ஊர்: ஹொசஹொலலு
மூலவர்:ஸ்ரீலஷ்மிநாராயணர்-ஸ்ரீதேவி,பூதேவி, இடது கருவறை-ஸ்ரீவேணுகோபாலர், வலது கருவறையில் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர்.
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி,ஸ்ரீமகிஷாசுரமர்ட்த்தினி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
1240-ல் மன்னர் வீரவல்லாளனால் கட்டப்பட்ட கோவில்.
கோவிலின் சுற்றுச் சுவரில் தசரத மன்னன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தது முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை ராமாயணம் முழுவதையும் சிறபங்களாக செதுக்கப்பட்டுள்ளது- சிறப்பு.
தலவரலாறு: பிரதாப பானு தர்ம நெறிதவறாது ஆட்சி புரிந்து வந்தான். விதி முறைகளை மீறாமல் காட்டில் வேட்டையாடும் போது வழிதவறி தனியாகச் சென்றவன் அசதியால் மயங்கிவிழ அவனை சன்னியாசி ஒருவர் தூக்கிச் சென்று காப்பாற்றினார். மன்னர்கள் மற்றவர்கட்கு தான் யார் என்பதை சொல்லக்கூடாது என்பதால் தான் ஒர் மந்திரி என்றான். கடைசியில் தான் அரசன் என கூற சன்னியாசி நீ உன் தர்மத்தை கடைபிடித்தாய் உனக்கு வேண்டிய வரம் கேள் என்றார். மன்னன் தன்னை போரில் யாரும் வெல்லக்கூடாது என வரம் கேட்க. என் தவவலிமையால் உன்னை உன் அரண்மனைக்கு கொண்டு விடுகின்றேன். நீ ஒருநாளைக்கு ஒரு லட்சம் அடியார்கள் என ஒருவருடம் அன்ன தானம் செய்தால் உன் ஆசை நிறைவேறும் என்றார். ஆனால் அந்த சன்னியாசி தன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டு காட்டில் வாழ்பவன் என்று தெரியாமல் போனது அவரின் துரதிஷ்டம். மன்னரால் போரில் தோற்கடிக்கப்பட்ட மற்றொருவன் காலகேது சமையல் காரனாக வந்து வருடத்தின் கடைசி நாளில் உணவில் நர மாமிசத்தைக் கலந்தான். அங்குவந்த கபட சன்னியாசி அதில் கலந்திருப்பதைச் சொல்ல சாப்பிட்ட அடியவர்கள் அனைவரும் மன்னனும் அவன் குலமும் அசுரர்களாக பிறக்க சாபமிட்டனர். இது உன் தவறு இல்லை யென்றாலும் உன் விதிப்பயன் என்றனர். கபட சன்னியாசி துறவுக் கோலத்தை துறந்து காலகேதுவின் துனையோடு போருக்கு அழைத்து மன்னைக் கொன்றான். இறந்த மன்னன் அந்த சாபத்தின் பயனாக பிரதாப பானுவும் அவனது குலத்தினரும் அடுத்த பிறவியில் அசுரர்களாகப் பிறந்த இராவனனும் அவன் உறவினர்களும் ஆவார்கள்.
3கருவறைகள்- சிறப்பு. நவரங்காவிதான் சிற்ப வேலகள் சிறப்பு-தர்பன சுந்தரி, அனுமன் இளநீர் குடிப்பது, காளிங்க நர்த்தன கிருஷ்ணர், பிப்ரவரி, மார்ச் பிரம்மோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)