gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:56

சந்திர யோகம்!

Written by
Rate this item
(2 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

சந்திர யோகம்!

851. சந்திரக்கலையானது பரு உடலிலிருந்து நுண் உடலுக்கு ஏறியும் நுண்ணுடலிலிருந்து பரு உடலுக்கு இறங்கியும் வரும். இரு பக்கத்திலும் உள்ள சந்திரன் ஒரு பக்கத்தில் ஒளிர்வதும் மறுபக்கத்தில் தேய்வதுமாக இருக்கும். சந்திரகலை செயலால் நுண்னுடல் தூய்மை அடைவதற்கு ஏற்பப் பருவுடலும் தூய்மை அடையும்.

852. உடலுக்குள் இருக்கும் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்றிற்கும் முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்துமாக இயங்கும் கலைகள் எல்லாம் நடுநாடிவழி இயங்கச் செய்வது யோகி அறிந்த அறிவாகும்.

853. பன்னிரண்டு கலைகளை உடைய சூரியனைச் சந்திரனுடன் சேர்க்கப் பழகினால் உலகம் உவக்கும் பேறு அடைவர். பெருங்கால் என்ற சந்திர கலை பதினாறும் அக்கினிக் கலையுடன் சேரவே கதிரவன் கலை அடங்கி இருக்கும்.

854. சூரியன் கலை உய்ர்ந்து போகும் அளவு பன்னிரண்டு ஆகும்.. பால் போன்ற நிற்முடைய சந்திரக்கலை உயர்ந்த அள்வு பதினாறாகும். சூரியக்கலையும் சந்திரக்கலையும் இனைந்து அக்னிகலையுடன் சேர்ந்தால் அது அறுபத்தி நான்காகும். இந்த நிலையை அறிவீர்.

855. அக்கினி கலைகள் அறுபத்து நான்கும் பன்னிரண்டும் பதினாறும் முறையே அக்கினி, சூரியன், விந்து நீக்கம் இல்லாத சந்திரன் ஆகியவற்றின் கலைகளாகும் மூலாதாரத்தில் கட்டுப்படும் இவை அதிலுள்ள சீவனின் ஒளிக்கு நான்கு கலைகள். இவ்வாறு கட்டப்பட்ட அக்கினி-64, சூரியன்-12, சந்திரன்-16, வின்மீன் என்கிற சீவனொளி-4 ஆக மொத்தம் 96 கலைகளாகும்.

856. அறுபத்திநான்கும், பன்னிரண்டும், பதினாறும் முறையே அக்கினி, கதிரவன், சந்திரன் ஆகியவற்றின் கலைகள். இவை சேர்க்கப்படும் மூலாதாரத்திலுள்ள நட்சத்திரத்திற்கு நான்கு கலைகள். இவ்வாறு சேர்க்கப்பட்ட தொண்ணூற்றாறும் கலைகள் ஆகும்.

857 .சந்திர, சூர்ய, அக்கினி என்ர கலைகள் எல்லாம் இடைகலை பிங்கலை நடு நாடிகள் வழியாக தொடர்பு கொண்டவை. இவைகளின் இயல்பான கீழ் நோக்குதலைத் தடுத்து சிரசின்மேல் சகசிரதளத்தில் கூடும்படி செய்தால் யோகியர் சிவதியானத்தில் பொருந்தியிருப்பர்.

858. கீழே உள்ள அக்னியில் குறைவைவுடைய இடைகலை பிங்கலையின் அசைவினால் சேர்ந்து ஒளியாகும். சந்திர சூரிய் கலைகள் நாதத்தைச் செய்யும்போது பிரணவமாக மேலே சென்றால் அங்கே இருக்கும் ஒளியே பரயொளியாய் சக்கரமாய் புவியில் விளங்கும்.

859. நிலம், நீர், தீ, காற்று, சிறப்பான வான், அழகிய கதிரவன், அரிய சந்திரன், அக்கினி, மாறுபாட்டைச் செய்யும் சீவஒளி என்ற ஒன்பதும் பிரணவத்தின் நெறிகளாகும்.

