ஊர்:சிருங்கேரி#
இறைவன்:1.வித்யாசங்கர்,சதுர்முக வித்யேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:வித்யாகணபதி, துர்காமகாதேவ், வாகீஸ்வரி வித்யா, துர்க்கை வாயில் புறத்திலும்,பிரம்மா,விஷ்ணு,மகேசன் முப்புறங்களிலும். சுப்ரமண்யர் தனிசன்னதி 2.ஜகத்குருபீடத்தில்-சந்திரமௌளீஸ்வரர், ரத்னகர்பகணபதி, லஷ்மிநரசிம்மர், மகாவிஷ்ணு. இருபுறமும் சங்கரர் மற்றும் சாரதாம்பாள்.
6.மலஹனிகரேஸ்வரர்-தனி ஆலயம்,பவானி அம்மன், துர்க்கை, ஸ்தம்ப கணபதி
தி.நே-06-14,16-20
# 06-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
1200 ஆண்டுகளுக்குமுன் துவங்கப்பட்ட சிருங்கேரி சாரதாபீடம் முதன்மையானது. துங்கா நதிக்கரையில் கோவில். ஆதியில் ருஷ்யசிருங்ககிரி-மருவி சிருங்ககிரி ஆகி சிருங்கேரி ஆனது. ஆதிசங்கரர் கயிலை நாதரிடம் பெற்ற ஸ்படிக லிங்கங்களில்- போகலிங்கம் இங்கு ஸ்தாபித்தார்-சந்திரமௌளீஸ்வரர். 1200 வருடங்களாக பீடத்தின் இருவேளை பூஜையில் ஜகத்குரு செய்கிறார். நரசிம்மவனத்தில் குருநிவாஸ் பூஜை வளாகம்-ஜகத்குருநாதர் தங்குமிடம் மற்றும் சந்திரமௌளீஸ்வரர் பூஜை சன்னதி.
ஹரிஹரபுக்க மன்னர்களால் 700 ஆண்டுகளுக்குமுன் வித்யாசங்கர தீர்த்த மகாசுவாமிகளின் ஜீவசமாதிக்குமேல் அற்புத வேலைப்பாடுகளுடன் கருங்கற்களால் கட்டப்பட்டது வித்யாசங்கர் ஆலயம். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தூண்கள் 12 ராசிகளைக் குறிக்கும். ஒவ்வொரு நாளும் உதிக்கும் சூரியன் கிரணம் அன்றைக்கு என்ன ராசியோ அந்த ராசிக்குரிய தூணில் படுமாறு அமைக்கப்பட்டுள்ள அற்புத வேலைப்பாடு. இந்திய தொலபொருள் துறை பராமரிக்கின்றது.
பஞ்சமகாகணபதிகள்: 1.ஜகத்குரு பூஜையில் இருக்கும் ஸ்படிக ரத்னகர்ப விநாயகர், 2.சாரதாம்பாள் ஆலயத்தில் இருக்கும் சக்தி கணபதி, 3.வித்யா சங்கர் ஆலயத்தில் இருக்கும் வித்யா கணபதி, 4.மடத்தின் முதல் நிலைப்படியில் இருக்கும் தோராணவாயில் கணபதி, 5.மலஹனிகரேஸ்வரர் ஆலயத்தில் தூணில் ஸ்தம்ப கணபதி.
துங்கையின் வடகரையில் சுப்ரமணியர் ஆலயம் மடத்து வாளாகத்துள். சூரிய நாராயணர் துங்கையின் தென் கரையில்.
மடத்திற்கு சற்று வெளியில் ஓர் குன்றின்மேல் மலஹனி கரேஸ்வரர் ஆலயம். காஸ்யபரின் புத்திரர் விபாண்டகமுனி தவமிருந்து மலஹனி கரேஸ்வர லிங்கத்தினுள் ஐக்கியம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)