ஊர்: தலக்காடு
மூலவர்: ஸ்ரீகீர்த்திநாராயணன்-8அடி உயரம்.,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1117-ம் ஆண்டு கட்டப்பட்ட நட்சத்திர வடிவ பீடத்தின்மீது அமைந்த ஏககூடவகைக் கோவில்.
தலவரலாறு: திருமலைராயனின் மனைவி அலமேலம்மா தன் அணிகலன்களை தாயாருக்கு அணிவித்து பூஜை முடிந்ததும் அதை தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுவாள். அதனால் நகைகளுடன் தாயாரும் தன்னுடன் இருப்பதாக அவள் நினைவு. அவள் கணவன் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பிரதிநிதியாக இருந்து நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் பொறுப்பை தன் மனைவிடம் அளித்தான். .மைசூர் பிரதிநிதி ஸ்ரீரங்கப் பட்டிணத்தை கைப்பற்ற அலமேலம்மா தன் சொந்த ஊரான தலக்காட்டிற்குச் செல்ல அங்கும் அவளைத் துரத்திச் செல்ல மாலங்கி சுழல் நிறைந்து தலக்காடு மணல் மேடாகட்டும், மன்னர் வம்சம் சந்ததி அற்று போகட்டும் என சாபம் கொடுத்து காவிரியில் குதித்து மறைந்தாள். வீரர்களால் அவளையோ நகைகளையோ கைப்பற்ற முடியவில்லை. அந்தவருடம் நடந்த தசரா விழாவின் ஒன்பதாம்நாள் இளவரசன் இறந்தான். கலங்கிய மன்னன் அலமேலம்மாவின் சபம் அறிந்து அவளின் பிரதியை அரண்மனையில் நிருவி வழிபாடு செய்தான். மன்னர் குடும்பம் மட்டும் கலந்து கொள்ளும் பூஜை ஒன்பதாம் நாள் நடைப்பெறும். அவளின் சாபப்படி மாலங்கி சுழல் நிறைந்தும் தலக்காடு மணல் மேடாகியும் மன்னர் வம்சம் ஒரு தலைமுறை விட்டு அடுத்த தலைமுறைக்கு நேரடி வாரிசு இல்லாமல் போனது.
தல, காடு என்ற வேடர்கள் அடர்ந்த வனத்தில் யானைகள் ஒரு மரத்தை வலம் வருவது கண்டு அந்த மரத்தை வெட்ட அதிலிருந்து குருதிவர அசரீரிப்படி அருகிலிருந்த மூலிகைச் செடியின் சாறைப் பிழிந்துவிட குருதி நின்றது. பின்னர் அதிலிருந்து பால் கொட்ட அதை அருந்திய யானைகள் முக்தியடைந்தன. ஒரு சாபத்தால் யானைகளாகப் பிறந்த தேவர்களுக்கு வேடர்களால் சாபவிமோசனம் கிட்டியதால் அந்த இடம் அந்த வேடர்கள் பெயரால் தலக்காடு என்றழைக்கப்பட்டது.
கங்க மன்னர்களின் தலைநகரமான தலக்காட்டை சோழர்கள் வென்று ஐந்து இடங்களில் விஷ்ணு ஆலயங்கள் கட்டினர். அவை 1.தலக்காடு-கீர்த்திநாரயணர்,2. குண்டல்பேட்- விஜயநாரயணர், 3.தொண்டனூர்-தம்பிநாரயணர், 4.பேலூர்-சென்னகேசவர், 5.கதக்-வீரநாரயணர். கோவிகள் ஆகும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)