ஊர்:ஐஹோல், கரியபுரா, அய்யவோல்
மூலவர்:ஸ்ரீதுர்க்கா
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: சாமுண்டிதேவி, நரசிம்மர், சிவனின் பலதிருமேனிகள் தி.நே
சுற்றிலும் 100கனக்கான ஆலயங்கள். அகத்தியர் தென்னாடு வரும்போது இல்வலன், வாதாபி என்ற அரக்கர்கள் அவரைக் கொல்ல நினத்தபோது அகத்தியர் வாதாபி ஜீராணாமி என அவர்களைக் கொன்றது தெரிந்த கதை. அவர்கள் இருந்த இடங்களே தற்போது ஐ ஹோல் என்றும் பாதாமி என்றும் ஐதீகம். பரசுராமர் இங்கு வந்து மலப்பிரபா நதியைக் கண்டு ஐ! ஹோலி எனக் கூவியதால் ஐஹோல். சாளுக்கிய மன்னர்களின் கலைதிறைமையைப் பாராட்டும் ஆலயங்களை 3 பிரிவுகளாக, கொண்டிகுடி(லாட்கான்), காளகநாதா-கூட்டத்தில் 30 ஆலயங்கள், ஹச்சிமல்லிகுடி. பெரும்பாலும் மலப்பிரபா ஆற்றின் கரையில். காளகநாதா-மிகமிக அழகான ஆலயம் ஸ்ரீதுர்க்கா ஆலயம். கோட்டைக்குள்ளே 50 ஆலயங்களும் வெளியே 50 ஆலயங்களும் என எங்கும் ஹொய்சாள, புத்த, ஜைன, திராவிட கோவில்கள். ஹச்சிமல்லி- ஆதிசேஷன்மீது அமர்ந்த பெருமாள், சிவன், நந்தி, பிரம்மா ஆகிய சிலைகள். ஹோண்டா ஆலயவளாகத்தில் 4 கோவில்கள். உமா மகேஸ்வரி ஆலயத்தில் நுனுக்கமான பிரம்மாசிலை. உமாமகேஸ்வரி சிலை நம்மைப் பார்த்து பேசுவதுபோல் அமைப்பு. ராவணபாடி குகை. மணல் குன்று. 6ம் நூற்றாண்டு கோவில். அர்த்தநாரீஸ்வரர், சிவனின் பல்வேறு உருவங்கள், ஜைன, புத்த ஆலயங்கள். மேகுடி ஆலயம் ஒரு சிறிய குன்றின்மேல்-ஜைன ஆலயம். பலதூண்களைக் கொண்ட முகமண்டபம். ஐஹோல் ஆலயங்களில் பெரியது. மேற்கூரையின் மீது நின்றால் ஐஹோலின் அழகு ரசிக்கலாம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)