ஊர்:சிருங்கேரி#,ரிஷ்யசிருங்ககிரி, துங்காநதிக்கரை
மூலவர்: 3.ஸ்ரீசாரதாம்பாள்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: தோரணகணபதி,துர்க்கா,ராஜராஜேஸ்வரி,மகாமேரு,மலையாளபிரம்ம, சக்தி கணபதி,4.ஆதிசங்கரர்-தனி ஆலயம்,5.மகாவிஷ்ணு-ஜனார்த்தனன்-தனி ஆலயம், ஆஞ்சநேயர், கருடன் துங்கைநதி தென்கரையில் நரசிம்மர். மேற்கு எல்லையில்கெரே ஆஞ்சநேயர். தெற்கில்வனதுர்க்கை, கிழக்கில்காலபைரவர், வடக்கில்காளிகாம்பாள் 3நிலைராஜகோபுரம்
தங்க,வெள்ளிதேர்கள்
தி.நே-06-14,16-20
# 06-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
ரிஷ்யசிருங்கர் வசித்த இடம்-ரிஷ்யசிருங்ககிரி. பெருமாள் வராக உருக்கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிருத்தியபோது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்னிய பூனி அதானால் சிருங்கேரி எனப் பெயர்.
1200 ஆண்டுகளுக்குமுன் துவங்கப்பட்ட சிருங்கேரி சாரதாபீடம் முதன்மையானது. துங்கா நதிக்கரையில் கோவில். ஆதியில் ருஷ்யசிருங்ககிரி-மருவி சிருங்ககிரி ஆகி சிருங்கேரி ஆனது. ஆதியில் ஆதிசங்கரர் சந்தனத்தால் ஆன அம்பாளை எழுந்தருளச் செய்தார். நாளடைவில் சிதிலமானதால் 12வது குரு வித்யாரண்ய மகாசுவாமிகள் தங்கத்தாலான விக்ரகம் பிரதிஷ்டை செய்தார். பின்னர் வந்தவர்கள் பலதிருப்பணிகளைச் செய்தனர். நவரங்க மகாமண்டபம் சிற்ப வேலைப்பட்டுகளுடன் கூடிய தூண்கள் கொண்டது. துர்க்கா, ராஜராஜேஸ்வரி உருவங்கள் துண்களில். 12வது குரு காலத்தில் அந்தணர் ஒருவர் தான் கற்ற வேத சாஸ்திரங்களை மற்றவருக்கு கற்றுக் கொடுக்காமல் கடமை தவறி பிரம்ம ராட்சஸனாக உருவெடுக்க அந்த பாவத்திலிருந்து விடுவிக்கும்படி வித்யாரண்ய சுவாமிகளீடம் வேண்ட அன்னை ஆலயவாசலில் மலையாள பிரம்மா என தங்கி பக்தர்களுக்கு கண்திருஷ்டி பயம் விலக அருள் பாலித்து வருகிறார். சாரதாம்பாள் ஆலத்தின் அருகில் ஜனார்த்தனன் ஆலயம். சாரதாம்பாளின் ஆலயவாசலில் கோதண்டராமசுவாமி வீற்றிருந்து அருள். சிருங்கேரியின் மேற்கு எல்லையில் காவல் தெய்வமாக கெரே ஆஞ்சநேயர். தெற்கில் வனதுர்க்கை, கிழக்கில் காலபைரவர், வடக்கில் காளிகாம்பாள் . சரதாம்பாள் ஆலய வளாகத்தில் ஆதிசங்கரருக்கு ஆலயம். அவரின் வரலாற்று சிறப்புகள் ஆலய சுவர்களில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)