ஊர்:உகந்தை,உன்னரககிரி,ஓம்ஸ்கந்தகிரி
மூலவர்:முருகன் அருவுருவாக
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: விநாயகர் சன்னியாசிமலைஅடிவாரத்தில். வள்ளிகிரியில் வள்ளி, சக்திகிரியில் சக்திவேல் அருள்,
தீர்-7சுனைகள். சரவணப்பொய்கை-பாபநாசச்சுனை முக்கியமானது இரண்டு பிரஹாரங்கள்
தி.நே-
இது எமக்கு உகந்தது என அமர்ந்ததால் -உகந்தமலை.ஓம்காரஸ்வரூபமான ஸ்கந்தன் கோவில் கொண்டதால் ஓம்ஸ்கந்தகிரி என்றாகி ஓம்கந்தாமலை எனமருவி உகந்தமலை என்றானது. அவல் பிரசாதம். சிவனின் லிங்க மூர்த்தம் தவிர வேறு தெய்வங்களுக்கு அருவுருவ வடிவமில்லை. மூலவரை தரிசிக்கச் சென்றால் இங்கு முருகன் அருவுருவமாக- திரையாக அருள். 7சுனைகள்- நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் தீரும். சரவணப்பொய்கை-பாபநாசச்சுனை வள்ளிகிரி வள்ளியம்மன் முன். சுனைக்கான நீரூற்று வேல் துளைத்த பாதைவழியில் வருகின்றது. பாவங்களை தீர்க்கும் தீர்த்தம். இருகுன்றங்கள்-சக்திகிரி, வள்ளிகிரி. மலைத் திருவிழா சிறப்பு. அவல் பிரசாதம் சிறப்பு. வள்ளிகிரியில் வள்ளி அருள். கடற்கரையை அடையும் சாலை இருமருங்கிலும் சித்தர்கள் சமாதி. கடல் இரைச்சல் அதிகமாயிருக்க வள்ளிக்கு அது துன்பம் தரும் என்பதால் முருகன் கடலரசனை அமைதியாய் இருக்கச்சொன்னதால் அமைதியுடன் கடல். கடலோரத்தில் தோணிமலை, சூரனுடம்பு. முருகனும் வள்ளியும் கதிர்காமத்திலிருந்து வந்த பொன்னாலான ஓடம்- கல்லுருத்தோணியாக கவிழ்ந்த நிலையில். அருகில் இறந்த சூரனின் எஞ்சியிருந்த உடல் சூரனுடம்பு என்று குன்றாக.வள்ளியின் திருமணத்திற்கு வந்த தேவர்கள் தாம்பூலம் தரித்து உமிழ்ந்த எச்சில் தடம் பதிந்த வெத்திலை துப்பின மலை. அடுத்து வள்ளியும் கந்தனும் ஒடிவிளையாடிய பாதச்சுவடுகள் காணும் கல்லுவைக்கும் மலை.மலையின் மறுபுறம் வள்ளி மஞ்சள் தேய்த்து குளித்த மஞ்சள்நீர் வழிந்தோடிய தடம். உகந்தை மலையை அடைய சன்னியாசிமலை மற்றும் பாணமை கிராமத்தைத் தாண்டி செல்லவேண்டும். இராவணன் சீதையை கவர்ந்து சென்றபோது இலங்கையின் அழகை ரசித்த சீதா இப்பகுதியில் மீண்டும் கால் பதிக்க விரும்பி குழந்தையாக போழையொன்றில் கடலில் மிதந்து வந்து மன்னரின் மகளாக- ஆடகசௌந்திரி எனப்பட்டவள் குழந்தையாக கலகலவென சிரித்த இடம் பாலாநகை என்றாகி பாணமை என்றானது. உகந்தையில் வள்ளியை மணந்து கதிர்காமத்தில் தங்கியதை அறிந்த தெய்வானை, சன்னியாசி சித்தர், கோங்கட்டிச் சித்தர், கல்யாணகிரி சித்தர் ஆகிய 3 பேரை அனுப்பி கந்தனை அழைத்துவரச் சொல்ல அவர்கள் உகந்தை அழகில் மயங்கி இங்கேயே தங்கி வழிபட்டு சமாதி ஆனார்.- சன்னியாசிமலை. அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்றத் தலம். உற்சவம் கதிர்காமத்துடன் இணைந்தது.