ஊர்:செஜர்லா
இறைவன்:கபோதேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்: கருவறைச் சுற்றிலும் சிறு சன்னதிகளில் நிறைய லிங்கங்கள்.நந்தி.
வி-ஹஸ்தபிரஸ்தா
தி.நே-
1500 ஆண்டுகள் பழமை. கபோதம்- புறா. புறாவிற்காக தன் அங்கங்களை அரிந்து கொடுத்த சிபிக்கு லிங்கமாக மாற அருள்-கபோதேஸ்வரர் . மூல லிங்கத்தில் நிறைய பள்ளங்கள். சிபிச்சக்ரவர்த்தி தன் உடல் சதையை அரிந்து கொடுத்ததன் அடையாளம். ஜெசர்லா ஆலய் கருவறை ஹஸ்தி பிரஸ்தா என்ற அமைப்பு.(யானை படுத்திருப்பது போன்றது)
யாயாதி என்ற சக்ரவர்த்தியின் புதல்வர்கள் மேகதம்பரா, ஜூமுதவாகனா, சிபி. மேகதம்பரா தலயாத்திரை புறப்பட்டு பல புனிதத்தலங்களை தரிசித்து செரும் சோர்லா வந்து அங்குள்ள யோகிகளுடன் பழகி உலகைதுறந்து முக்தியடைந்தான். அவன் தவம் காரணமாக அவன் உடல் லிங்க வடிவம் அடைய மக்கள் ஆலயம் எழுப்பி இறைவனுக்கு 'மேகதம்பேஸ்வரா' என வழிபட்டனர். தன் சகோதரனைத்தேடிவந்த ஜூமுதவாகனன் இதே இடத்தில் தானும் தவத்தில் ஆழ்ந்து முக்தியடைந்தான். சிபி சக்ரவர்த்தியாகி தன் சகோதர்களைத் தேடி இங்கு வந்து லிங்க வடிவில் இருக்கக் கண்டு பலயாகங்களைச் செய்தான்.
சிபியின் உண்மையான பக்தியினைச் சோதிக்க மும்மூர்த்திகளும் ரூபண குண்டலா என்ற இடத்திற்கு ஈசன் வேடனாகவும், பிரம்மா அம்பாகவும், பெருமாள் புறாவாகவும் மாறி வந்தனர். புறா தன்னை வேடனிடமிருந்து காப்பாற்ற சிபியின் மடியில் விழ, வேடனுக்கு புறாவுக்குப் பதிலாக தன் அங்கங்களை அரிந்து கொடுத்து கடைசியில் தன்னையே அர்பணித்துக் கொண்ட சிபியை மெச்சி மும்மூர்த்திகளும் லிங்க வடிவமாக அருள்.- கபோதேஸ்வரர்.செஜர்லாவில் காணப்படும் லிங்கங்கள் அனைத்துமே சிபியுடன் வந்த பாதுகாவலர்கல் .அவர்களுக்கும் அதிர்ஷ்டம். அபிஷேகிக்கப்படும் நீர் லிங்கத்தின் மேல் உள்ள குழி துளை வழி எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)