gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 11 December 2019 07:38

அறம் செய்வான் திறம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி!

#####

அறம் செய்வான் திறம்!

251. தம்மை அறிபவர் சிவபெருமானது திருவடியை வணங்குபவர் ஆவர். தம்மை அறிபவர் அறத்தை மேற்கொள்பவர். தம்மை அறிபவரே சில உண்மை தத்துவங்களை அறிபவர். தம்மை அறிபவர்க்கு இறைவனே உறவினன் ஆவான்.

252. எல்லோருக்கும் முடியக்கூடியது என்று சொன்னால் அது உணவை உண்பதற்கு முன்னால் இறைவனுக்கு ஒர் பச்சிலை வைத்து வணங்குதலும், பசுவுக்கு ஒருவாய் புல் அளித்தலும், உண்பதற்கு முன்பு சிறிது உணவை பிறர்க்கு கொடுத்து உண்பதும் பிறரிடம் இனிய சொற்களைப் பேசுதலும் ஆகும்

253. அகப்பற்று புறப்பற்று நீக்கிய ஞானியருக்கு அளிக்கும் உணவே அறமாகும் என்று அற நூல்கள் கூறுகின்றன. அவ்வாறிருந்தும் கல்வியால் சிறந்து விளங்கும் மனிதர் எதிர்பர்த்து ஒரு கிணற்றங்கரையிலோ அல்லது ஆற்றங்கரையிலோ உள்ள சிவஞானியரை அழைத்து உண்ணச் செய்வதன் பயனை அறியவில்லையே!

254. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களை நீக்கி அறிவைப் பெருக்கி அறம் செய்யாமல் இருப்பவரே! செல்வம் வந்த நாளிலும் அறம் செய்ய வில்லை, உலக நோக்கில் விழிப்புடன் இருந்து என்ன செய்யப் போகின்றீர். உடல் எரிந்து அழியும் வரை அறம் செய்யாமல் காத்திருந்து என்ன பயன்.

255. உயிரின் நிலையை அறியாமல், நல்லவர் என்று எண்ணாமல், இங்கு வறுமை உள்ளது என்பது அறியாமல், இளையவர் என்று கருதாமல் வலிமை உடைய உயிரை இயமன் கொண்டு செல்வான். எனவே காலதேவன் வருமுன் உடலை நிலைக்கச் செய்ய நல்ல தவத்தை செய்வீர்!

256. அகப்பற்றும் புறப்பற்றும் துறந்தவர்க்கு உலகில் எந்த வகையிலும் உறவு இல்லை. இறந்து பட்டவருக்கு உலக இன்பமும் இல்லை. இப்பிறவியில் அறம் செய்யாதவர்களுக்கு இறைவன் வழித் துணையும் இல்லை. இவர்கள் அறம் செய்யும் வகையை அறியாதவர்கள்.

257. அறிவை தெய்வமாக மதிக்கும் உயிர்கள் முற்பிறவிப்பில் செய்த தவத்தின் காரணமாக அறம் செய்து மேன்மை அடைவர். உடலே தெய்வம் என்று நினைக்கும் உயிர்கள் தானே தெய்வம் என்று எண்ணி அறம் செய்யாது இயமன் வருவதை அறியாது அழிந்து போவர்.

258. உயிர்களைப் பீடித்திருக்கும் வினையான கடலின்று கரையேறுவதற்கான தோனியாய் உயிர்க்கும் உயிரின் உறவிற்கும் களைப்பை நீக்கி காக்க இரண்டு வழிகள் உள. அழியாப் புகழை உடைய இறைவன் திருஅடியைப் பற்றி அறத்தை செய்வது ஒன்று. மற்றொன்று இல்வாழ்வை நிகழ்தக்கூடிய அறிவு. இவ்விரண்டுமே மறுமைக்கு துணையாகும்.

259. பற்றாய் நின்ற உண்மைப் பொருளை உலகில் குறைகள் ஏதும் சொல்லாதவனாய் அறநெறி தவிர பிற நெறியில் செல்லாமல் இருந்து உயிர்கள் மற்றவர்க்கு கொடுத்த ஒன்றே துணையாகும். அது சிவம் வழிகாட்டிய முத்தி அடைவதற்கான வழியாகும்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1746 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 11:41
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26947764
All
26947764
Your IP: 44.222.186.148
2024-03-29 15:38

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg