ஊர்: யாகண்டி,சித்தாநதிஅருகில் ,கீழ் உமாமஹேஸ்வரம்.
இறைவன்: உமாமகேஸ்வரர்(சு)
இறைவி: உமாதேவி
பிறசன்னதிகள்:நந்தி(சு) ,அகத்தியலிங்கம், வெங்கடேஸ்வரர், மகிஷசுரமர்த்தினி, நந்திகேசுவரர்
ராஜகோபுரம்
தீர்- அகத்தியபுஷ்கரணி, சித்தாநதி, ருத்ரதாரை, விஷ்ணுதாரை, பிரம்மதாரை, இந்திரதாரை, தேவதாரை
தி.நே:0700-1100,1700-2000
ஸ்ரீசைலத்தின் வடக்குவாயில் உமாமஹேஸ்வரம். சித்தப்பர் என்ற பக்தருக்கு சிவன் புலிவடிவில் காட்சி. அதை உணர்ந்த பக்தர் நான் சிவனைப் பார்த்தேன் என்று (நேகண்டி, நேகண்டி) என்று கூறியதால் இந்த இடம் யாகண்டி ஆனது. இங்கு வந்த அகத்தியர் ஓர் விஷ்ணு ஆலயம் கட்ட சிற்பி ஒருவரை ஏற்பாடு செய்தார். சிலை முடிவுறும் தறுவாயில் செதுக்கிய வெங்கடேஸ்வரின் கை உடைய வருத்தமுற்ற சிற்பி சிவபார்வதியை மனதில் நிறுத்தி உறங்க கனவில் பார்வதி தோன்றி இந்த இடம் இரண்டாவது கைலாயம் போலுள்ளது. எனவே ஒரே கல்லில் சிவபார்வதி உருவத்தை செதுக்க சொல்லி அந்த கல்லில் புகுந்து மறைந்தாள். சிலை வடிக்கப் பட்டு உமா மகேஸ்வரர் எனப் பெயரிடப்பட்டது. மூலவிக்ரம்(சு) நந்தீச்வரர்(சு) அகத்தியர், பிருங்கி வழிபாடு. அகத்தியர் தவத்தை கெடுத்த காக்காசுரனுக்கு சாபம் கொடுத்ததால் இங்கு காக்கைகள் இல்லை. உடைந்த வெங்கடேஸ்வரர் சிலை வெங்கடேஸ்வரர் குகையில் உள்ளது. ரோல்ல குகையில் அகத்தியர் வழிபட்ட லிங்கம். 120படிகள் ஏறி அகத்தியர் தியானம் செய்த சங்கர் குகையில் லிங்கம். கார்த்திகை திருவிழா. அருகில் வெங்கடேஸ்வர், சங்கர், ஏர்ரமல் குகைகள். 15ம் நூற்றாண்டில் விஜய நகர அரசர்களால் கட்டப்பட்டது. ஹரிஹரர், புக்கர் ஆலய விரிவாக்கம். மலையில் இயற்கையான தீபஸ்தம்பத்தில் மாலை 6மணிக்கு சனிபகவானுக்கு ஆகாச தீபம். உமாதேவிக்கு முன்னாள் ஸ்ரீ சக்கரம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)