ஊர்:மந்தப்பள்ளி,கோதாவரிகரையில்
இறைவன்:மந்தேஸ்வரர், மண்டேஸ்வரசாமி
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:பிரம்மேஸ்வரர்,ஸ்படிகலிங்கநாகேஸ்வரர்,சேத்திர பாலகர்-வேணுகோபாலமூர்த்தி
3நிலைராஜகோபுரம்
தி.நே-0500-1200,1600-2000, சனிக்கிழமைகளில் காலை 0400-1300, 1600-2000
கைடபனின் மகன்கள் அஸ்வத்தன் அரசமரத்தில மறைந்தும் பிப்பிலன் அந்தணனாக வடிவம் கொண்டும் யாகம் நிறைவு பெரும்போது அந்தணர்களை வதை செய்து யாகத்தை அழிக்க, அங்கு தவம் செய்த சனி பகவானிடம் முறையிட அவர் அந்தணர் வேடம் கொண்டு அவர்களிடம் செல்ல அவர்கள் அவரை விழுங்க தன்சக்தியால் வயிற்றை கிழித்து வெளி வந்தார். அவரை பிரமஹத்தி தோஷம் பிடித்து கொள்ள லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு-சனீஸ்வரர். சனியின் மற்றொரு பெயர் மந்தன் அதனால் இந்த ஈசன் பெயர் மந்தேஸ்வரர், தலம் மந்தப்பள்ளி. பிரம்மா, கார்க்கோடன் பிரதிஷ்டை லிங்கங்கள்- பிரமேஸ்வரா, நாகேஸ்வரா(படிக லிங்கம்). சனிக்கு எதிரில் மந்தேஸ்வரர். கருவறைக்கு வெளியில் வடிகால் போன்ற அமைப்பில் எண்ணெய் விட்டால் அது மந்தேஸ்வரர் சிரசில் அபிஷேகமாக விழும் சிறப்பு. சனிவாரத்தில் அரசமரத்தை வலம் வந்து ஈஸ்வரனை எள் எண்ணெய்யால் (திலதைல) அபிஷேகம் செய்தால் சனிதோஷம் அண்டாது அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். சப்த ரிஷிகளும் அவர்களது மனைவியரும் பிரதிஷ்டை-பார்வதி. சேத்ரபாலர் வேணுகோபாலமூர்த்தி அழகானவர். அவர் முன்னால் உற்சவவிக்ரகம். இது கௌதம மகரிஷியால் பிரதிஷ்டை. கார்த்திகை-லட்சபத்ரி பூஜை சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)