ஊர்: கோபிதலாவ்
மூலவர்:
இறைவன்: கிருஷ்ணர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
கிருஷ்ணபக்தி யாரிடம் அதிகமாக இருக்கின்றது என்பதை அறிய எண்ணிய கிருஷ்ணன் தனக்கு தலைவலி எனச் சொன்னார். அந்த தலைவலி போகவே இல்லை. அங்கு வந்த ரிஷி நாரதர் உண்மைய் உணர்ந்து கிருஷ்ணரிடம் உண்மையான பக்தி கொண்டவரகளின் பாத தூளியை கொண்டுவந்து தடவினால் வலி நீங்கும் என்றார். ருக்மணி சாத்யபாமா இருவரும் பாத தூளியினை பகவான் நெற்றியில் தடவுவதா என மறுத்துவிட்டனர். நாரதர் பிருந்தாவனத்திற்கு ஆட்களை அனுப்ப அங்கிருந்த கோபியர்கள் அனைவரும் வருத்தமுற்று தங்களின் கால்களில் உள்ள தூளியை செர்த்து மூட்டையாகக் கட்டி இங்கு அனுப்பினர். அதை தடவியதும் அவர் தலைவலி நின்றது. கோபியரின் மேன்மை அப்போது புரிந்தது.
உரிய காலம் வந்தது. தன் அவதார நோக்கம் முடிந்ததும் கிருஷ்ணர் வைகுந்தம் சென்றார். அவரைப் பிரிந்த துக்கம் தாளாமல் கோபியர்கள் பதினாறாயிரம் பேரும் துவாரகை அருகில் இருந்த குளத்தில் விழுந்து உயிர் துறந்தனர். அவர்கள் உயிர் தியாகம் செய்த குளம் கோபிதலாவ். குளத்தின் பக்கப் பாறைகள் சந்தன மணம் தருகின்றன். உயிரை மாய்த்த கோபியர்கள் சந்தனமாக மாறினர். இந்தக் குளத்தின் மண்ணிலிருந்துதான் கோபி சந்தனம் தயாரிக்கப்படுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)