ஊர்: அத்தியபாடி
மூலவர்:
இறைவன்: ஆதிநாதேஸ்வரர்(சு)
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீநாகதேவதை, ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீமுண்டித்தாய் மரம்:
தீர்: தீர்த்தவாவி.
தி.நே-0700-1200,17-2000
மலைக் கோவில்- 250 படிகள்.
தலவரலாறு: இறைவனின் திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்துச் செல்லும்போது வயதானதால் சிரமப்பட்டு இவ்வளவு உயரத்தில் ஏன் உறைந்தாய் இறைவா என புலம்பிக்கொண்டு சென்று பூஜை முடித்து திரும்பிவரும்போது ஒர் அசரீரி கேட்டது. நீ திரும்பிப் பார்க்காமல் நடந்து செல். நீ திரும்பிப் பார்த்தால் அங்கேயே நான் நிலை கொள்வேன் என்றது. அதன்படி அர்ச்சகர் நடக்க பின்னல் இனிய ஓசை கேட்டுக் கொண்டு இருந்தது. ஓர் இடத்தில் சந்தேகம் வர திரும்பிப் பார்த்தார் அங்கே ஓர் ஒளி பிம்பம் தெரிந்தது. அதை பார்த்த அர்ச்சகர் கல்லாகிப் போனார். இதனால் கோவிலுக்கு பூஜைகள் இல்லாமற்போனது. மக்களும் மறந்தனர். தன் மூத்த புதல்வனை இழந்த பெண்மணி மூங்கில் சேகரிக்க மலைக்குச் சென்றபொது அவரது கத்தி ஒரு கல்லின்மீது பட்டு குருதிவர அத்யா என்று சொல்லி அலறியபடி வந்து அந்த ஊர் மக்களிடம் செல்ல அருகில் தவம் செய்து கொண்டிருந்த மகான் கன்வமகரிஷியின் வழிகாட்டல்படி கோவில் கட்டினர். பிற்காலத்தில் கார்க்காலா ராஜ்ய ராஜ வீரப்ரதாபன் என்ற மன்னன் கோவில் திருப்பணி மேற்கொண்டான். அத்யா என்று முதலில் அழைத்ததால் அத்யபாடி ஊர்பெயரானது. முண்டித்தாய் இந்த ஊர்மக்களின் காவல் தேவதை.கால்நடைகளைக் காப்பவள். ஆஸ்துமா வியாதியால் வருந்திய பட்டமகிஷி சிவ வழிபாடு செய்து குணமானதால் தன் தாலியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். வருடாந்திர உற்சவத்தின்போது அணிகலனிப் பார்க்கலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இகோவில் பிரசாதம் நல்ல பலனை அளிக்கும். தீர்த்தவாவி இறை அபிஷேகத்திற்கு மட்டும் பயன் படுத்தப்படுகின்றது.மூன்றுமுறை நிறம் மாறும். தெனே ஹப்ப என்ற அறுவடைத் திருவிழா ஒரு மாத இரவு முழுவதும் நடைபெறுகின்றது. கருவறை அருகில் ரிஷிவனம்-கன்வமகரிஷி அருப நிலையில் உள்ளதாக ஐதீகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)