ஊர்:அஹோபிலம்.தி.தே-105சிங்கவேள்குன்றம்,கருடாசலம்,கருடாத்ரி.
இறைவன்:1.அசலாசலமேரு-ஜ்வாலாநரசிம்மர்-8கரங்கள்-இடதுகால் மடக்கி வலதுகால் தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் கோலம்,தீர்:பவநாசினி, ரத்த குண்டம்(குளம்),(அகோபிலம்-மேல்அகோபிலம்-8+5),
2.அகோபிலநரசிம்மர்(சு),உக்ரநரசிம்மர்,இறைவி:செஞ்சுலட்சுமிதாயார்-பத்மாசனத்தில்,உ:அஹோபிலநரசிம்மர்,லட்சுமி,எதிரில்-பிரகலாதன்,குகைபோன்ற அமைப்பு-3நிலைராஜகோபுரம்.தீர்:பவநாசினி,(அகோபிலம்-மேல்அகோபிலம்-8),
3.வேதாத்திரி பர்வதம்-தீர்:கனகபாயா ஆற்றின் கரையில்-மாலோலன்-தனிகுகை இறைவி:மகாலட்சுமி(அகோபிலம்-மேல்அகோபிலம்-8+1.5),
4.வராகநரசிம்மர்-சிறுகுகையில்,தீர்:பவநாசினி,(அகோபிலம்-மேல்அகோபிலம்-8+1),
5.காரஞ்ச-ராகவசிம்மம்-வில் ஆயுதம் தரித்து(அகோபிலம்-7,மேல்அகோபிலம்-1), இடதுபக்கம் ஆஞ்சநேயர்.
6.பார்க்கவநரசிம்மர்,தீ:அஷய(குளம்)(கீழ்அகோபிலம்-2) தசாவதாரத்தோற்றம்,பரசுராமர்,பிரகலாதன்.மகாவிஷ்ணு,
7.யோகானந்தநரசிம்மர்(கீழ்அகோபிலம்-3),
8.சத்ரவட நரசிம்மர்,ஆஹா,ஊஹூ கந்தர்வர்கள்.(கீழ்அகோபிலம்-2),
9.பாவனநரசிம்மர்- இறைவி:செஞ்சுலட்சுமி(மேல்அகோபிலம்-7).
10.உக்ரஸ்தம்பம்-மேல்அகோபிலம்-6,
11.பிரகலாதமெட்டு-(மேல்அகோபிலம்-2.5),
12.கீழ்அஹோபிலம்-லட்சுமிநரசிம்மன்-வீற்றிருந்தகோலம்.5நிலைராஜகோபுரம். 3பிரஹாரங்கள்.தீர்:புஷ்கரணி-குளம்(அகோபிலம்-கீழ்அகோபிலம்-1),உ:பிரகலாதவரதர் ஸ்ரீதேவி,பூதேவி, திருப்பதி வெங்கடாஜலபதி திருமணத்திற்கு முன் இங்கு வந்து ஆசி.-தனி சன்னதி.ஆண்டாள், ஆழ்வார்கள். மகாலட்சுமி
தீர்-இந்திர,நரசிம்ம,பாபநாச,பார்க்கவ,கஜ,
தி.நே-0700-1200,1600-1900
01-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
அஹொபில மடத்தின் தொலைபேசி-08519-252025,252045
அஹோ- சிம்மம், பிலம்- குகை. கருடனுக்கு நரசிம்ம அவதாரத்தின் 9தத்துவங்களை அர்ச்சா ரூபமாக 9கோலங்களில் காட்டிய தலம். பிரகலாதனின் வேண்டு கோளின்படி இரண்ய கசிபுவை ஆளரி- மனித உடல், சிங்க முகம்-எடுத்து வதம். பிள்ளைப்பேறு வேண்டி மாவிளக்கு ஏற்றி வழிபாடு. பூமியில்-30'. மேலே85' ஒரே கல்லாலான ஜெயஸ்தூபம்.
1.ஜ்வாலநரசிம்மர்-கருடாசலம், வேதாசலம் என்ற மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் அசலாசல மேருவில் ஜ்வாலா நரசிம்மர் ஆலயம். 3விக்கிரகங்கள். நடுவில் உக்கிரசொரூப நரசிம்மர் ஹிரன்யனை வதம் செய்யும் கோலம். வலது இரணியன் காட்டிய தூண் பிளந்து நரசிம்மராக தோன்றிய இடம். இடது நரசிம்மர் ஹிரண்யனுடன் போர்க் கோலம். வதம் முடிந்து ரத்தத்தை கழுவியதால் தீர்த்தம் சிவப்பாகவும் கையில் வெள்ளையாகவும் தெரியும்-ரத்த குண்டம். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்கள் தொல்லை தீர வழிபாடு. ஸ்ரீமாத மிருத்யுஞ்சர்-என அழைக்கப்படும் இவர் சனிபகவானின் தோஷங்களைப் போக்குபவர்.