860. தேய்பிறை முன்னிட்டு சந்திரன் கீழ் முகமாகப் போகும்போது மூலாதாரத்தில் உள்ள ஒளி பிரகாசமடையும். வளர்பிறை காலத்து சந்திரன் மேல் முகமாய் போனபோது மூலாதாரத்தில் உள்ள ஒளி பிரகாசமடையாது. மூலாதாரத்தில் உள்ள ஒளியில் எல்ல யோனிகளும் இருக்கின்றன. மூலாதாரச் சக்கரத்திற்கு கரணமான ஒளியே எல்லா சீவர்களின் வடிவாகும்.

861. சந்திர கதிர்கள் பதினைந்து நாட்களில் வளர்ந்து பெருகி முழுமை அடையும். பிற்பட்ட பதினைந்தில் சிறிது சிறிதாக தேய்ந்து பெருகிய நிலையிலிருந்து சிறுத்துவிடும். வளர்பிறையை அரிய வல்லார்க்கு அளவிட்டுச் சொல்ல முடியாத சிவபெருமானின் திருவடியை அடைய முடியும்.

862. மூலாதாரத் தீயினை எழுப்பி கதிரவன் மண்டலத்தை தாண்டி சந்திர மண்டலத்தை அடையும்போது அகர உகர மகர விந்து நாதமான ஐந்தும் விரிந்து ஒளியான பிரணவம் தோன்றும். எனவே ஐம்புலன் வழி செல்லாமல் சந்திரன், கதிரவன், அக்கினி மூன்றையும் இன்ணைகின்ற யோகம் அமையும்.

863. ஒன்றுபட்ட கலைகள் பதினாறும் உடலில் பொருந்தி நிற்கும் ஒளி நிலை கண்டும் கீழானோர் உண்மையை உணர்வதில்லை. சினம் கொள்ளும் கூற்றுவன் உடலினின்று உயிரை பிரிக்க எண்ணம் கொண்டபின் தடுமாற்றத்திலிருந்து விடுபடாமல் அவ்வெண்ணப்படியே சென்று இறப்பு என்ற குழியில் வீழ்வர்.

864. ஆண்குறியில் உள்ள சந்திரன் மூலாக்கினியுடன் பிரமந்திரம் நோக்கிச் சென்றால் கதிரவன் ஒளி கிட்டும். மூலாதாரத்தில் உள்ள அக்கினியும் மணிபூரகத்தில் உள்ள கதிரவனையும் ஒன்றாய்ச் சேர்த்தால் சந்திர ஒளி அமையும். இந்த இரண்டு ஒளியும் பிரமந்திரத்தில் ஒன்றானால் சந்திரன், சூரியன், அக்கினி கூடிய பிரணவம் நிகழும்.

865 .பன்னிரண்டு கலைகளையுடைய சூரியன் பெண், பதினாறு கலைகளையுடைய் சந்திரன் ஆண். இவ்விரண்டும் வெளியில் செல்லாமல் பிடித்து முகத்திற்கு முன் தோன்றும் ஒளியில் கல்க்கும்படி செய்தால் சிறப்பான் திருவடியின் இன்பம் தீராத இன்பமாய் விளங்கும்.

866. சந்திரனின் இடக்கண் பார்வையை கதிரவனான வலக்கண் பார்வையுடன் குரு காட்டிய வழியில் பொருந்தி நின்று தவறாமல் பாதுகாத்து வந்தால் ஆயிரம் ஆண்டுகள் உடலான ஆணி கெடாது விளங்கும்.

867. சிவகலை சகசிரதளத்திற்குச் சென்றபோது தலையில் நாதம் விளங்கும். அந்த நாதத்தில் மகிழ்வுடன் சிவபெருமான் திகழ்வார். இந்நிலைக்கு முன் கதிரவன் சந்திரன் ஆகியோர் வல்ப்பக்கம் இடப்பக்கம் சிறிய் தீப ஒளிபோல் திகழ்வர். சூரியன் புறப்படுமுன் சங்கின் ஓசை மக்களை எழுப்புவதுபோல் ஞானப்பகலவன் தோன்றுமுன் நாதம் முன்னே திகழும்.

868. சூரியன் சந்திரன் இயக்கத்தால் காலம் கணிக்கப்படும். இருவரும் ஒன்று சேர்ந்த பிரணவ நிலையில் சிவசக்தி தோன்றும். அப்போது அமுதம் பெருகும் அருள் நிலை ஏற்படும். நாத ஒசை செய்பவன் நாதத்துடன் கூடி அண்டத்தில் எல்லையான துவாத சாந்தத்திற்குச் செல்ல அங்கு ஈசனும் நேராய் எதிர்பட்டு இருப்பார்,

869. மணிப்பூரமான கொப்பூழ் தாமரையில் வெளிபட்ட பேரொளியை அடைந்து பிரணவத்தின் உண்மையை எவரும் அறியார். யாராவது பிரணவத்தை அடைந்து பிரண்வத்தை அறிந்தபின் அங்கு அவருக்கு சீவஒளிக்கு முன் சிவஒளி ஒளிர்ந்து இருக்கும்.

870 . பயன் ஏதும் அறியமாட்டாதவர் பிறர் எடுத்துச் சொன்னாலும் தாமே படித்தாலும் அறிந்து கொள்ளார். அவர்கள் அற்வில்லாதவர்கள். சந்திரகலையின் ஆதியையும் முடிவையும் சேர்த்து தி/றம் பெற்றால் இராகு குளிகை போல் மாற்றத்தைச் செய்யும் சிவமும் அங்கு வெளிப்படும்.

871.குண்டலினி சுவதிட்டானத்தில் பொருத்தி சந்திரகலை வளர விடாது விந்து நிக்கம் செய்யும். குண்டலியின் ஆற்றல் தீமைசெய்யும் ம/னிபூரகத்தில் உள்ள சூரியனையும் அசைத்து வெப்பமாக்கிக் கொண்டிருக்கும். குண்டலினியையும் சந்திரனையும் பகைமை நீங்குமாறு சிரசின்மேல் உடனிருக்கச் செய்தால் அருளையுடைய சிவன் யோகியை விட்டு நீங்கமாட்டான்.

872. குண்டலியுடன் சென்ற சந்திரன் சிரசின்மேல் நிற்கும் வரை உறங்காமல் கவனிக்கும். சந்திரன் கீழே இறங்கியபோது உறங்கியும் நன்மையைத் தரும் ஒளியினை மனத்தில் நிலைத்திருக்குமாறு செய்தால் விரிவைச் செய்து சந்திரன் முழுமையாகப் பொருந்தும்.

873. சந்திரன் தலையில் இருக்கும் வரை காலை எழுந்ததும் தூக்கமின்றி தியானம் செய்ய வேண்டும்,. சந்திரன் தலையில் சஞ்சாரம் செய்யும்வரை உறங்காமல் இருந்து தலையைவிட்டுக் கீழ் இறங்கியதும் இதுகாறும் ஒளியைக் கட்டி நிறுத்தியவன் உறங்கலாம்.

874. உழிக்காலத்தை பிரியாது இருக்கும் யோகியர் நாழிகை உதவியுடன் கூற்றுவரின் வாழ்நாளை சொல்லி விடுவர்.. இவர்கள் ஐந்தொழில் செய்யும் சதாசிவ மூர்த்திக்கு இனையாவர். ஆணவம் இல்லது சிவத்தை ஆதாரமாகக் கொண்டு தன் ஒளி பெற்று விளங்குவர்.

875. குளுமையான சந்திரன் உச்சியாகிய வழியில் சென்று சகசிரதளத்தில் உலகத்தவர்கள் மதிக்கின்ற இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உ/ணர்ந்து முழுச்சந்திர மண்டலத்தைக் கண்டபின் அங்கு விளைந்து இருக்கும் அமுதத்தை பருகியபடி இருப்பர்.

