ஊர்: குரோட சங்கரநாராயணா
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசங்கரநாராயணர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர். ஸ்ரீஉத்பவ லிங்கம்-சிவகேசவர், ஸ்ரீமேகவர்ண முகுந்தன், ஸ்ரீசுவேதவர்ண ஸ்வேதம்பரன், ஸ்ரீகௌரி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீவீரபஞ்சமுகஆஞ்சநேயர். ஸ்ரீகோபாலகிருஷ்ணர், ஸ்ரீசுந்தர சுப்ரமண்யர், ஸ்ரீஐயப்பன்
மரம்:
தீர்: கோடி தீர்த்தம்(குளம்), கருவரையில் சித்தாம்ருத தீர்த்தம். நாகதீர்த்தம், பார்கவதீர்த்தம்
தி.நே-0700-,1800
தலபுராணம்- ஜும்பாசுரனை இந்திரன் கொன்றுவிட அவனது மைந்தர்கள் காராசுரன், ரத்தாசுரன் இருவரும் சிவபெருமானை துதித்து சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து ஐந்து ரூபங்களாக வந்தால்தான் தங்களை அழிக்க முடியும் என வரம் பெற்றனர். இதனால் பலம் பெற்ற அசுரர்களின் துன்பங்கள் தாங்காமல் முனிவர்களும் மக்களும் துயரப்படுவதைக் கண்ட குரோட மகரிஷி தவம் செய்தார். அவருக்குத் துணையாக நான்கு திசைகளிலும் ஜமதக்னி, லோமச, மாண்டவ்ய, அகத்திய முனிவர்களும் தவம் செய்ய அரியும் அரனும் முனிவர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதைக் கேள்விப்பட்ட அசுர சகோதரர்கள் இருவரும் அங்கு வர இருவரையும் சங்கர நாராயணர் ஐந்து ரூபங்களாக தோன்றி வதம் செய்தனர்.
ஐந்து ரூபங்களாக தோன்றிய சங்கரநாராயணர் முச்சட்டு கிராமத்தில்-ஹோலே சங்கர நாராயணர், பைலு கிராமத்தில் மாண்டவி சங்கர நாராயணர், பெல்வே கிராமத்தில் பெல்வே சங்கர் நாராயணர், ஆவர்சே கிராமத்தில் ஆவர்சே சங்கர் நாராயணர் என 50 கி.மீ. சுற்றளவில் ஐந்து கோவில்களும் உள்ளது. ஒரு சிவராத்ரி யன்று தரிசனம் சிறப்பு.
தன் பசுவைத் தேடி சென்ற அந்தனன் அது ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பதைப் பர்த்து அருகில் செல்ல அது ஒரு லிங்கத்தின்மீது ஒரு காலை தூக்கிவைத்து பால் சொரிவதைக் கண்டு அதிசயத்து அவ்வூர் மன்னனிடம் சொல்ல. அவர் கனவிலும் அந்த காட்சி வந்ததால் அந்த இடத்தில் கோவில் கட்டினான். லிங்கங்கள் வருடம் முழுவதும் நீரில்-சித்தாம்ருத தீர்த்தம்.
குரோட நாராயணா என்றழைக்கப்படும் இக்கோவில் இரு மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது.. குரோடா என்றால் இரு மலைப்பகுதியின் மத்திய பாகம் எனப் பொருள். குரோட மகரிஷி தவம் செய்த குகை
அருகில்.திப்புசுல்தான் கானிக்கையாக மணி. மைசூர் மகாராஜா-மான்யங்கள். கோவிலின் முகப்பில் கிரிஜா கல்யாண வைபோகம் சுவர் ஓவியம் சிறப்பு.
ஏழு பரசுராம ஷேத்திரங்களில் ஒன்று.
வரை படம்: விரிவாக்கு(enlarge)