ஊர்: ஹம்பி,துங்கை நதிக்கரை-
மூலவர்: ஸ்ரீ ஆஞ்சநேயர்-பதும ஆசனத்தில்-யோக நிஷ்டை
இறைவன்:
இறைவி:
தாயார்: உ:
பிறசன்னதிகள்: நாகர்கள்
மரம்:
தீர்: சக்கர தீர்த்தம்
தி.நே-0700-1700
விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில். ராகவேந்திரர் தரிசனம் செய்த கோவில்.
அறுங்கோணத்தின் நடிவில் அஞ்சனை மைந்தன். அவரைச் சுற்றி பன்னிரண்டு குரங்கு உருவம் ஒன்றின் வாலை ஒன்று பிடித்தபடி. இது வியாச தீர்த்தர் அனுமன் உருவத்தை வரைந்த நாட்களைக் குறிக்கும். மந்திர அட்சரங்களும் குறிக்கப் பட்டுள்ளன்.
தலவரலாறு: தேவலோக இசைப்பாடகன் கவந்தன் இந்திரனின் சாபத்திற்கு ஆளாகி தலையில்லா கோர உருவம் அடைந்து காட்டில் கண்ணில் படுபவர்களை கொன்று திண்ணு வந்தவன் சீதையைத்தேடி வந்த இராம லட்சுமணனைத் தாக்க அவர்களால் மாண்டான். சுய உருவம் அடைந்தவன் ஆலோசனைப்படி சூரிய புத்திரன் சுக்கிரீவனைத் தேடி ரிஷ்யமுக மலை -கிஷ்கிந்தையில் தன் மனைவியைக் கவர்ந்த சகோதரன் இந்திரன் மகன் வாலிக்குப் பயந்து மறைந்து இருந்த சுக்கிரீவனின் தூதுவன் அனுமனைக் கண்டனர்.
கிருஷ்ண தேவராயரின் குரு வியாசராஜ தீர்த்தர் துங்கபத்ரா நதிக்கரையில் அமர்ந்து தியானம் செய்தபோது வித்தியாசமான அனுமன் தோற்றம் தோன்றவே அவர் அந்த உருவத்தை பாறையில் வரைய அது பாறையிலிருந்து குதித்து ஓடி மறைந்தது. 12 நாட்கள் மீண்டும் மீண்டும் வரைய அப்படியே குதித்து மறைந்தது. வீட்டிற்கு வந்து மாருதியை வணங்க கனவில் வந்து சக்திவாய்ந்த ய்ந்ரோ தாரக அனுமன் ஸ்தோத்திரம் சொல்ல அதை அந்த பாறையில் எழுத அந்த இடமே கோவில் ஆனது. முதலில் அனுமன் இராமரை சந்தித்தது அந்த இடத்தில்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)