gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:31

சர்வ சிருஷ்டி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

#####

சர்வ சிருஷ்டி!

381. ஆதியும் அந்தமும் இல்லாத சிறப்பான பரம்பொருள் அறிவுமயமாய் தன்னுடன் பிரியாத நிலையில் விளங்கும் பராசக்தியான பேரொளியில் பரம்-சிவன் தோன்ற தீமையற்ற பரை*பராசக்தியும் தோன்றும். அந்த பராசக்தியிடம் நாதம் விளங்கும்.

382 .நாதத்திலிருந்து விந்து தோன்றும்.. குற்றமற்ற மாயையில் தோன்றிய விந்து சிவன் சக்தி எனப்பிரிந்து ஞானம் என்றும் செயல் என்றும் ஆகும். உலகம் உருவாக வேண்டும் என்ற இச்சையினால் அனைத்தும் சுத்த மாயையில் தோன்றும்.

383. தத்துவங்கள் தோன்றும் இடமான சக்தி பராசக்தியிடம் தோன்றி நவமணியின் ஒளியுடன் உள்ளே கலந்து பரவி இருக்கும். சிறப்பாகத் தொழில் செய்கின்ற அந்த சக்தியின் ஆற்றல், பெருமைகளைச் சொல்லாமல் சொன்னால் அளவிட முடியாதது ஆகும்.

384. எண்ணங்களுக்கு வெகு தூரத்தில் சிவப் பேரொளியானவன் எண்ணங்களுக்கு உட்பட்ட சக்தியாய் இச்சை காரணமாக தோன்றிய நாதத்தைப் பொருந்தி விந்துவாய் ஐந்தொழில் பாரத்தை ஏற்றும் நடத்தும் சக்தி ஒப்பில்லாத சக்தி உடையவளாகவும் விளங்குவாள்.

385. அசுத்த மாயை வானமாகி காற்றாக வளரும். நெருப்பிலும் நீர் பொருந்தி கடினமான நிலமாகும். ஒன்றில் மற்ற நான்கு பூதங்களும் கலந்து ஐம்பூதமாய் பொருந்தி நின்றலே புவனம் ஆகும்.

386 .புவனத்தை படைப்பது சிவன் சிவசக்தியாம். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் அவர் மக்களாவர். புவனம் படைக்கும் சிவசக்தியின் சொரூபமே நான்முகனாகவும் பிரபஞ்சத்தை படைத்து செம்மையாக்கும் மூர்த்தியாகும்.

387. புண்ணியனான நந்தியெம்பெருமான் அறிவின் மயமாய் எல்லாப் பொருளிலும் பொருந்தியுள்ளான். குளிர்ச்சி பொருந்திய மாயா பொருளை காத்து அருளுகின்றான். சத்தியும் கண்ணோட்டமாக எல்லாவற்றிலும் கலந்து தாங்கும் தன்மையுடன் எல்லா உலகங்களிலும் எழுந்தருளுவாள்.

388 நீர்த்தன்மையான மணிப்பூரகத்தில் ஆணுக்கு இன்பம். ஏற்படும்.. அக்னி இருக்கும் அநாகத்தில் சோதி உண்டாகும். வாயு இருக்கும் விசுக்தியில் உயிர்ப்பு நிலை கொண்டிருக்கும். நாதம் சக்தியைத் தரந்து கொண்டிருக்க நீர் மண் இடையே உள்ள சுவாதிட்டானமே உற்பத்திக்கு உகந்த இடம்.

389. ஏழு உலகையும் உண்டு உமிழ்ந்த திருமாலுடன் எல்லா அண்டங்களிலும் வாழும் தேவர்களுக்கும் தலைவனும் முதல்வனும் ஆன சிவபெருமான் உலகைப் படைக்கும் பிரமனுக்கும் பழமையாக உலகம் படைக்கும் உண்மைப் பொருளாகும்.

