ஊர்:ஜனக்புரி,மிதிலாபுரி.மகாதேவிகோயில்
மூலவர்:கண்டாகர்ஷிணி,உமாகருநீலநிறம்-வராகமுகம்-6கரங்கள்.
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:பைரவர்-மஹோதர்,நௌலாகா-சீதைகோயில்.ராமர்,லட்சுமணர்,ஜனகர்,தசரதர்
தி.நே-
சக்திபீடங்கள்-51/20வது-தேவியின் இடது தோள் விழுந்த இடம் சூரிய வம்சத்தில் உதித்த அயோத்தி மன்னனின் 60 புத்திரர்களிலதி மேதாவியான நிமி வைஜயந்தா என்னும் இடத்தில் தன் புஜ பலத்தால் ஒர் அரசை தோற்று வித்தான். பெரும் வேள்வி நடத்த திட்டமிட்ட நிமிக்கு யாகம் நடத்த வாக்கு கொடுத்த வஷிஷ்டர் இந்திரனுக்கு யாகம் நடத்த சென்று காலதாமதம் ஆனதால் கௌதமரை வைத்து யாகம் நடத்தி களைப்பால் தூக்கத்திலிருந்த போது வந்த வஷிஷ்டர் நடந்ததை அறிந்து விதேகனாக-உயிரற்ற உடலாக இருக்க சாபம். விழித்த நிமி சாபத்தை அறிந்து வஷிஷ்டரும் சடலமாகமாற சாபம் இட்டு உயிர் நீத்தான். முனிவர்கள் ஒன்றுகூடி நிமிக்காக யாகம் செய்ய தேவர்கள் மனித உருவில் வாழ அருள். வாழபிடிக்காத நிமி எல்லோருடைய கண்களிலும் நிரந்தரமாக இருக்க விரும்பி வரம் பெற்றான். நிமி எல்லா உயிர்களின் கண்களிலுமுள்ள இமைகளை சிமிட்டி கொண்டிருக்கின்றான். அச்சிமிட்டலால் கூடும் காலம் நிமிடம் ஆனது. நிமி இறந்ததால் முனிவர்கள் நாட்டிற்கு மன்னன் வேண்டி நிமியின் உடலை அரணியிலிட்டு கடைய -மகாபுருஷன் தோன்ற - நிமி தேகம் கட்டைகளால் மிதிக்கப்பட்டு தோன்றியதால்- மிதி என்றும் தலைநகர் மிதிலா எனவும் ஆனது. ஆண் உடலிருந்து உருப்பெற்றதாலும் பெண் கருவிலிருந்து ஜனிக்காததாலும் ஜனகன்- ஜனகவம்சம் ஆனது. விதேகத்திலிருந்து தோன்றியதால் வைதேகன் -அவனது நாடு விதேகம் என்றானது. அட்சய திருதியை தினத்தை ஒட்டி ஏழு நாட்கள் சீதை பிறந்த திருவிழா-மிதிலாபுரியில்.