gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:52

தீர்த்தம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

தீர்த்தம்!

509. மண்டலங்களாய் உள்ள உடலில் மூலாதரம் முதல் சகஸ்ரதளம் வரை ஏழு நீர்கள் உள்ளன். உயிர்கள் செய்த வினைநீங்க இந்த இடங்களில் பொருந்தி தீர்த்தம் ஆடவேண்டும். அப்படிச் செய்யாதவர் நேர்மை உள்ளம் இல்லாத அறிவற்றவரே. அவர் பூமியில் உள்ள பள்ளத்தின் தீர்த்தங்களையும் மலையின் உள்ள சுனைகளையும் தேடித் திரிவர்.

510 தெளிந்த ஞானம் உடையவரின் உள்ளத்தில் வீற்றிருப்பவன் சிவன். வழிபாடு செய்பவர்களுக்கு குளிர்ச்சி தன்மையுடன் விளங்குவான். காம நெறியில் ஈடுபடுபவார்க்கு அடைய முடியாதவானாய் இருப்பான். பிராணாயம் பயிற்சி செய்பவர் ஒரு நாள் அவனை அடையக் கூடும்.

511. மனதில் ஒளிரும் ஒப்பில்லாத சிவபரம் பொருளை வேண்டாத ஒழுக்க முடையவர் கலந்து உணர முடியாது. நீர்ப்பகுதியை விரும்பி செல்கின்றவரின் தீய செய்லானது பள்ளத்தில் உள்ள நீரை நீர் பிடிக்கும் ஓட்டைப் பாத்திரத்தில் மூலம் மேட்டுக்கு இறைப்பதைப் போன்றதாகும்.

512. ஒளி மண்டலத்தில் வாழ்கின்றவர்கள் வான் மண்டலத்தில் செரிந்துள்ள விந்து மண்டலத்தை அடைந்து ஆதி சிவனை அடைவர். காமக்கலையை தடுத்து வெற்றி பெற்று பொருந்தும் பிரணவ ஒலியுடன் வரும் கங்கை நீர் வெள்ளத்தில் பொறிகளை உடைய அடியார்கள் நீராடிப் புனிதர்கள் ஆவார்.

513. கடலில் ஒருபொருளைத் தொலைத்துவிட்டு அதைக் குளத்தில் தேடுபவர் நீர்ப்பையான கடலில் விந்து நீங்குவதைக் கெடுத்து அதை நெற்றிப் பகுதியான குளத்தில் ஒளியாகப் பெறுபவரை ஒத்து இருக்கமாட்டார். அவர் வான் பூத நாயகர் நந்தியின் அருளால் உடலில் புகுந்து மேல் செல்வதை அறியர்.

514. உடம்பில் கலந்த நீரானது சிவனின் தாமத குணத்தால் கீழ்நிலையில் கருமையாக விளங்கும். அது இராசத நிலையில் கீழே உள்ள மூலவாயு நெற்றிக்கு வரும்போது மாதுளம் பூப் போன்ற சிவந்த ஒலியாய் விளங்கும். அது சாத்துவீக நிலையில் பெருவெளியை அடைந்தபோது வெண்மையான ஒளியாய் விளங்கும். இவ்வாறு கலந்த நீரானது தீயின் ஒளியும் காற்றின் இயக்கமும் கொண்டு இருக்கும்.

#####

Read 1657 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:20
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27068849
All
27068849
Your IP: 18.220.154.41
2024-04-24 07:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg