ஊர்:கும்பாஸி+ஆனைகட்டா#
மூலவர்:
இறைவன்: மகாலிங்கேஸ்வரர்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: அருகில் ஆனைகட்டா ஸ்ரீவிநாயகர்
மரம்:
தீர்-சந்திர தீர்த்தம், சூர்ய தீர்த்தம். கிணறு.
தி.நே-0600-2000
# 07-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
கருவரைச் சுவரில் வரலாறு சிறபங்களாக வடிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பாக்ஷி ஜாகா பூஜை- சிறப்பு. இலையால் மூடி தயாரிக்கப்படும் இட்லி இங்கு மூடேபிரசாதம் சிறப்பு.
வரலாறு- சிவனிடம் வரம்பெற்ற கும்பாசுரன் முனிவர்களைத் தொல்லை படுத்தி வந்தான். அந்தப் பகுதியில் இருந்த கௌதமர் ஆசிரமத்திற்கு பாண்டவர்கள் வந்தனர். கௌதமர் அசுரர்களின் தொல்லைப்பற்றி தர்மராஜனிடம் சொல்ல அவர் பீமனை அனுப்பினார். பீமன் கும்பாசுரனுடன் போரிட்டுவந்தான். முடிவு எட்ட முடியாத நிலையில் பீமனுக்கு மட்டும் ஓர் அசரீரி எழுந்தது. அது கும்பாசூரன் சிவனிடம் வரம் வாங்கியவன். அதனால் நீ விநயகரின் உதவியை நாடு என்றது. அதன்படி கஜமுகனை வழிபட யானை உருவில் வந்து அசி என்ற ஆயுதத்தை பீமனுக்கு வழங்கினார். அதன்பின் கும்பாசுரனுடன் போர்புரிந்து அவனை அழித்தார் பீமன். கும்பன் என்ற அசுரனை அசி என்ற ஆயுதத்தால் அழித்ததால் இவ்விடத்திற்கு கும்பாசி எனப் பெயர் வந்தது. யானையாக வந்தவரே சிறு பையனாக பக்தர் கனவில் தோன்றி தன் இருப்பிடத்தை உணர்த்தினார்.
கும்பாசி புண்ணிய தீர்த்தத்தில் நீராடி மகாலிங்கேஸ்வரரை தினசரி தரிசித்துவந்த பக்தரின் கனவில் சிறுவன் ஒருவன் தான் மிகவும் பசியுடன் இருப்பதாகக் கூறி கும்பாசி அழைத்துச் சென்று ஒரு உயர்மான கல் அருகே வந்ததும் மறைந்துவிட்டான். தினமும் பார்க்கும் அந்தக் கல் மறுநாள் அவருக்கு அது கணபதி உருவமாக தோன்றியது, அருகிலிருந்த மரத்திலிருந்து பூக்கள் விழுந்து அர்ச்சிப்பதை உணர்ந்தார். ஒருநாள் பசு ஒன்று அந்தக் கல்மீது பால் பொழிவதைப் பார்த்தவருக்கு கணபதி அந்தக் கல்லில் எழுந்தருளியிருக்கின்றார் என நம்பினார். அன்றிலிருந்து கணபதிக்கும் பூஜைசெய்தார். ஊர்மக்கள் அவருக்கு அங்கே தங்க இடம் ஏற்படுத்திக் கொடுத்தனர். சிறிய கோவிலாக கட்டினார். பிற்காலத்தில் புதிய கோவில் கட்டப்பட்டது.ஆனைகட்டா. ஆனே-யானை,குட்டே-குன்று.
ஆனைகட்டா ரத விழா உற்சவத்தில் விநயகர் இங்கு எழுந்தருளி தந்தையின் ஆசி பெற்று செல்வார். மாகாலிங்கேஸ்வரர் கோவில் கிணற்று நீர் விநாயகர் அபிஷேகத்திற்கு பயன் படுத்த படுகின்றது.
பரசுராமர் ஸ்தாபித்த ஏழு தலங்களில் ஒன்று. கிருதயுகத்தில்-ஹரிஹர க்ஷேத்ரம்.த்ரேதாயுகத்தில்-மதுவன் க்ஷேத்ரம், துவாபர யுகத்தில்-கௌதம் க்ஷேத்ரம், கலியுகத்தில் -கும்பாஸி
வரை படம்: விரிவாக்கு(enlarge)