ஊர்: குடுப்பு
மூலவர்: அனந்த பத்மநாபர்(நாகராஜர்), சுப்ரமண்யர், மகாவிஷ்ணு
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: கணபதி, ஸ்ரீதேவி, ஐயப்பன், நவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
நாக ஆராதனைக்கு பிரபலமான கோவில்
தலவரலாறு- கேதார் என்பவருக்கு மழலைச் செல்வம் கிட்டவில்லை. வருத்தமுற்றவன் தீர்த்தயாத்திரை சென்ரான். அங்கு பத்ராசரஸ்வதி தீர்த்ததில் ஸ்ருங்க முனிவரைச் சந்தித்து அவர் அலோசனைப்படி அந்த இடத்தில் சுப்ரமண்யரை நோக்கி தவம் செய்ய சுப்ரம்ண்யர் அவருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். அதே சமயம் அவன் மனைவி நாகம் ஒன்று முட்டையிடுவதைக் கண்டு நாகத்திற்கு இருக்கும் அதிர்ஷ்டம்கூட தனக்கு இல்லையே என வருந்தினாள். யாத்திரை முடிந்து வந்த கணவன் சுப்ரமண்யர் தனக்கு அருள் புரிந்ததைக் கூறினான். சிறிது காலத்தில் அவன் மனைவி கருவுற்று பின் மூன்று முட்டைகளை ஈன்றாள். முட்டைகளைக் கண்டு வருத்த முற்றவர்களுக்கு அவை மூன்றும் மாகாவிஷ்ணு, சுப்ரமண்யர் மற்றும் ஆதிசேஷன் என அசரீரி எழுந்தது. அதனால் அம்முட்டைகளை ஒரு வித கொடியால் பின்னப்பட்ட கூடையில்(குடுப்பு) வைத்து பூஜித்துவர முட்டை வைத்திருந்த குடுப்பு சுற்றிலும் புற்றுவளர்ந்தது. கேதார் முக்தி அடைந்தான். அந்த தலம் குடுப்பு என வழங்கப்பட்டது.
வீரபாகு என்ற மன்னன் செய்த தவறுக்கு கைகளை வெட்டிக் கொண்டு கைகளுக்குப் பதிலாக தங்கத்தால் கைகளை செய்து பொருத்திக் கொண்டான். வேட்டைக்குச் சென்ற போது இந்த இடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களைக் கண்டு தானும் அங்கே அமர்ந்து பூஜை செய்ய விஷ்ணு காட்சி கொடுத்து ஓர் இரவுக்குள் கோவில் கட்டினால் உன் கைகள் கிடைக்கும் என்றார். மன்னன் தன் ஆட்களுடன் கருவறையை அமைக்க ஆரம்பித்து செய்து முடிக்க கொஞ்சம் பணி இருக்கும்போது சேவல் கூவ பதைபதைத்து இருந்தவனுக்கு பணிகளை நிறுத்துமாறு அசரீரி கேட்க, மன்னா உன் பக்திக்கு மெச்சினோம் உன் கைகள் உனக்கு கிடைக்கும் என்றது. அவன் கைகள் திரும்பக் கிடைத்ததும் அங்கேயே தங்கி சேவை செய்துவந்தான். பின்பு ஆலயம் விரிவு படுத்தப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)