ஊர்: தொட்டகட்டவள்ளி, அபிநவகோலாப்புரி
மூலவர்: பிரதானகருவறை-ஸ்ரீமகாலக்ஷிமி-கிழக்கு நோக்கி, இடது கருவறை-மகாகாளி-8கரங்கள்,3வது கருவறை ஸ்ரீ விஷ்ணு
இறைவன்: வலது கருவறை- ஸ்ரீபூதநாதேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: மகாகாளி, பஞ்ச துர்க்கைகள்,பாதாள் -வேதாள துவராபாலகர்கள். காலபைரவர்
9நிலை ராஜகோபுரம். மரம்:
தீர்: ஏரி
தி.நே-0730-1130,1530-1800
விஷ்ணுவர்த்தன் ஆட்சியில் வைரவியாபாரி குல்லஹன ரஹூதா- மனைவி சஹாஜாதேவி கட்டிய கோவில்.
தலவரலாறு: அமுதம் வேண்டி தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்த போது அதில் தோன்றிய உச்சிரவைஸ்சஸ் என்ற குதிரையின் மீது சூரிய மைந்தன் அமர்ந்து வைகுந்தம் வந்தபோது அதன் அழகில் மயங்கிய திருமகள் திருமால் பேச்சைக் கவனிக்கவில்லை. புரவியின் மீது மோகங்கொண்ட நீ புரவியாக பூலோகத்தில் பிறப்பாயாக என்றார் விஷ்ணு. பூ உலகில் காளைத்தி நதியும் தமசா நதியும் சங்கமித்த இடத்தின் அருகில் உள்ள காடுகளில் பெண் புரவியாக வடிவெடுத்து சிவனை நோக்கித் தவம் செய்துவந்தாள். சிவன் தோன்றி புத்திர வரம் அளித்தார். உரிய காலத்தில் விஷ்ணு ஆண் குதிரையாக உருவெடுத்து இங்கு வர உச்சிரவைஸ்சஸ் குதிரையைவிட இந்தக் குதிரைமேல் அதிக மோகங்கொண்டார். ஏகவீரன் என்ற குழந்தை பிறக்க சக்தியை வழிபட்டு சுய உருவை அடைந்தனர். சிவனும் விஷ்ணுவும் வடிவங்கள் வேறாக இருந்தாலும் ஒரே சக்தியின் இரு வெளிப்பாடுகள் என்ற உன்மையை மகாலட்சுமி உணர்ந்ததை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது இக் கோவில்.
லிங்க சன்னதியின் வாயிலில் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை ஆகியோரின் சிறபங்கள் சிறப்பு. எதிரில் மகாலட்சுமி சன்னதி. லட்சுமிக்கு வலது புறச் சன்னதியில் இருந்த விஷ்ணுவின் சிலை ஆங்கிலேயர் காலத்தில் அபகரிக்கப் பட்டதால் அங்கு காலபைரவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. உள் கூரைகளில் தாமரையில் வீணா சரஸ்வதி, ஆடு வாகனத்தில் அக்னி, மான் வாகனத்தில் வாயு, குதிரைமீது குபேரன், வருணன், விஷக் கன்னி, சர்பக்கன்னி என்ற சிறப்பான வேலைப்பாடுகள்.
18தூண்கள் உள்ள நவரங்கா மண்டபத்தின் உத்திரத்தில் தாண்டவ சிவன், திக்பாலகர்கள் சிற்பங்கள். நான்கு கருவறைகள்.
விஷ்ணு வர்த்தனின் தளபதி ஹுல்லன் ராவுத்தா இந்த ஆலயத்தை நிர்மானித்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)