடைந்தான். விபரம் அறிந்த பலராமரும், கிருஷ்ணரும் தன்னை நோக்கி வருவதை அறிந்த சததன்வா, அக்ரூவரிடம் அந்தமணியை கொடுத்துவிட்டு தப்பியோட நினைக்க, கிருஷ்ணர் அவனைபோரிட்டு வதம் செய்தார். அக்ரூவர் சியமந்தக மணியுடன் காசி சென்று யாகங்கள் செய்வதை அறிந்து அங்கு சென்று மணியுடன் அவரை துவாரகை அழைத்து வந்தார்.
    எந்த பொருளாக இருந்தாலும் தர்மத்திற்காக உபயோகப்படும்போது நன்மை பயக்கும். இல்லையெனில் புத்தி அலைக்கலைக்கப்பட்டு எவராயினும் அழிவர் எனக்கூறி, யாகங்கள் தொடர்ந்து நடத்த அக்ரூவரிடம் அந்த ‘சியமந்தக’ மணியை அளித்தார்.

கள்வனின் மகன், கள்வன்!

Written by

   ஆற்றங்கரையில் ஓர் பெண் மணல்வீடு கட்டித் தன்தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஓரு பையன் அவ்வழி சென்றான். அவளைப் பார்த்தான். மீண்டும் அவ்வழி சென்றான். அவளிடம் குறும்பு செய்ய நினைத்தான். மீண்டும் அவ்வழி செல்ல விருப்பங்கொண்டு வந்தவன் அந்த மணல் வீட்டின் ஓர் பகுதியில் தன் காலைப் பதித்து சென்றான். மனம் பதைபதைத்தது. ஆனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மனம் குழப்பத்திலும் தன் மணல் வீடு இடிந்ததில் கோபத்திலுமிருந்தாள். வீட்டிற்குச் சென்றாள்.
    அந்த பையன் வீட்டிற்கு வந்திருந்தான். அவனுக்கு தண்ணீர் கொடுக்கச் சொன்னாள் தாய். நீர் கொடுத்தவளின் இடையை வெடுக்கென்று கிள்ளினான். ஐய்யோ! என அலறல் கேட்டு வந்த அம்மாவிடம், தட்டுத்தடுமாறி அவனுக்கு விக்கியது எனப் பொய் பகர்ந்தாள். அந்த பையனை அன்புடன் இழுத்து தலையை தடவி முதுகைத்தடவி ஆசுவாசப்படுத்தினாள் தாய். அந்தப் பொய்யைக் கேட்டு கண்சிமிட்டி மெல்லச் சிரித்தான் அவன்! இதில் யார் கள்வன்! நேசிக்கின்ற பெண்ணைத்தான் கிள்ளமுடியும். அந்த ஈர்ப்பு இருந்தால்தான் நாவில் பொய் மலரும். நல்லவர்கள் பொய்யர்களாவதும், கள்வராவதும் இதனால்தான்.

வரட்டு கவுரவம்!

Written by

   அந்த நாட்டின்மீது அந்நியரின் படையெடுப்பு நடைபெற இருப்பதை அறிந்தவர்கள் தங்களால் தூக்கமுடிந்த அளவிற்கு செல்வங்களுடன் அந்த ஊரை விட்டு செல்ல முயல்கின்றனர். ஒரு மூடு வண்டியில் ஒருபணக்காரரும் அவரது மனைவியும் இடம் பெறுகின்றனர். அந்த வண்டியில் உள்ள ஒவ்வெருவரையும் பார்த்துக் கொண்டு வரும்போது அங்கிருந்த ஓர் இளம்பெண்ணைப் பார்த்து முகஞ்சுளிக்கின்றாள். ஏனெனில் அவள் ஓர் வேசி. இதை அறிந்த மற்றப் பெண்கள் அவளை கேலி செய்து ஏளனப்படுத்துகின்றனர். தங்களது போரதாகாலம் இவளுடன் பயனம் செய்ய வேண்டியிருக்கின்றதே என புலம்புகின்றனர்.
    அந்த இழிச்சொற்களை தாங்கி புன்னகையுடன் அமைதியாக இருக்கின்றாள் வேசி எனக்குறிப்பிடப்பட்ட பெண். பயணத்தில் திடீரென்று எதிரி படை அந்த வண்டியைச் சூழ்ந்தது. அனைவரும் கீழிரக்கப்பட்டார்கள். அடுத்தது என்ன நடைபெறுமோ என்றிருந்த வேளையில் வேசி எனக் குறிப்பிடப்பட்ட பெண் அந்த கூட்டத் தலைவனை தன் வயப்படுத்தினாள். அவன் அவளைத்தவிர மற்றவர்கள் செல்ல அனுமதி அளித்துவிட்டான். வண்டியில் ஏறிய அனைவரும் ஒருவார்த்தைகூட போசமுடியா நிலையில் இருந்தனர். அந்த பெண் இல்லை என்றால் அவர்கள் உயிருடன் திரும்பியிருக்கமுடியாது. ஆனால் அவர்களுடைய கவுரவம், பலஉயிர் காத்த ஓர்உயிருக்கு வேசிஎன்பதால் நன்றி சொல்ல தயங்குகின்றது ஏனோ.

திரும்பதிரும்ப சொல்லும் அன்பு!

