ஊர்:நல்லூர்
மூலவர்: கந்தசாமி-வேல்வடிவில்
இறைவன்:
இறைவி: உ: ஆறுமுகன்
பிறசன்னதிகள்: நடராஜர்,தண்டபாணி கோவில் வெளிவீதியில்
5நிலைராஜகோபுரம்
தீர்: குளம் தேர்திருவிழா-8கோணவடிவசித்ரதேர்
ஆறுகாலபூஜை தி.நே-0600-1200,1600-2000
சோழகுலத்தில் வந்த குலங்கை ஆர்யன் யாழ்ப்பாணத்தை ஆண்டான். அவன் அமைச்சன் புவனேகபாகுவின் ஆலோசனையின்பேரில் வேலவன் கோவில் கட்டப்பட்டது. 1450-ல் அனுராதபுரத்திலிருந்து படையெடுத்த பராக்ரமபாகுவின் தளபதியால் சிதைக்கப்பட்டு 1457-ல் புதுப்பிக்கப்பட்டது. 1749-ல் அரசின் அனுமதியுடன் புதுப்பித்துக் கட்டப்பட்ட கோவிலே இன்றும் அருள் வழங்குகின்றது.
உரிய நேரத்தில் தொடங்கி யாருக்கும் காத்திராமல் நைமித்ய பூஜைகள் நடக்கும். நேரம் தவறாமல் மணியோசை, குறித்த நேரத்தில் தேர் இழுப்பது போன்ற அட்டவணை தவறாத முறை கடைபிடிக்கப்படும் கோவில். அழகிய கிழக்கு வாசல் கோபுரம். மூலஸ்தானத்தில் சக்திவேல் பிரதிஷ்டை. ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமான அலங்காரம். ஆடிக் கிருத்திகை-ஜூலை, ஆகஸ்ட் மாத உற்சவம்28 நாட்கள் மிகப்பிரசித்தம்.