390. பெருகும் நீர்ப்பகுதியான மணிப்பிஊரகத்திலுள்ள திருமாலுடன் சிரசில் வெண்ணிற ஒளியுடன் விளங்கும் சிவபெருமான் சுவாதிட்டானத்தில் உள்ள பிரமனுடன் உயிரை பொருத்தும் தன்மையை உணர்ந்திருந்தான்

391. அன்புடன் அனைத்துப் பொருளகளிலும் கலந்துள்ளவன் படைப்பிற்கு காரணமான சிவபெருமான். அவன் திருமாலாக கொப்பூழ் மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்றான் .அவனே புவனங்களை படைக்கின்ற நனமுகனாக இருக்கின்றான். அவனே ஆர்ணமாகவும் உலகாகவும் இருக்கின்றான்.

392. பயன்கள் தரும் பெரிய மாணிக்கத்தை விளங்கச் செய்யும் தன்மையை அளிக்க சிவபெருமான் இருக்கின்றான். அவனே நான்முகனுக்கு ஒளியை அளித்து படைப்புத் தொழிலுக்கு மூலாதாரத்திலிருந்து உதவுகின்றான். அவன் துணைகொண்டு பய்னகளை அடையும் காரணத்தை நான் அறிந்து கொண்டேன்.

393. அழித்தல், படைத்தல் காத்தலாகிய மூன்றையும் நினைக்கையில் சிரசைச் சுற்றுயுள்ள எட்டுத் திசைகளிலும் மூலாதாரத்திலிருந்து எழும் சோதி பரவியிருக்கும் அதில் அவனைக் காணலாம்.

394. குற்றமில்லா சிவன் உயிர்களிடம் பொருந்திய பக்குவம் உடையவன். என் உயிருக்கு வளம் தது உடலில் பொருந்தி முன்பு துன்பத்தைக் கொடுத்த உடலுக்குத் துணையாயிருந்து துன்பத்தைப் போக்கி உயிர்ப்பாக இன்பத்தை தந்து கொண்டிருக்கின்றான்.

395. படைப்பிற்குண்டான தன்மையையுடைய சிவன் ருத்திரம் மற்றும் கொன்றை மலர் அணிந்து சிவந்த பொன் போன்ற மேனியை உடையவனாயிருந்தும் பிறவிக்கு உயிர்வாழும் உடம்பாயும் இருக்கின்றான். அவனே உயிரை சிவமாக்கி அருள்பவன்.

396 ஒருவன் ஒருத்தியாக சிவனும் சக்தியும் விளயாடிய விளையாட்டு எல்லாம் செய்ய வல்லது, சூரியனின் பயணம் மாறுபாட்டிற்கு ஏற்றவாறு பருவங்கள் மாறி விளைவுகளைத் தருவது போல் இறைவன் அருள் பதிவின் மாறுபாட்டால் உருவாகும் நிலைக்கு ஏற்ப பயன்களும் மாறி மாறி விளங்கும்.

397. உருத்திரனிடம் புகுந்து அழிக்கும் செயலை அறிவான் சிவபெருமான். சக்கரப்படையை உடைய திருமாலிடம் பொருந்தி உலகைக் காக்கும் செயலை அறிவான் சுவதிட்டானத்தில் இருக்கும் பிரமனிடம் பொருந்தி படைப்புத் தொழிலை அறிவான். அவ்வாறு அறியும் சிவபெருமானின் ஆட்சிக்கு உட்பட்டே மூவரும் தொழிலைச் செய்கின்றனர்.

398. ஆணவ மலமுடைய நான்முகன், திருமால். உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரில் மேல் உள்ளவர் காரண ஈசர் என்றும் கீழ் உள்ளவர் காரிய ஈசர் என்றும் கூறப்படுவர். இறைவன் விருப்பப்படி ஐத்தொழிலை நடத்தி சுத்த மாயையில் தோன்றி ஆனவ மலம் நீங்காதவர் என்றே சொல்லப்படுவார்.

399. மாயை என்ற சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என மூன்றாகும் சதாக்கியம், ம்கேசுவரம், சுத்தவித்தை மூன்றும் மாயையின் காரியம். விந்தைப் பெற்ற நாதம் பரையினிறு தோன்றும். பரையுடன் சிவனது பழமையான விளையாட்டே படைப்பு தொழிலாகும்.