Written by

    ஓர் ஞானியிடம் ஒருவர் தனது குறைகளைச் சொல்லி அதிலிருந்து விடுபட வழிவகைகளைக் கேட்டுத் தெரிந்தார். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து சில சந்தேகங்களைக் கேட்டுணர்ந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து வந்து ஐயனே! எனக்கு எல்லாம் மறந்துவிட்டது. மீண்டும் ஒருமுறை எனது குறைகளிலிருந்து விடுபட வழி சொல்லுங்கள் என்றார்.
    ஞானி விளக்கமாக வழிமுறைகளைச் சொன்னார். நான் இப்படி திரும்ப திரும்ப உங்களக் கேட்பது உங்களுக்கு உபத்திரமாக இல்லையா என்றான். ஞானி அவனிடம், அங்கிருந்த எரியும் விளக்கை எடுத்து எரியாத விளக்கை ஏற்றச் சொன்னார். அவனும் அப்படியே செய்தான்.
    அப்போது ஞானிசொன்னார், ‘இந்த முதல் விளக்கிலிருந்து மற்ற விளக்குகளை ஏற்றியதால் இந்த விளக்குக்கு ஏதும் நஷ்டமில்லை’ அதைப்போன்றே எத்தனை முறை என்னை நாடினாலும் எனக்கு எந்த துயரமும் கிடையாது என்றார். என்னே அன்பு மனம்!

நம்மை கவனிப்பதே பெரிய வேலை!

Written by

    துறவிகள் எல்லாம் சோம்பேறிகள் என நினைக்கும் ஒருவர் துறவிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்டறிய அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கே ஒருவர் நிற்பதைப் பார்த்து, சும்மா இப்படி நின்றுகொண்டிருக்கின்றீர்களே! ஏன் எனக் கேட்டார். ‘2-கழுகுகள், 2-குரங்குகள், 2-முயல்கள், ஒரு நச்சுப்பாம்பு இவைகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றேன்’ என்றார். வந்தவருக்கு ஒன்றும் தெரியவும் இல்லை, புரியவும் இல்லை.
    துறவி புன்னகையுடன், என் 2கண்களும் 2கழுகுகள், துறு துறுவென்று சுழன்று தேடும். என் 2கரங்களும் 2குரங்குகள், எதை பிடிக்கலாம் என அலையும். என் 2கால்களும் 2 முயல்கள், துள்ளிக்குதித்து ஓட நினைக்கும். என் நாக்கு ஓர் நச்சுப்பாம்பு, யாரை சொற்களால் தீண்டலாம் எனக் குறியாக இருக்கும். இவற்றை அதனதன் விருப்புக்கு செயலபட விடாமல் எச்சரிக்கையுடன் கண்காணிப்பதுவே என்வேலை. அது உங்கள் கண்களுக்கு நான் சும்மா இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
    வந்தவர் தம்மை தாமே கவனித்துக் கொள்வது என்பதே பெரிய வேலை என்பதை உணர்ந்தார்.

எண்ணங்களில் உயர்வு!

Written by

    இருள் சூழ்ந்த மேகத்தில் அடர்த்தியாக ஈரப்பதம் நிறைந்த நீர் திவலைகள். இடி இடித்தது. மின்னலடித்தது. நீர்திவலைகள் மேகக் கூண்டிலிருந்து விடுபட்டுச் சிதறியது. ஒவ்வொன்றாக பூமியை நோக்கி பாய்ந்தது. முன்னாள் சென்றுகொண்டிருந்த நீர்த்துளியைப் பார்த்து பின்னால் வந்து கொண்டிருந்த துளி சொல்லியது, இவ்வளவு வேகம் ஏன்!  அவசரமாகச் சென்று கடலில் விழுந்து உப்பு நீராகி யாருக்கும் பயனின்று போகாதே. பார்த்து பச்சைக் கம்பளம் போன்ற புல் வெளியில் விழுந்து சுகமாக இருக்கலாம் என்றது.
    எங்கே விழவேண்டும் என்று நான் மேகக்கூட்டத்திலிருந்து விடுவிக்கும்போதே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இடத்தை நான் சென்றடைகிறேன். எனது ஆசை எல்லாம், ஆற்றிலே, குளத்திலே விழுந்தால் மக்களுக்குப் பயன்படுவேன். கடலில் விழுந்தால் மீண்டும் ஆவியாகி எனது பணியைச் மீண்டும் செய்வேன். பசும் புல்லில் படுத்து என்ன பயன் எனக்கூறி புவியை நோக்கி வேகமாகச் சென்றது.

    பின்னால் வந்து கொண்டிருந்த துளி முதல் துளி எங்கே விழுகின்றது எனக் கவனித்தது. கடலை நோக்கிச் சென்ற அது அங்கிருந்த சிப்பியின் வாயினுள் விழுந்தது. பின்னாலில் அது ஓர் முத்தாக சுடர் விட்டது.
    பின்னால் வந்த துளி மிகவும் பசுமையான புல்வெளியில் ஓர் புல்லின் மேல் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி தான் நினைத்தமாதிரியே புல்வெளிக்கு வந்தது கண்டு ஆனந்தப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மழைவிட அந்தபுல்வெளிக்கு வந்த மனிதர்களின் செருப்பு காலடியில் மிதிபட்டு சிதறி கரைந்து மறைந்தது.
வாழ்வு பயணத்தில் உயர எண்ணங்களில் உயர்வு வேண்டும்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930443
All
26930443
Your IP: 54.205.116.187
2024-03-28 20:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg