ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
ஒளி!
2681. ஆன்ம ஒளியை அறிந்து நின்றால் உருவமான உடல் நினைவு மறைந்து போகும். மறைந்து போகும் உடல் நினைவு இருக்குமானால் மீண்டும் பிறப்பு வரும். ஆனம ஒளியில் உள்ளம் உணரின் ஒளிமயமாகத் தோன்றும். ஒளியில் தோய்ந்து நிற்க அந்த ஒளி உருகிச் சீவன் விளங்குவான்.
2682. ஆன்மப் பேரொளியை அறிந்து அதில் நிலைபெறும் ஆற்றல் உள்ளவர்க்கு உலகத்தில் உள்ள எட்டுத்திசைகளிலும் தங்கு தடை இல்லாமல் போகும் ஆற்றால் கைவரப்பெறும். அன்னாரின் உள்ளத்தில் அகண்ட ஒளி பரவும். அந்த ஒளி வெளி இருளையும் மாற்ற வல்லது. அது சகசிரதளத் தாமரையில் விளங்கிக் கதிரவன் போன்ற ஒளியைச் செய்யும். மாறான மல இருளைப் போக்கி ஒளியைத் தந்து எம் பெருமான் அவ்விடத்தே பொருந்தி நின்றான்.
2683. பேரொளி மயமான சிவன் ஆனமாவில் விளாங்க ஒளிமயமான அக்கினியும் விரிந்த கதிர்களையுடைய சூரியனும் சந்திரனும் வளம் உடைய ஒளிகளாய் ஆன்மாவில் ஒளிர்ந்தன. வளமை உடைய ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன என்றால் பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாய்க் கொண்டு கலந்து விளங்கியதே காரணம்.
2684. விளங்கும் ஒளியையே திருமேனியாகக் உடைய சிவன் ஒரு போதும் பிறவி எடுக்காதவன். விளங்கும் ஒளியையுடைய சூரியனும் சந்திரனும் அவனுடைய க்ண்கள். வளம் மிக்க ஞான ஒளியை வீசுவதான அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் ஆகும். இப்படி விளக்கமான ஒளியைத் தரும் மூன்றும் ஞானியர் உடலில் அமையும்.
2685. தலையின்மேல் உள்ள வானம் ஒளிமயமானது. அதன் கீழ் உள்ள காற்று ஒளிமயமானது. பால் உணர்ச்சியை தரும் மூலாக்கினி கீழே இருக்கின்ற வானத்தில் பரந்த ஒளியாக உள்ளது. நீரை முகமாக உடைய அபானனை நீண்டு உணர்ந்து போகும் வீணாத்தண்டின் ஊடே சுழுமுனைக்குச் செலுத்தினால் மேலான நிலஒளி நீர் ஒளி நெருப்பொளி தீயான காற்றொளி வான் ஒளி என்னும் ஐந்தும் ஒரே ஒளிமயமாய்த் திகழும்.
2686. மின்னலைப் போன்ற தூய ஒளி மாட்சிமையுடைய செந்நிற ஒளி வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் ஆன்மாவின் ஒளி ஆறு ஆதாரங்களில் பொருந்திய ஒளி என்னும் இவற்றை தூய மொழியான சிற்சத்தி நாள்தோறும் சீவனின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒரே பேரொளியாய் அமைத்துத்தருவாள்.
2687. விளங்கும் ஒளி மின்னல் ஒளிபோல் ஆன்மாவில் மறைந்து ஒளிர்கின்ற ஒளியான ஈசனை இடைவிடாமல் சிந்தியுங்கள் அப்போது உள்ளத்தை இடமாகக் கொண்டவன் உடலில் விளங்கிப் பிராண சத்தியாய் வளத்தைத் தருபவனாய் எங்கும் பொருந்தி நின்று அருள் செய்வான்.
2688. விளங்கும் ஒளியான ஆன்மா தன் உண்மை அறியாது அறியாமையான இருளில் அழுந்தும், பிரகாசமான ஒளியுடைய சிவன் வழிபடுபவர்க்கு ஒளியைப் பெருக்கி விளங்குவான். உப்பு நீர் பாயும் வழியில் வெளிப்படுத்தும் நஞ்சை அமுதமாய் ஏற்றுப் பொருந்தும் சுழுத்தை இடமாகக் கொண்ட இறைவனின் இயல்பு அப்படி மாறச் செய்வதேயாகும்.
2689. இயல்பாய் பேரொளியாய் விளங்கியது எதுவோ அதுவே சிவம் ஆகும். சிவத்தின் சத்தியும் அங்ஙனமே ஒளிமயமாய்ச் சிவத்தின் விருப்பத்துக்கு ஏற்பச் செயலை செய்து முடிப்பாள். சத்தி ஆற்றலில் விளங்கும் நீங்கள் சூரியன் சந்திரன் அக்கினி என்ற மூன்றும் விரிந்த சுடராக விளங்கி மனத்தில் அவை ஒன்றாகி அந்த ஒளியில் சிவனும் உடன் நின்று அருள் செய்தான்.