2.அஹோபில நரசிம்மர்-உக்கிர மூர்த்தி வதம் முடிந்ததும் தேவர்களுக்கும் கருடனுக்கும் காட்சி-கருடாத்திரி. பிரம்மாவும் தேவர்களும் வழிபட்டது. சீதையைத் தேடிவந்த ராமர் வழிபாடு. ராமர் பூஜித்த லிங்கம் அருகில். ஆதிசங்கரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்து இங்கே லஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் பாடி இழந்த கையைப் பெற்றார். ஆதிசங்கரர் சுதர்ஷ்ண சக்கரம் பிரதிஷ்டை வழிபாடு. சுக்கிர தோஷத்தால் ஏற்படும் துன்பங்களை நீக்குபவர்.
3.மாலோல நரசிம்மர், மா-இலக்குமி, லோலன்-விஷ்ணு, இடது மடியில் அன்னை. வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலை. பிரகலாத குகை-சிறப்பு. நவ மூர்த்திகளில் இந்த மூர்த்தியை முன்மாதிரி வைத்து உற்சவமூர்த்தி அமைக்கப்பட்டுள்ளார். செவ்வாய் கிரக தோழங்களை நீக்குபவர்.
4.க்ரேட(வராக) நரசிம்மர். சிறுகுகை, சகல கலைகள், இயல், இசை, நாடகத்துறைகள், வாசனாதி திரவியங்கள், மந்திரசித்தி, நவரத்தின, கனகாபரணங்கள், நல்ல செழிப்பான இல்லங்களில் வாழும் பாக்கியம் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களை அருள்பவர். குரு தோஷ நிவர்த்திக்கு வழிபாடு.
5.கரஞ்சநரசிம்மர்- ஆஞ்சநேயர் கருங்காலி-கரஞ்ச மரத்தினடியில் தவம்- அழகிய சிங்கராக நரசிம்மர் காட்சி-நான் வேண்டியது ஸ்ரீராமரின் தரிசனத்தை, சிங்கமுகத்துடன் நீ யார்! எனக் கேட்க இது நரசிம்மர் சேத்திரம். இங்கு என்னைத்தான் தரிசிக்க முடியும். நானும் ராமனும் ஒன்றே என்றார். ஆஞ்சநேயருக்கு திருப்தி ஏற்படவில்லை ஆதலால் ஸ்ரீராமனைப்போல் வில்லை ஆயுதமாகத் தரித்து சிறப்பு தரிசனம். கேது தோஷங்களை நீக்கி ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி அருள்பவர்.
6.பார்கவ நரசிம்மர்- சிறிய குன்று-130 படிகள், படிகள் தொடங்குமிடத்தில் குளம்-அக்ஷ்யதீர்த்தம். பார்கவ ராமர் எனப்படும் பரசுராமர் தீர்த்த யாத்திரையின் போது தசாவதாரக் காட்சி அருள். சகல பாவங்கள் நீங்க, கற்பனைத்திறன், எழுத்தாற்றல், கவிதை, குடும்பத்தில் மகிழ்வு, கவலையில்லா மனம், நோயற்ற வாழ்வு ஆகியவற்றிற்கு வழிபாடு. சந்திர கிரக தோஷ நிவர்த்தி.
7.யோகானந்த நரசிம்மர்-ஹிரன்ய வதம் முடிந்ததும் பிரகலாதனுக்கு நரசிம்மர் யோக முத்திரைகளைக் கற்பித்தார். புதன் கிரக தோஷங்களை நீக்குபவர்.
8.சத்ரவட நரசிம்மர்-6கால் முக மண்டபம், தூண்களில் ஆஞ்சநேயர், நரசிம்மர் சிற்பங்கள். அகோபில நரசிம்மர்களில் சுந்தர ரூபர். சத்ர-குடை, வடம்-ஆலம், ஆலமரத்தடையில் வீற்ற நிலையில் காட்சி. உக்கிர நிலையில் இருந்த நரசிம்மரை அமைதிப்படுத்த ஆஹா, ஊஹு என்ற கந்தர்வர்கள் இசைக்க நரசிம்மர் தொடையில் தாளம் போடுகிறார். சூரிய தோஷ நிவர்த்திக்கு வழிபாடு.
9.பாவனநரசிம்மர்-பாவன நதிக்கரையில். கடினமான பயனம். பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்தபோது செஞ்சுலட்சுமி மட்டும் அவரை தரிசித்து நாணத்தால் தலை குனிந்து நின்றதால் இந்த அவதாரத்து துணையாக்கினார். தன் பிரியமான மனைவிற்காக மாமிச உணவு வேட்டை. அன்று முதல் கோழி, சேவல்கள் பலி. ராகு கிரக தோஷங்கள் நீங்க வழிபாடு. ஆதீத கற்பனைகள், தர்மத்திற்குப் புறம்பான கெட்ட எண்ணங்கள் செயல்கள், ஆகியவைகளை தடுத்தாட்கொள்ள வழிபாடு.
10.உக்ரஸ்தம்பம்-மேல்அகோபிலம்-6, 11.பிரகலாதமெட்டு-பிரகலாதன் குருகுலம் பயின்ற இடம், 12.பிரகலாதவரதன், லட்சுமிநரசிம்மன்-வீற்றிருந்தகோலம். ரங்க மண்டபம்- அ6ம் நூற்றாண்டின் அற்புத சிற்பங்கள். மொத்தம் 9நரசிம்மர் கோவில்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)