ஊர்:சோமநாத்.ஜோ-1/12.பிரகாஸபட்டணம் #
இறைவன்:சோமநாதர்(சு)சோமேஸ்வர்மகாதேவ்
இறைவி: பார்வதி,சந்திரபாகா
பிறசன்னதிகள்: விநாயகர்,அனுமன்,பைரவர்,துர்க்கை,காளி
தீர்-பால்க்சங்கமம்-திரிவேணி(சரஸ்வதி,ஹிரன்யா,கபிலா)அக்னி,சூர்ய,சோமேஸ்வர்குண்ட்.
தி.நே-0800-2130
#-01-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஜோதிர்லிங்கத் தலம்-1/12. 1000 ஆண்டுகள் பழமை. அம்மன் சக்தி பீடங்களில் பிரபாஸா பீடம். ராணி அகல்யாபாய் கட்டிய கோவில்- குறுகிய பாதை வழி படிக்கட்டுகளில் இறங்கினால் பாதாளத்தில் சிவலிங்க தரிசனம். மீண்டும் படிக்கட்டுகளில் ஏறி விஸ்வநாதர், அன்னபூரணி, விநாயகர், காளி, பைரவர், மகிஷாசுரமர்த்தினி தரிசனம். புதிய கோவில் கடற்கரை ஓரத்தில் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. தான் மனந்த 27 பெண்களில் ரோகினியின் மீது அதிக பாசம் கொண்டதால் தட்சனால் சாபமுற்ற சோமன் பிரம்மாவின் ஆலோசனைப்படி கட்டி வழிபாடு. திங்கள்/ சோமனை திருமுடியில் சிவன் சூடிய தலம். தற்போதைய கோவில் 7வது முறை கட்டியது. சந்தனத்தின் நறுமணம் கலந்த புனிதநீர் ஹரிதுவாரிலிருந்தும், காசி பிரயாகையிலிருந்தும் தினமும் கொண்டுவரப்பட்டு அபிஷேகம், சோகங்கள் மாறும். பாவங்கள் ஓடும். சகல பாவங்களும் நீங்க இறப்பிற்குப்பின் முக்தி கிடைக்க வழிபாடு. இரவு ஒளி ஒலிக் காட்சி. கடற்கரையில் ஓரிடத்தில் ஒரு குறிபிட்ட சமயத்தில் சூரிய ஒலியும் சந்திர ஒலியும் பிரகாசிக்கும். ஆதலால் பிரபாசப்பட்டினம். பேரரசன் கஜினி முகமது 17 தடவை சோமநாதபுரத்தைத் தாக்கிப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்று தன் ஊரைச் சொர்க்க புரியாக்கினான். சோமநாத லிங்கத்திற்கு அடியில் வரும் ஒளியின் ரகசியத்தை அறிந்து கொள்ள ஏழுமுறை இக்கோவிலை இடித்து தள்ளியும் அவனால் அதை அறிய முடியாமல் செல்வத்தை மட்டும் கொள்ளையடித்தான். சுதந்திரத்திற்குப்பின் சர்தார் வல்லபாய் படேலின் அரிய முயற்சியால் புதிய கோவில் அமைக்கப்பட்டது. இங்கு 135 சிவன், 5 விஷ்ணு, 25பார்வதி, 16சூரியன், 5விநாயகர் கோவில்களும் உள்ளது.
இங்கு பார்க்கவேண்டியவை.1.சரஸ்வதி,ஹிரன்யா,கபிலா நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமம். 2.சாரதாமடம், 3.சீதாமந்திர், 4.கிருஷ்ணர் பாதுகை, 5.பலராம் குகா. 6.லட்சுமிநாராயன் மந்திர், 7.சூர்யாமந்திர், 8.ஹிங்கலாஜ்மாதஜி குகா,10. ராம்மந்திர், 11.வென்னேஸ்வரர்,12.பாலகங்கேஸ்ஹ்வர், 13.பிரபாஸபட்டினம்., 14.பால்க் தீர்த்தம்,15. சோமநாதர் பழைய கோவில்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)