ஓம்நமசிவய!
தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
#####
வேள்வி கேட்டு அமைதல்!
300. அறங்களைக் கேட்டும், அந்தணிரின் அறிவுரைகளைக் கேட்டும், பாவங்கள் இவை என்று சொல்லும் நீதி நூல்களைப் படித்தும், தேவர்களின் வழிபாட்டு மந்திரங்களைக் கேட்டும் மற்ற சமய் நூல்களைக் கேட்டும், பொன்னார் மேனியன் எம்பெருமானின் திறம் கேட்டும் பெற்றது சிவசக்தி மட்டுமே!.
301. எல்லாத் தேவர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அந்த திவ்விய ஒளியை வுடைய திருமூர்த்தியை அறியாதவர் யார்!. அவ்வாறு அறிந்தபின் சிவ நூல்களைக் கற்று உணருங்கள் கற்றவரிடம் உண்மையை கேட்டறியுங்கள். கற்றவற்றையும் கேட்டவற்றையும் அனுபவத்தில் உணருங்கள் அனுபவத்தில் உண்மையை உணர்ந்தவர் துதித்து சிவத்துடன் கூடி நிற்பார்.
302. நந்தியாகிய சிவன் வேண்டினால் திருமால் பணி செய்வார். நான்முகனும் ஆணைவழி நடந்து சிவனுக்கு பணி செய்வார். சிவனது ஆணைவழி நிற்பவர் தேவர்கள். சிவன் ஆணையை உணர்ந்து பணியாற்றுதலின் பயன் திருவடியில் நீங்காத பற்றினை அடைவர்,
303. பெருமான் இவர் எனப் பேசும் உண்மை ஞானம் பெற்ற உயிர்கள் பின்பு தேவரும் ஆவர். அரிய மேல் நிலையை அடைந்து மாதவத்தினை உடையவர்க்கு மகிழ்வுடன் அருள் செய்பவன் எங்கள் சிவபெருமான்
304.இறப்பும் பிறப்பும் வினையின் வழியே சிவன் அருல் செய்வான். இத்தன்மையை உணர்ந்துபிறர்க்குச் சொல்லியும் தானே பேசியும் மகிழ்வை அடைந்து அன்புடன் இருங்கள். சிவன் சிவசோதியாய் விளங்கி வாச மலரில் பொருந்தி அருள் செய்து கொண்டிருக்கின்றான்.
305. சிவனின் பெருமையும் அது சம்பந்தப்பட்ட கேள்வியும் கேள்வியால் ஏற்பட்ட ஞானமும் மனத்தில் சிந்திக்கும்போது நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கியிருந்தால் தேவர்களின் தலைவனான் எம்பெருமான் குறைவில்லாமல் அளவில்லாத காலம் அருள் புரிவான்.
306. உலகத்து தொடர்பினால் இறையணுபவம் உண்டாகும் எனச் சொல்வது மண்ணால் சோற்றைச் சமைத்து சிறுவர் உண்டு மகிழ்வது போல ஆகும். குறிப்பிட்டு சொல்லி அறிய முடியாத ஒன்றான சிவனின் பரந்த தன்மையை உணராதார் தன் ஆன்ம சொரூபத்தை அறியாதவர் ஆவர்.
307. உடம்பிற்கு சிறந்த துணையாவது உயிராகும். அந்த உயிருக்குத் துணையாய் இருப்பதோ உலகத்தில் உள்ள ஞானியரிடம் பெறும் கேள்வி அறிவாகும். அந்த அறிவால் பெருமானின் திருவடிகளை நினைந்து இருத்தலே சிறந்த துணையாகும். பெறுவதற்கரிய துணையைப் பற்றி கேட்பதே பிறவி நீங்க வாய்ப்பாகும்.
308. நான்முகன், ருத்திரன், திருமால் ஆகிய மூவர்க்கும் பழைமையானவர் சிவன். தன்னை இகழந்து கூறுபவரின் இடறுக்கு இடமாய் இருப்பவன். மகிழ்வுடன் அந்த ஆதி சிவனின் பெருமையை துதித்து உணராமல் விலகி நின்றவர்க்கு அவன் கல்லில் செதுக்கிய கற்பசு ஆவான்.
309. ஆண்மக்களிடம் தன்னை பெருத்தியுள்ள இறைவன் மனத்துடன் வாக்கையும் பொருத்தி உணர்ந்திருப்பவன். அப்பெருமானின் வடிவம் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டது. உடம்பின் அச்சிலிருந்து ஆணி கழன்றபோதும் ஆதியான சிவபெருமானை விரும்பி நின்றவரே பொருந்தி நிற்க முடியும்.
திருச்சிற்றம்பலம்
#####