ஊர்: கொரனஹள்ளி#
மூலவர்: ஸ்ரீமகாலட்சுமி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீதத்தாத்ரேயர், ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீசாரதாம்பா,ஸ்ரீமஞ்சால நாகப்ப-பாம்பு புற்று. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீநவகிரகங்கள்.
மூன்று நிலை ராஜகோபுரம். மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 04-10-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தலவரலாறு: பசுக்களை மேய்த்துவிட்டு குளக்கரையில் நீர் அருந்திக்கொண்டிருந்த அப்பையாவிற்கு நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்னை அழைத்துச் செல்கின்றாயா என்ற குரல் கேட்க அம்மாவிடம் கேட்டுச் சொல்கின்றேன் என்றான். தினமும் இவ்வாறு கேட்டும் மறந்துவிடும் அப்பையா ஒரு நாள் நினைவு வரவேண்டும் என்பதற்காக குளக்கரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து கொண்டு வீடு போய் சேர்ந்ததும் நினைவுடன் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான். அவன் தாயார் நீ யார். என்று கேட்டு, தெய்வம் என்றால் அழைத்துவா என்றாள். அதன்படி நீயார் எனக் கேட்க நான் மாகாலட்சுமி என்று கூறி உன் துண்டை விரித்துப்போட்டுவிட்டு கண்ணை மூடிக்கொள் என்ற குரலுக்குப்பின்னால் நடந்துவரும் கொலுசு சப்தம் கெட்டது. அது நின்றவுடன் கண்விழிக்க பர்த்த லட்சுமியை விக்ரகத்தை எடுத்து வந்து அம்மாவின் அறிவுரைப்படி பூஜித்தான். செல்வம் சேர தான தர்மங்கள் செய்து வந்தான். பூஜையின்போது நாகம் வருவது வழக்கமானது. தன் வீட்டைக் கட்டுவதற்கு வீட்டின் பின்னால் இருந்த பலாமரத்தை வெட்ட அழுகுரல் கேட்டது. அடுத்த நாள் முதல் நாகம் வரவில்லை. நாகத்தை தான் கொன்று விட்டதாக நினைத்த அப்பையா மன் உலைச்சலில் இறைவனடி சேர்ந்தான். அவன் சகோதரன் தோட்டப்பா பூஜைகளைச் செய்தான். தோட்டாதப்பா பூஜைகளைத் தொடர்ந்தாலும் சரியானபடி பூஜைகள் நடைபெறாததால் விக்ரகத்தை குளத்தில் சேர்க்கச் சொன்னாள் அவன் தாய். அன்று இரவு தோட்டப்பா கனவில் இளநீரும் மண்ணும் கலந்து கோவில் கட்டச் சொன்னதால் கோவில் கட்டி வழிபட்டான். தோட்டப்பாவும் இறந்துபோனான். பூஜைகள் நின்றது. சிறிது காலத்திற்குப்பின் கமலம்மா என்ற பெண்மணி கோவிலுக்கு பூஜைகளை இன்றுவரை செய்துவருகின்றாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)