876. மேஷம் முதல் கன்னி வரை சூரியனின் ஆறு கலைகள் வளர்வதிலும், அகர உகர மகரம் விந்து, அர்த்தசந்திரன் நிரோதினி ஆகிய ஆறு கலைகள் குறைவதிலும் மூச்சு நான்கு விரற்கடை கழியாமல் பன்னிரண்டுக்கு விரிந்து ஓடி நின்றதை யோகியர் அன்றி யார் அறிவார்.

877. உயிர்குறையும் சந்திரன் நாளாவது விந்து கழியும் வழி. யோகியர்க்கு காமத் தொடர்பு இல்லாததால் விந்து வீனாகாது. மூலாதாரத்தில் கட்டுப்படும். எனவே பிரணவம் இருக்கும் சந்திர மண்டலத்தில் உணர்வைச் செலுத்துங்கள்.

878. சிரசில் வலப்பக்கம் மேஷ ராசி முதல் கன்னி ராசி வரை விளங்கும் சூரியன் கலைகள் ஆறுடன் கீழ் உள்ள மூலாதரத்தில் உள்ள நான்கு கலைகளுடன் கலந்து இருக்கும். அறிவுப் பொருளான சூரியன் அக்கினி கலை பத்துடன் சந்திரன் விளங்கும் துலா முதல் மீன ராசி வரை ஆறிவு பொருந்தியபோது சந்திரன் பௌர்ணமி நாளாகும்.

879. உணர்வால் ஏற்பட்ட விந்து சுரோணிதத்துடன் உறவு கொண்டால் சூரியன் மிக்க ஒளி வீசுவான். சூரியனின் ஆற்றல் குறைந்தால் புணர்ச்சியால் வெளிப்பட்ட விந்து ஒளியாய் சிரசில் விளங்கும். ஒளிமயமான உ?ணர்வும் நுண்ணுடலும் பருவுடலும் ஒன்றாகி நின்றால் ஒளிமயமான உணர்வும் நுண்னுடலும் பருவுடலும் யோகியர்க்கு என்றும் நீங்காது.

880. வெளியே செல்லாத மனம் காற்றுடன் இடப்பக்க மூளையில் பொருந்தி எல்லாவற்றையும் நடத்தும் சிவசங்கின் ஒலியைக் கேட்டு ஐம்புலன்களின் ஆசையில் அடங்கி நிற்கும். இப்படி பிரணவத்தில் கட்டப்படாத யோகியர் அமுதத்தை பருக மாட்டார்.

881. சந்திர மண்டல் ஒளிவெள்ளம் கண்ணினின்று பாய்ந்து விளங்கும் சகசிரதளத்தில் உய்ர்ந்து நிற்பதில் சிவம் சக்தி நாதம் விந்து சீவன் ஐந்தையும் ஒன்றாக்கி மூலாதாரத் தீயை வீணாத் தண்டில் செலுத்தி காண்பவர்க்கு இறப்பு இல்லை. அதனுடன் ஒளி பெருகும் காலமும் இல்லை.

882. அனுபவிக்க வேண்டிய அமுத ஊறலைத் திறந்து பிரபஞ்சக் கலப்பினால் மாற்றம் இல்லாத சூரியன் சந்திரகள் பொருந்திய சகசிரதலத்தை அடைய தெளிந்த நீரினுள் இருப்பதைப் போன்ற உணர்வுடன் சமாதியில் நிலைத்து முடிவில்லாத இன்பத்தை வழங்கும் கண்ணில் இருக்கும் சிவம் உணர்த்தும் வழியில் நின்று மூச்சின் இயக்கத்தை மாற்றலாம்.

883. கீழ் நோக்குதல் இல்லா சந்திரக் கலையை மாறுபடாமல் போற்றுங்கள். வீணாத் தண்டுடன் சக்சிர தளத்தை அடைந்தால் உடலானது அழியாது. வேண்டிய யோக உபாயங்கள் சிதறாமல் கிடைக்கும். இன்பம் பெருகும்.

#####

Read 2611 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:22
More in this category: « அமுரிதாரணை!
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931527
All
26931527
Your IP: 3.87.209.162
2024-03-28 23:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg