ஓம்நமசிவய!
திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!
#####
இலிங்க புராணம்!
347. ஆதி சிவனை நோக்கி திருஅடி சேர்வேன் என சிரசின் இடப்பக்கம் விளங்கும் சக்தி கூறி உடலின் சிரசில் சிவசக்தியாக விளங்கும் சிவனை அடைய உறுதியான தவம் செய்து தேவர்கள் காணும்படியாக அர்ச்சித்து முறையாக வழிபட்டாள்.
348. உடலின் இயல்புபடி மும்மலக் கோட்டையை அழிக்கும் இறைவனை அடைய அருமையானவன் எனச்சொல்லி சோர்வு அடைய வேண்டியதில்லை அன்புடையவர்க்கு இறைவன் பொய்யன் அல்லன். அன்பர்களிடம் அருளுடன் பொருந்தி நின்று கருணை புரிபவன்.
349. சுவதிட்டானத்தில் இருக்கும் பிரம்மன் மணிப்புரகத்தில் இருக்கும் திருமால் ஆகிய இருவரும் முறைப்படி மூலாதர சக்கரத்தை சுற்றிவர ஒளிவடிவாய் விளங்கும் உருத்திரனும் திருமாலுக்கு சகஸ்ர தளத்தில் விளங்க அருள் புரிந்தனன். சுவாதிட்டானத்திலிருந்து உற்பத்தியைபப் பெருக்காது மேலே பிரமனுக்கு ஒளியைத் தந்தான்.
350. பொறிகளும் புலன்களும் இயங்கி இருபது தோள்களின் அகன்ற மலையை எடுக்க முயற்சித்த இராவணனது நிகர் இல்லாத வலிமையை ஒடுக்கி, அவன் தன் சிறுமை உணர்ந்து இறைவா காப்பாற்று என்று வேண்டியபோது நீங்கா பக்தியை நிலை பெருமாறு செய்தான் பெருமான்.
351. சிவனான சண்டீசன் தனக்கு நேர்வதை காரண காரியத்துடன் அறிந்து கொள்ளும் வல்லவன். வெள்ளை ஒளியான மணலைச் சேர்த்து பிறவி நீக்கும் வகையில் ஜாணேந்திரியம் மற்ற புலன்களில் மேயாமல் தடுக்க மாயையான உடலான தந்தை அதைப் பொறுத்துக் கொள்ளாமல் சினந்து ஒடுக்க சண்டீசன் அக்னி கலையான வாளினால் பிங்கலை எனும் இரண்டு கால்களை திழிற்படாமல் செய்து சிவ அருள் பெற்றான்.(சண்டீச நாயனார் வரலாறு)
352. சிவபெருமானை நோக்கி ஓடி வந்த தேவர்கள் எல்லாம் முக வாட்டத்துடன் அடைக்கலம் ஆகி இறைவா போற்றி என வணங்கினர். ஒப்பில்லாத புகழை உடைய சிவபெருமான் எழுக என அருள் செய்தார்.
#####