ஓம்நமசிவய!
திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!
@@@@@
தக்கன் வேள்வி!
353. சிவபெருமானை நினையாமல் தக்கன் ஆண் பெண் கூட்டுறவான வேள்வி செய்ததால் சினம் கொண்டு காமாக்னியால் தக்கப்பட்டு விந்து நீக்கம் உண்டானது. அதனால் நினைத்தவண்ணம் விந்து ஜெயம் என்ற பூஜையின் பய்னைப் பெறவில்லை. சிவன் சினந்ததால் தேகாரியச் சிதைவு ஏற்பட்டு வெளியேறினர்.
354. ஆண் பெண் கூட்டுறவைச் செய்ய செருக்குடன் எழும் திருமால் உலகத்தில் படைப்பவன் சிவன் அல்லன் யாமே என்றான். அதனால் பந்தம் உண்டாக்கும் பாசக்கடல் சூழ்ந்து வருந்தியபின் சிவனை நோக்கித் தவம் செய்ய முடிவில்லாத சிவபெருமானும் வீட்டுணு தத்துவம் விளங்கும்படி செய்தனன்.
355. பிரமனும் தக்கன் வேள்விக்கு தானே தலைவன் எனச் செருக்கு கொண்டான். காமாக்கனி மூண்டெழுந்தபோது அதன் தன்மையில் பொருந்தி சிவபெருமான் முறையாய் ஆரவாரத்துடன் விளங்கி பிரமன் குற்றம் பொருத்து அவனுக்கு அருளினான்.
356. பிரம்மன், திருமால் முதலிய தேவர்கள் அத் தன்மையைப் பெற்றதற்கு காரணம் சிவபெருமானே. அந்த அக்னி கலையை உள்ளே விளங்கும் வண்ணம் அந்த அக்னி கலை நீங்காவண்ணம் சிவன் நிறைந்து விளங்கியுள்ளான்.
357. எல்லா இடத்தும் நீக்க்ம் அற நிறைந்துள்ளவன் சிவபெருமானே என்பதை உணர்ந்த தேவர்கள் துதிக்க ஆதாரங்களில் கீழ் உள்ள மூலாதாரத்தின் அக்னிக் கனல் சுழுமுனை வழியாக மேலே எழுந்து சிவந்த ஒளியானது சகஸ்ர தளத்தில் போய்ப் பற்ற, வழிபடும் முறை இதுவே என சிவபெருமான் அருள் செய்தான்.
358. திருமால், பிரமன், தக்கன், சூரியன், ஆகியவருடன் சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் என்பவர் தலை, முகம், மூக்கு, கை தோள் என்பனவற்றை சிவனருள் பொருந்தாமையால் இழந்து பின்பு நல்லவர்கள் ஆனார்
359. காதில் கேட்கக்கூடிய உச்சரிக்கக்கூடிய மந்திரம் செல்லி சிவ அருள் பெற்ற தேவர்கள் செபிக்கத் தகாத மந்திரத்தால் பிராணவத்தை மூலதாரத்தில் உள்ள அக்னியைத் தூண்டி நாதம் ஏற்படச் செய்து பொருந்த நோக்கும் மனதை ஒருமைப் படுத்தும் செவிமந்திரம் கொடியது ஆகாது.
360 .தேவர்கள் உடலில் உள்ள ஒன்பது துவார குண்டங்களும் சிறப்பான இன்பும்பெற எங்களுக்கு அருளல் வேண்டும் என வேண்ட கொடிய அசுரர் அழிந்து போகும்படி பிரணவம் என்ற வில்லால் ஆணவம் முதலிய மும்மலங்களை எரித்து சிவன் அருளினான்.
361. சொல்பவர் கலங்கினும் நீ கலங்காதே! முன்பு சினந்து பின்பு அருள்செய்த நாதவடிவினன் சிவபெருமானே தன்னை அழைக்காது அலட்சியப்படுத்திய காமவேள்வியை அழித்தான். இன்ப வடிவான அவனை அன்பு செய்து அடைய வேண்டும். சொல்பவர் கூறும் மயக்க நெறிபற்றி கவலை கொள்ளாதே!
#####