ஊர்:நகுலேசுவரம்+மு,கீரிமலை
இறைவன்: நகுலேசுவரர்
இறைவி: நகுலாம்பிகை
பிறசன்னதிகள்: பிள்ளையார், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மாகவிஷ்ணு, மகாலட்சுமி, பஞ்ச லிங்கங்கள், நவகிரகங்கள், பைரவர்.துர்க்கை,கந்தசாமிஒருமுகம்-2கரங்கள், வள்ளி, தெய்வானையுடன்
மரம்: நாவல் தீர்:கண்டகி 9நிலைராஜகோபுரம் 6காலபூஜை தி.நே-0630-1300,1600-1900
திரேதாயுகத்தில் பார்வதி நீராடுவதற்கு இப்பகுதில் ஓர் தீர்த்தம்- கண்டகி. இங்கு தேவர்களும் நீராடி புண்னியம் அடைந்தனர்.-புண்ணியபுரம். தற்போது சாகர சங்கமம் எனப்படுவதே அன்றைய கண்டகி தீர்த்தம். தெற்கில் தூய நீர், வடக்கில் உப்பு நீர். அர்ச்சுணன, நளன், முசுகுந்தன் வழிபட்டது. முற்காலத்தில் கீரி முகம் கொண்ட நகுலமுனி இங்கு தீர்த்தமாடி திருதம்பலேஸ்வரரை வழிபட்டு மனித முகத்தை பெற்றார்.-கீரிமலை. திசையுக்ரமச் சோழன் மகள் மாருதபுரவல்லி குதிரை முகத்துடனும் உடல் மெலிவுற்றும் இருந்து இங்கு நகுலமுனியின் ஆலோசனைப்படி சிவபூஜை செய்து அழகு முகம் பெற்று நோய் நீங்கப் பெற்றாள். நகுலமுனி வழிபாடு- நகுலேசர், நகுலாம்பிகை, நகுலேஸ்வரம். நகுலம்-கீரி.
இராவணன் யாழ் ஓசையினால் பெரிதும் கவரப்பட்ட சுசங்கீதன் இராவணனை இராமபாணம் தாக்கியபோது அவன் கையிலிருந்து யாழ் நழுவ அதை எடுத்துக் கொண்டு கீரிமலைவந்த சுசங்கீதன் ஈசனை மனமுருக யாழை வாசித்து தொழ ஈசன் அருள் புரிந்து காட்சி. வீணாபாணம் என்ற நகர் மருவி யாழ்ப்பாணம் ஆனது. திருதம்பலேஸ்வரம் கடலில் மூழ்கியபிறகு 3பிரகாரங்கள் 5நிலை ராஜகோபுரம் கொண்ட கோவில் 1621-ல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக் கீசியரால் இடிக்கப்பட்டது, ஆறுமுக நாவலர் எடுத்த முயற்சியால் 1878-ல் ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த கோவில் 1918-ல் தீக்கிரையானது. பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1953,1973 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் 1990-ல் போர் விமானம் குண்டில் அழிந்தது. மனம் தலராமல் அடியார்கள் புணரமைப்பு செய்து உள்ளனர். 108' உயர ராஜகோபுரம்.