ஊர்: கொழும்பு
மூலவர்:
இறைவன்: பொன்னம்பலவானேஸ்வரர்
இறைவி: சிவகாமசுந்தரி
உ:
பிறசன்னதிகள்: மூலப்பிள்ளையார், சோமாஸ்கந்தர், நடராஜர், பார்வதி, பஞ்சலிங்கங்கள், விஷ்ணு, சுரமண்யர்-வள்ளி தெய்வானை, சண்முகர், சொர்ணபைரவர்
ஐந்து நிலைஇராஜகோபுரம் மரம்: மகிழம்.
தீர்: சுவர்ண புஷ்கரணி
ஆறுகாலபூஜை தி.நே-0530-1200,17-2000
ஈசன்மீது கொண்ட பக்தியால் தென்னாட்டுத் தலங்களுக்குச் சென்று திரும்பியவர் கொழும்பில் சிவனுக்கு ஓர் கோவில் கட்டி 1857-ல் கும்பாபிஷேகம் நடத்தினார். அவரது பெயராலேயே இறைவன் திருநாமம் பொன்னம்பலேஸ்வரர் எனப்பட்டது. அவர் மறைவிற்குப்பின் அவர் மகன் ராமநாதன் கோவில் பொறுப்பேற்று தென்னாட்டுக் கோவில்களுக்கு யாத்திரை வந்து தென்னாட்டில் இருப்பது போன்றே தன் தந்தை கட்டிய கோவிலை புனரமைத்தார். கருவறைக்குமுன் விதானத்தில் 12 இராசி சிற்பங்களும் அம்பாளுக்கு எதிரே ஸ்ரீசக்ரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஒளி வெள்ளத்தில் ஆலயம் பிரகாசிப்பது சிறப்பு. தூண்களில் ஈசன் ரிஷபவாகனத்தில் அம்பாளுடன், அர்த்தநாரீஸ்வரர், சந்தானகோபால கிருஷ்ணன், அன்னம், மயில், தெய்வ உருவங்கள் சிறப்பு. கோசாலை சிறப்புடன் பராமரிக்கப்படுகிறது. தினசரி காலை மாலை 7மணிக்கு நித்ய உற்சவம். பங்குனி மகோ உற்சவம் 10 நாட்கள்.