2690. உள்ள மண்டலத்தில் விளங்கும் ஒளி எனது நுண்னுடலில் உள்ள சீவனேயாகும். அந்த ஒளிக்குள் ஒளியாய் விளங்கும் சீவனை விட்டு விலகாத மாணிக்கம் போன்ற பேரொளி மின்னல் ஒளிபோல் மின்னி வானத்தை அடைந்து அங்கு வளம் செய்யும் ஒளியாம் சீவ ஒளிக்கிரணச் சமூகத்துடன் கலந்து நின்றான்.
2691. விளங்கும் ஒளியுடைய விகிர்தனான சிவன் முன்பு மிக்க ஒளியுடன் கூடிய மாயையுள் வலிய இருள் பொருந்தாதபடி களங்கத்துடன் கூடிய இருளில் சிவன் நடிக்க விளங்கும் ஒளியிலே மன மண்டலத்தில் விளங்கி நின்றான்.
2692. ஞானப் பயிற்சியால் ஆதியான பரம் பொருளைத் தேவர் தலைவனான உருத்திர சோதியுடனும் தலையின் உச்சியில் விளங்கும் சகசிரதள மலரில் போய் அடைந்தவர் ஆன்மப் பேரொளியும் அண்டத்தில் அப்பால் உள்ள பேரொளி பிழம்பும் ஆவர். இம்முறையில் ஆதியான பரம் பொருள் சீவர்களை மாயையினின்று கடக்கச் செய்யும்.
2693. உலகுக்குக் காரணமானவன் ஒருவன் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லும் கொளகை உடையவர் உலகத்தில் உண்டு. ஆன்மாவுக்கு மேலான ஒன்று பழமையில் இல்லை. எனக் கூறுபவர்க்கு மேலான சிவகதி இருக்கக் கூடுமோ. அங்ஙனம் இருப்பதைக் கண்டதில்லை என்று கூறுபவருங்கூட அறிய வேண்டும் என்று எண்ணம் ஏற்படின் வான்மயமான தில்லையான மனமண்டலத்தில் விளக்கமான ஒளியாய் இறைவன் விளங்குவதைக் காணலாம்.
2694. சுடர் பொருந்துமாறு உயர்வான் ஒண்மையான ஒளிவடிவாய்ப் பயிற்சியாளனின் அக நோக்கத்தில் படர்ந்து விரிந்து சூரியன் போல் இறைவன் காட்சி தருவான். அந்த ஒளியால் அடர்ந்துள்ள மாயையின் இருளை வேறுபடுத்தினால் உடலுடன் கூடியிருந்து ஞானத்தால் பயிற்சியாளன் உலகைத் துறந்தவன் ஆவான்.
2695. ஒளியைத் தரும் பவளம் போன்ற மேனியை உடையவனும் அதன்மேல் வெண்னிற ஒளி படிந்தவனும் புவனம் போன்ற செம்பொன் நிறமுடைய ஆதிப் பிரானும் ஆன சிவன் மூலாதாரத்திலிருந்து களிப்பைத்தரும் பவள நிறத்தவனாக விளங்கிக் கரிய பாச இருளை அகன்று ஒளி பெற்ற பவள நிறம் உடையவனாய் என்னுடன் இருந்தான்.
2696 வான் மண்டலத்தில் இறைவன் இருந்தான். அங்கேயே தேவரும் இருந்தனர். அப்படியிருப்பினும் அவர்கள் ஒளியின்றி மக்களைப் பூமியை நோக்கிச் செலுத்துபவராய் இருக்கின்றனர். இருவினை ஒப்பு வரவே இறைவன் அருளால் பழைய வினையுடன் புதுவினையும் அடியோடு நீங்க மலர் பக்குவமானபோது வெளிப்படும் நறுமணம் போன்று சிவன் வியாபகம் அடைவான்.
2697. தேவர்கள் மக்களை உலகத்தில் செலுத்துபவர் ஆயினும் தேவர்களுக்கும் தலைவனாய்ச் சிவன் உள்ளான். சீவர்களுக்கு முத்தியை அளித்துத் தன்னுடன் பொருந்துமாறு செய்பவன் அவன். அல்லாமல் வேறு எவரும் இல்லை. இந்தப் பெரிய உலகத்தில் அச்சிவமே வான் வடிவில் நிலைபெற்றுள்ளது. அப்போது சீவன் பரவாய் இருக்க எங்கும் பரவுதலும் கூடும்.
#####