400. வான முதல் ஐந்து பூதங்களை இயக்கும் சதாசிவர் முதலிய ஐவரும் மாயா சக்தியுள் பொருந்தி உடம்பிலும் உயிரிலும் தொழில் செய்கின்றனர். சதாசிவர் உருத்திரன் திருமால் நன்முகன் ஆகியோராய் வான் மண் எனும் உலகங்களை கண்பதற்குரியதாய் செய்கின்றனர்.

402. கச்சினை அணிந்த கொங்கைகளையுடைய மணோன்மணி மங்களப் பொருளாய் எல்லாவற்றிற்கும் காரணமாகவும், படைத்தல் தொழிலில் கலந்தவளாக இருக்கின்றாள். அவள் பிராண வடிவமுடையவள்., வேதத்தின் பொருளாவாள். தேவர்களை மயக்கும் ச்க்தி, முழுமையான சந்திர ஞானசக்தியும் அனுபம ஞானமும் உடையவள்.

403. மகேசுவரன் சதாசிவத்துடன் கலந்து நின்று கீழே உள்ள தொழில் செய்யும் ருத்திரனாகவும், திருமாலாகவும், ஆண்பெண் சேர்க்கைக்கு உதவும் சுவதிட்டானத்தில் உள்ள பிரமனாகவும் பொருந்தியுள்ளான்.

404 சிவனே சதாசிவன் என்றாகி ஏழு உலகங்களையும் படைக்கின்றான். படைத்து ஏழு உலகங்களையும் காக்கின்றான். அவனே எழு உலகங்களையும் ஒடுக்குபவன். அவனே உலகம், அவனே உயிர் என விளங்குகின்றான்.

405. செந்தாமரை மலர்போன்ற தீயின் நிறத்தையுடைய ருத்திரன், மேகம் போன்ற கரிய நிறமுடைய் திருமாலாய் செய்யும் மாய பந்தத்தால் பூங்கொத்துக்களை அணிந்த பூவையர் கூட்டத்தை மயக்கி வலிய உலக உற்பத்தியை உருவாக்குகின்றான்.

406. சிவன் எட்டு திசைகளிலும் தேடித்திரியும் உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படி செய்தவன். மங்கையரும், ஆடவருமாய் கூடுகின்றவரின் உள்ளத்தில் எழுந்து நின்று விருப்பை உண்டாக்கும் அருள் தன்மையை நான் அறிவேன்.

407. சிவசக்தியே ஏழு உலகங்களைப் படைத்தவர். அவரே எழு உலகங்களையும் காப்பவர் ஆகும். அவரே அவற்றை அழிப்பதும் ஆகும். அவரே உலகத்துடன் உயிரை இணைத்து வைப்பவர்

408. தலைவன் சிவபெருமானும் ஜீவர்களுக்கு நன்மையைச் செய்யும் மகேசுவரர், சதாசிவரும், சுத்தமாயை, அசுத்தமாயை என்ற இரண்டிலும் ஒளி மண்டலத்திலிருந்து காரண நிலையை உண்டாக்குவர். அந்த வழியிலே என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு நிற்கும் திருமாலுக்கும் பிரமனுக்கும் சிவனே ஆற்றலை அருள்கின்றார்.

409 .அப்பன் சிவன் அருளிய ஆணையினால் நான்கு வகையான தோற்றத்தில் ஏழுவகைப் பிறப்பில் என்பத்து நான்கு நூறாயிர வேறுபாட்டுடன் கூடிய் உடல்களைப் படைதனன். இது பொய் என்று சொல்லும் மக்களை இத்தன்மையிலெ ஆணவ இருளில் ஆழ்த்துவான்.

410. சூரியன், சந்திரன், இந்திரன், அக்கினி, இய்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், நாதம் நிரம்பிய வானம், வாதனை செய்யும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற மாத்திரைகள் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற அந்தகாராணங்கள் ,அனைத்தும் சொல்லப்பட்ட மகேசுவரர் விளங்கும் விந்து ம?ண்டலத்துள் மாயையாய் வைக்கப்பட்டுள்ளன.

#####

Read 1630 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:13
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26946789
All
26946789
Your IP: 174.129.140.206
2024-03-29 14:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg